ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.021.திருக்கச்சிமேற்றளி
7.021.திருக்கச்சிமேற்றளி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமேற்றளியீசுவரர்.
தேவியார் - காமாட்சியம்மை.
209 |
நொந்தா வொண்சுடரே நுனை வந்தாய் போயறியாய் சிந்தாய் எந்தைபிரான் திரு எந்தாய் உன்னையல்லால் இனி |
7.021.1 |
அவியாத ஒளிபொருந்திய விளக்குப் போல்பவனே, என் தந்தைக்கும் பெருமானே, கச்சித்திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே, உன்னையே நினைந்திருந்த என் உள்ளத்திலே புகுந்துநின்ற சிந்தனைப் பொருளே, என் உள்ளத்தில் புகுந்த நீ பின் நீங்கியறியாய்; ஆதலின், இனி அடியேன் உன்னையன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன்.
210 |
ஆட்டான் பட்டமையால் அடி கேட்டேன் கேட்பதெல்லாம் பிற சேட்டார் மாளிகைசூழ் திரு மாட்டே யுன்னையல்லால் மகிழ்ந் |
7.021.2 |
பெருமையையுடைய பல மாளிகைகள் சூழ்ந்த கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற என் செல்வமாய் உள்ளவனே, அடியேன் உனக்கு அடிமையாயினமையால், உன் அடியார்க்கு அடியனாகின்ற பேற்றைப் பெற்றேன். அதனால், உன்பால் அடியேன் வேண்டற்பாலன பலவற்றையும் வேண்டி, இறுதியாகப் பிறவாத நிலையை வேண்டியொழிந்தேன். இனி, என் மகிழ்ச்சி மீதூர்வால் உன்னைப் புகழ்தலன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன்.
211 |
மோறாந் தோரொருகால் நினை வேறா வந்தென்னுள்ளம் புக சேறார் தண்கழனித் திரு ஏறே யுன்னையல்லால் இனி |
7.021.3 |
அடியேன் ஓரொருகால் மயக்கம் உற்று உன்னை நினையாதிருப்பினும், நீதானே வந்து என் உள்ளத்தில் புகுந்து நினைப்பிக்கவல்ல உண்மைப் பொருளானவனே. சேறு நிறைந்த குளிர்ந்த கழனிகளையுடைய கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற ஆண் சிங்கம் போல்பவனே. இனி, அடியேன் உன்னையன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன்.
212 |
எற்றால் என்குறைவென் இட பற்றே நுன்னையல்லால் பணிந் |
7.021.4 |
மூன்று மதில்களையும் அழித்தவனே, கச்சித் திரு மேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற துணையானவனே, அடியேன், என்னோடு நெருங்கிய உறவினர் பலர் உளர் என்றும், மற்றும் சுற்றத்தார் பலர் உளர் என்றும் நினைத்து, அவர்கள் தொடர்பிலே பட்டு, உய்ந்து போகமாட்டாது நிற்கின்ற அந்நிலையைத் துறந்து, உன்னையே புகலிடமாக அடைந்தேன். அதனால், இப்பொழுது, எத்தன்மையதான பொருளால், என்ன குறை அடியேனுக்கு இருக்கின்றது? ஒன்றும் இல்லை. என் துன்பங்களையெல்லாம் அடியோடு நீக்கிவிட்டேன். ஆதலின் இனி, உன்னையன்றிப் பிறரைப் பணிந்து புகழ்தலைச் செய்யவே மாட்டேன்.
213 |
எம்மான் எம்மனையென் றவர் மெய்ம்மா லாயினதீர்த் தருள் கைம்மா ஈருரியாய் கன பெம்மான் உன்னையல்லால் பெரி |
7.021.5 |
உடம்பு இடமாக வருகின்ற மயக்கமாயினவற்றை எல்லாம் நீக்கி, மெய்யுணர்வைத் தந்தருளுகின்ற மெய்ப்பொருளாய் உள்ளவனே, யானையை உரித்த தோலை உடையவனே, பெருமை பொருந்திய கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற பெரியோனே, என்னைத் தாங்குகின்ற. 'என் தந்தை' என்றும், 'என் தாய்' என்றும் சொல்லப்பட்டவர்கள் என்னை இங்குத் தனியே வைத்து விட்டு இறந்துவிட்டார்கள்; ஆகவே, இனி, உன்னையன்றிப் பிறரை நான் பெரிய பொருளாக நினைத்துப் புகழவேமாட்டேன்.
214 |
நானேல் உன்னடியே நினைந் ஊனேர் இவ்வுடலம் புகுந் தேனே இன்னமுதே திரு கோனே உன்னையல்லாற் குளிர்ந் |
7.021.6 |
எனது ஒளி பொருந்திய விளக்குப் போன்றவனே, தேன் போன்றவனே, இனிய அமுதம் போன்றவனே, கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, நானோ எனில், உன் திருவடியை அடைய நினைத்தேன்; அங்ஙனம் நினைத்த அளவிலே நீ ஊன் பொருந்திய இவ்வுடலுள்ளே வந்து புகுந்துவிட்டாய்; ஆதலின், இத்தகைய பேரருளாளனாகிய உன்னையல்லது பிறரை அடியேன் உளங்குளிர்ந்து புகழவேமாட்டேன்.
