ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.077.திருவாய்மூர்
6.077.திருவாய்மூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வாய்மூரீசுவரர்.
தேவியார் - பாலினுநன்மொழியம்மை.
2850 | பாட அடியார் பரவக் கண்டேன் ஆடல் முழவம் அதிரக் கண்டேன் கோட லரவார் சடையிற் கண்டேன் வாடல் தலையொன்று கையிற் கண்டேன் |
6.077.1 |
அடியார்கள் பாடிப்பரவவும் பத்தர்கணம் சூழ்ந்து நிற்கவும் பூதங்கள் நெருங்கவும் ஆடற்கேற்ற முழவம் முழங்கவும் அமைந்த சூழலில் அழகிய கையில் அனல் ஏந்தியவரும், காந்தட்பூவும், பாம்பும் பொருந்திய சடையில் கங்கையைத் தரித்தவரும், கொக்கிறகைச் சூடியவரும், கொன்றைமாலையை அணிந்தவரும், உலர்ந்த தலையோட்டினைக் கையில் கொண்டவரும் ஆக வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன்.
2851 | பாலின் மொழியாளோர் பாகங் கண்டேன் நீல நிறமுண்ட கண்டங் கண்டேன் காலைக் கதிர்செய் மதியங் கண்டேன் மாலைச் சடையும் முடியுங் கண்டேன் |
6.077.2 |
பால்போன்று இனிக்கும் மொழியாளாகிய பார்வதி ஒரு பங்காகத்திகழப் பெற்றவரும், பதினெண் கணத்தேவரும் சூழ்ந்து பணி செய்யக் கொண்டவரும், நீலகண்டரும், நெற்றிக் கண்ணரும், பெற்றமூர்பவரும், ஒளிஉமிழும் இளமதியைத் தரித்தவரும், திருமுடி மேல் கரந்தை மலரைச்சூடியவரும், மாலை அணிந்த சடையாலான முடியை உடையவரும் ஆக வாய்மூர் அடிகளை நான்கண்டேன்.
2852 | மண்ணைத் திகழ நடம தாடும் விண்ணிற் றிகழும் முடியுங் கண்டேன் நண்ணிப் பிரியா மழுவுங் கண்டேன் வண்ணம் பொலிந்திலங்கு கோலங் கண்டேன் |
6.077.3 |
நிலவுலகம் நின்று நிலைக்க நிகழ்த்தும் கூத்தாட்டில் கட்டப்பட்ட சிலம்பு ஒலிக்கின்ற பாதங்களை உடையவராய், விண்ணிற் சென்று விளங்கும் முடியினராய், ஏற்கும் பலவகை வேடங்கட்கும் பொருந்திய செயல்களைச் செய்பவராய், பிரியாது விளங்கும் மழுவினராய், நான்கு மறைகளையும் ஆறு அங்கங்களையும் ஓதுபவராய், பலவகை நிறங்களும் அழகுபெறத்திகழும் தோற்றத்தினராய்த் திருவாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன்.
2853 | விளைத்த பெரும்பத்தி கூர நின்று இளைக்குங் கதநாக மேனி கண்டேன் திளைக்குந் திருமார்பில் நீறு கண்டேன் வளைத்த வரிசிலையுங் கையிற் கண்டேன் |
6.077.4 |
முன்னைத் தவம் விளைத்த பத்தி மிக நின்று உண்மை அடியார்கள் தம்மை விரும்புமாறு திகழ்பவராய், கருடனுக்கு அஞ்சுவனவும் இயல்பாகக் கோபம்மிக்கனவும் ஆகிய நாகங்களை அணிந்து விளங்கும் மேனியராய், எலும்பாலான அணிகலன்களைப் பூண்டு திகழுபவராய், திருநீற்றில் மூழ்கும் திருமார்பினராய், வானிடத்து மதில்கள் மூன்றும் அன்று அழியுமாறு வளைத்தவரிந்து கட்டப்பட்ட சிலையைக் கையில் கொண்டவராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன்.
2854 | கான்மறையும் போதகத்தி னுரிவை கண்டேன் டூன்மறையப் போர்த்த வடிவுங் கண்டேன் நான்மறை யானோடு நெடிய மாலும் மான்மறி தங்கையின் மருவக் கண்டேன் |
6.077.5 |
காட்டில் மறைந்து வாழும் யானையின் தோலை உரித்தவராய், காலிற்கட்டியகழலினராய், அவ் யானைத் தோலின் புலாற் பொல்லாங்கு மறையும் வண்ணம் அதனை, போர்வையாகப் போர்த்திக் கொண்ட வடிவினராய், உயிர்கள் தம்மை நினைத்தற்கு உரிய மனத்தை உபகரித்து அருளினவராய், நான்மறையானாகிய பிரமனும் நெடியானாகிய திருமாலும் தம் வலப்பாலும் இடப்பாலும் நண்ணவருபவராய், மான் கன்று நிலையாகப் பொருந்தி நிற்கும் கையினராய்வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன்.
