ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.078.திருவாலங்காடு
6.078.திருவாலங்காடு
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுவரர்.
தேவியார் - வண்டார்குழலியம்மை.
2860 | ஒன்றா வுலகனைத்து மானார் தாமே நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே |
6.078.1 |
தாமே கலந்து உலகங்கள் யாவும் ஆனவரும், ஊழிகள் தோறும் பல உயிர்களை வீடேற்றி உயர்ந்தவரும், ஒருநிலையே நின்று எல்லா இடங்கட்கும் உரியவராய்ப் பரந்தவரும், நீரும் வளியும் தீயும் ஆகாசமுமாகி நின்றவரும், கொன்று திரிகின்ற கூற்றுவனை உதைத்தவரும், அழகிய பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், தேடிச்சென்று மூழ்கும் தீர்த்தங்கள் ஆனவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார்.
2861 | மலைமகளைப் பாக மமர்ந்தார் தாமே சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே பலபலவும் வேடங்க ளானார் தாமே சிலைமலையா மூவெயிலும் அட்டார் தாமே |
6.078.2 |
மலைமகளைத் தம் உடலிற்பாகமாக விரும்பிக் கொண்டவரும், வானோரால் வணங்கப்படுபவரும், கங்கையாளைத் தம் செஞ்சடைமேல் வைத்தவரும், சரண்புக்குத் தம் செயல் அற்று இருப்பார்க்கு அன்பர் ஆனவரும், பற்பல வேடங்களைப் புனைபவரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், மலையை வில்லாகக் கொண்டு மும்மதில்களையும் அழித்தவரும் திருவாலங் காட்டுறையும் செல்வரே ஆவார்.
2862 | ஆவுற்ற ஐந்தும் உகந்தார் தாமே பூவுற்ற நாற்றமாய் நின்றார் தாமே பாவுற்ற பாட லுகப்பார் தாமே தேவுற் றடிபரவ நின்றார் தாமே |
6.078.3 |
பசுவிடத்துப் பொருந்திய ஐந்து பொருள்களையும் விரும்பியவரும். அளவிறந்த பெருமையுடையவரும், மலரின்கண் மணம்போல எல்லாப் பொருள்களிலும் நுண்ணியராய் நிறைந்து நின்றவரும், பா என்னும் ஓசையாம் உறுப்புப் பொருந்திய பாட்டினை விரும்புபவரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், தேவர் பலரும் அடைந்து அடிபரவ நின்றவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார்.
2863 | நாறுபூங் கொன்றை முடியார் தாமே மாறிலா மேனி யுடையார் தாமே பாறினார் வெண்டலையி லுண்டார் தாமே தேறினார் சித்தத் திருந்தார் தாமே |
6.078.4 |
மணங்கமழும் கொன்றை மலரைச் சூடிய முடியினரும், மறை நான்கும் அங்கம் ஆறும் சொன்னவரும், நரைத்துத் திரைத்து மூத்து விளிதல் இல்லாத மேனியை உடையவரும், அழகிய பிறையைத் தஞ்சடைமேல் வைத்தவரும், அழிந்தாருடைய வெள்ளிய தலையோட்டில் பிச்சை ஏற்று உண்டவரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், தம் இயல்புகளைத் தௌவாக உணர்ந்த மெஞ்ஞானியரின் சித்தத்தில் இருந்தவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார்.
2864 | அல்லும் பகலுமாய் நின்றார் தாமே சொல்லும் பொருளெலா மானார் தாமே பல்லுரைக்கும் பாவெலா மானார் தாமே செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே |
6.078.5 |
இரவும் பகலுமாய் நின்றவரும், அந்தியும் சந்தியும் ஆனவரும், சொல்லும், பொருளும் ஆகிய எல்லாப் பொருள்களும் ஆனவரும், தோத்திரமும் சாத்திரமும் ஆனவரும், மற்றை உலகியலுரைக்கும் எல்லாப்பாக்களும் ஆனவரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், செல்லுதற்குரியவழியைக் காட்ட வல்லவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார்.
2865 | தொண்டாய்ப் பணிவார்க் கணியார் தாமே தண்டா மரையானும் மாலுந் தேடத் பண்டான இசைபாட நின்றார் தாமே திண்டோள்க ளெட்டு முடையார் தாமே |
6.078.6 |
தொண்டராய்ப் பணிவார்க்கு அருகில் உள்ளவரும், தூய வெண்ணீற்றையணிந்து நல்லநிறமுடையவரும், குளிர்ந்த தாமரை மலரில் உறையும் நான்முகனும் திருமாலும் தேடத் தழற் பிழம்பாய் நிமிர்ந்து ஓங்கியவரும், பழைமையான இசையில் பாட அது கேட்டு மகிழ்ந்து நின்றவரும், பழையனூரைத் தமக்கு உரியதாக உடையவரும், வலியதோள்கள் எட்டும் உடையவரும் திருவாலங் காட்டுறையும் அடிகளே ஆவார்.