215 |
கையார் வெஞ்சிலைநா ணதன் எய்தாய் மும்மதிலும் மெரி செய்யார் பைங்கமலத் திரு ஐயா உன்னையல்லால் அறிந் |
7.021.7 |
எம் பெருமானே, வயலின்கண் பரவியுள்ள பசிய தாமரைகளையுடைய கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, நீ உன் கையின்கண் பொருந்திய கொடிய வில்லினது நாணின்மேல் அம்பைத் தொடுத்து, மூன்று மதில்களையும் தீ உண்ணும் படி எரித்தாய்; ஆதலின், உன்னையன்றிப் பிறரைத் தேவராக எண்ணிப் புகழவேமாட்டேன்.
216 |
விரையார் கொன்றையினாய் விம உரையேன் நாவதனால் உட திரையார் தண்கழனித் திரு அரையா உன்னையல்லால் அறிந் |
7.021.8 |
நறுமணம் பொருந்திய கொன்றைமாலையை உடையவனே. தூயவனே, அலைகள் நிறைந்த குளிர்ந்த கழனிகளையுடைய கச்சித் திருமேற்றளியின்கண் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, அடியேன். என் உடலில் உயிர் உள்ளவரையிலும் இனி, உன்னையன்றிப் பிறரை, 'தேவர்' என்று என் நாவினாற் சொல்லவும் மாட்டேன்; உன்னையன்றிப் பிறரை உயர்ந்தவராக மதித்துப் புகழவும் மாட்டேன்; இது திண்ணம்.
217 |
நிலையா நின்னடியே நினைந் தலைவா நின்னினையப் பணித் சிலையார் மாமதில்சூழ் திரு மலையே உன்னையல்லால் மகிழ்ந் |
7.021.9 |
சந்திர காந்தக் கற்கள் நிறைந்த பெரிய மதில் சூழ்ந்த கச்சித் திருமேற்றளியின்கண் எழுந்தருளியிருக்கின்ற மலைபோன்றவனே. தலைவனே, அடியேன், உனது திருவடியையே நிலைத்த பொருளாக உணர்ந்தேன்; அவ்வாறு உணர்ந்த அளவிலே அவ்வாறே மாறாது என்றும் உன்னையே உணர்ந்து நிற்குமாறு எனக்கு உன் திருவருளைச் செய்தாய்; அதனால், அடியேன், என், துன்பமெல்லாம் ஒழிந்தவனாயினேன்; ஆகவே, இனி அடியேன், உன்னையன்றிப் பிறரை, மனம் மகிழ்ந்து புகழவேமாட்டேன்.
218 |
பாரூர் பல்லவனூர் மதிற் சீரூ ரும்புறவிற் றிரு ஆரூ ரன்னடியான் அடித் சீரூர் பாடல்வல்லார் சிவ |
7.021.10 |
நிலம் முழுதும் ஆணை செல்கின்ற பல்லவனது அரசிருக்கை ஊராகிய, மதிலை உடைய காஞ்சி மாநகரின்கண் சிறப்புப் பொருந்திய இடத்தில் விளங்கும் திரு மேற்றளியின்கண் உள்ள சிவபெருமானை, திருவாரூர்ப் பெருமானுக்கு அடியவனான அணுக்கத் தொண்டனாம் நம்பியாரூரன் பாடிய, தாள அறுதி பொருந்திய இப் பாடல்களைப் பாடவல்லவர், சிவலோகத்தை அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.021.திருக்கச்சிமேற்றளி , அடியேன், மேற்ற, திரு, எழுந்தருளியிருக்கின்ற, மாட்டேனே, உன்னையன்றிப், ளிஉறையும், கச்சித், தேத்த, பொருந்திய, மாட்டேன், உன்னையல்லால், பிறரை, என்றும், திருமேற்றளியில், பிறரைப், தலைவனே, ஆதலின், போன்றவனே, அதனால், திருக்கச்சிமேற்றளி, திருமுறை, நிறைந்த, புகழவேமாட்டேன், உன்னையே, புகழவே, பதிகங்கள், பெரிய, உடையவனே, தேவாரப், பொருளாக, ஏழாம், ஆகவே, னைதலுமே, திருமேற்றளியின்கண், காஞ்சி, அறிந், அளவிலே, தேன்நி, உளர், நினைந், கழனிகளையுடைய, மகிழ்ந், திருச்சிற்றம்பலம், சூழ்ந்த, யுன்னையல்லால், ஏத்த, உள்ளத்தில், போல்பவனே, விளக்குப், உள்ளவனே, மெய்ப்பொருளே, விட்டு, மூன்று, மதில்களையும், பெருமானே, குளிர்ந்த, தண்கழனித், வந்து, பலர்