2866 | மையாருங் கண்ட மிடற்றார் தாமே ஐயாறும் ஆரூரூம் ஆனைக் காவும் பையா டரவ மசைத்தார் தாமே செய்யாள் வழிபட நின்றார் தாமே |
6.078.7 |
கருமைபொருந்திய மிடற்றினை உடையவரும், சுடுகாட்டில் மகிழ்ந்து ஆடினவரும், ஐயாறும், ஆரூரும், ஆனைக்காவும் தில்லையம்பலமும் கோயிலாகக் கொண்டவரும், படம் விரித்தாடும் பாம்பைக் கச்சையாகவும் கங்கணமாகவும் பிறவாகவும் கட்டியவரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், திருமகள் வழிபட அவட்குவரமளித்து நின்றவரும் திருவாலங் காட்டுறையும் செல்வரே யாவர்.
2867 | விண்முழுதும் மண்முழுது மானார் தாமே கண்விழியாக் காமனையுங் காய்ந்தார் தாமே பண்ணியலும் பாட லுகப்பார் தாமே திண்மழுவாள் ஏந்து கரத்தார் தாமே |
6.078.8 |
விண்முழுதுமாய் மண்முழுதுமாய் வியாபித்து நின்றவரும், உயர்ந்தோர்கள்புகழும் குணத்தினரும், நெற்றிக் கண்ணை விழித்துக் காமனைக் காய்ந்தவரும், காலங்களாகிய ஊழிகள் பலவற்றைக் கடந்தவரும், பண்கள் உலவுதற்கு இடமாகிய பாடல்களை விரும்புபவரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், வலியமழுவாயுதத்தை ஏந்திய கரத்தவரும் திருவாலங்காட்டுறை செல்வரே ஆவார்.
2868 | காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமே ஊராஏ கம்ப முகந்தார் தாமே பாரார் புகழப் படுவார் தாமே தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே |
6.078.9 |
கடலில் தோன்றிய கரிய நஞ்சை உண்டவரும், கயிலை மலையை உடையவரும், தமக்குரிய ஊராக ஏகம்பத்தை விரும்பிக் கொண்டவரும், தமக்குரித்தல்லாததாய் ஒற்றியாகப் பெற்ற ஊர் என்று கொள்ளத்தகும் ஒற்றியூரை நிலையாகப் பற்றி நின்றவரும், உலகத்தாரால் உயர்த்துப் புகழப்படுபவரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், வலியவினையாகிய தீராத நோயைத் தீர்ப்பவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரேயாவர்.
2869 | மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே நீலக் கடல்சூ ழிலங்கைக் கோனை பாலொத்த மேனி நிறத்தார் தாமே சீலத்தா ரேத்துந் திறத்தார் தாமே |
6.078.10 |
மாலைக் காலத்துப் பிறையைச் சென்னியில் சேர்த்தவரும், வளமிக்க கயிலைமலையை வணங்காதவனும் கரிய கடலால் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனுமாகிய இராவணனுடைய உடல் நெரியுமாறு கால்விரலை ஊன்றி வருத்தினவரும், பால்போலும் நிறங்கொண்ட மேனியினரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், ஒழுக்கமுடைய உயர்ந்தோர் ஏத்தும் கூறுபாட்டில் அமைந்த அறக்கருணை உடையவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.078.திருவாலங்காடு , உடையவரும், தாமே, காடுறையுஞ், செல்வர், தாமேதிருவாலங், பழையனூரைத், தமக்குரியதாக, தாமேபழனை, பதியா, வுடையார், செல்வரே, ஆவார், நின்றவரும், நின்றார், ஆனவரும், மானார், திருவாலங்காட்டுறையும், பகலுமாய், செஞ்சடைமேல், கொண்டவரும், மலையை, காட்டுறையும், திருவாலங், திருமுறை, வைத்தார், திருவாலங்காடு, கரிய, பற்றி, கொன்றை, லுகப்பார், பொருந்திய, எல்லாப், விரும்புபவரும், மேனி, உண்டவரும், மகிழ்ந்து, வழிபட, படுவார், திருச்சிற்றம்பலம், நிமிர்ந்தார், பதிகங்கள், தேவாரப், ஆறாம், உடையார், ளானார், வைத்தவரும், விரும்பிக், அழகிய, ஊழிகள், யுடையார்