2855 | அடியார் சிலம்பொலிக ளார்ப்பக் கண்டேன் முடியார் சடைமேல் அரவ மூழ்க கொடியா ரதன்மேல் இடபங் கண்டேன் வடியாரும் மூவிலைவேல் கையிற் கண்டேன் |
6.077.6 |
திருவடிகளிற் கட்டிய சிலம்பு ஒலிகளின் ஆரவாரத்தை உடையவராய், அவரவர்க்கு ஏற்குமாறு ஈந்த கருணையினராய், சடைச்சுற்றின் நெருக்கினிடை பாம்பு புகுந்துமறைய, அப்பாம்பு தன்னைப் பற்றக் கரந்து வருவதாகக் கருதிப் பெருமை மிக்கபிறையும் அச்சடையின் வேறோர் இடுக்கில் புக்குமறையக் கண்டவராய், கொடியிடத்துப் பொருந்திய இடபத்தினை உடையவராய், கோவணமும் கீளும்கொண்டு விளங்குபவராய், கூரிய மூவிலை வேலினைக் கையில் ஏந்தியவராய்வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன்.
2856 | குழையார் திருத்தோடு காதிற் கண்டேன் இழையார் புரிநூல் வலத்தே கண்டேன் தழையார் சடைகண்டேன் தன்மை கண்டேன் மழையார் திருமிடறும் மற்றுங் கண்டேன் |
6.077.7 |
குழையும் நிறைந்த அழகினையுடைய தோடும் விளங்கும் காதுகளை உடையவராய், கொக்கரை சச்சரி ஆகிய வாச்சியங்களைப் பயன் கொள்பவராய், இழைகள் பொருந்திய முறுக்கப்பட்ட பூணூலை வலம்வர அணிந்தவராய், ஏழிசையும் பயிலும் யாழ் வீணைகளின் இசையை நுகர்வாராய்,தழைத்த சடையினராய், தம்வயத்தினராய், தக்கை தாள முழக்கினராய் மேகம்போன்று கறுத்த திருமிடற்றினராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன்.
2857 | பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன் பரிந்தார்க் கருளும் பரிசுங் கண்டேன் விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன் மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன் |
6.077.8 |
உலகத்தார்க்கு ஏலாத செய்கைகள் ஆம் நஞ் கண்ணுதல், பாம்பணிதல் போன்றனவும், பொருத்தமற்ற செய்கைகள் ஆம் சடைதரித்துப் பெண்ணொரு பாகன் ஆதல் போன்றனவும் தம்பால் பொலியக் கொண்டவராய்,போற்றி என்று கூறி விண்ணோர்கள் புகழுமாறு விளங்குபவராய், அன்பருக்கு அருளும் தன்மையாராய், நிலனொடு நீராய் நிற்பவராய், புதியராய் வந்துபரவிய பூதவேதாளக் கணங்களிடையே திகழ்பவராய், மெல்லியல் உமையும் விநாயகனும் மனைவியும் மகனுமாம் உறவு முறை கொண்டவராய், பிணிதீர்க்கும் மருந்தாம் தன்மையினராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன்.
2858 | மெய்யன்ப ரானார்க் கருளுங் கண்டேன் கையம் பரணெரித்த காட்சி கண்டேன் ஐயம் பலவூர் திரியக் கண்டேன் வையம் பரவ இருத்தல் கண்டேன் |
6.077.9 |
மெய்யன்பர்க்கு அருளுபவராய், வேட்டுவக் கோலம் கொண்டு நின்றவராய், கையிடத்துக்கொண்ட அம்பால் அரண்களை அழித்த காட்சியினராய், பாம்புக்கங்கணராய், அங்கையில் அனல் ஏந்தியவராய், பல ஊர்களிலும் திரிந்து பிச்சை ஏற்பவராய், பகைத்த தக்கன் வேள்வியை அழித்தவராய் மகிழ்ந்து உலகம் பரவ இருந்தவராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன்.
2859 | கலங்க இருவர்க் கழலாய் நீண்ட பலங்கள் தரித்துகந்த பண்புங் கண்டேன் இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும் வலங்கைத் தலத்துள் அனலுங் கண்டேன் |
6.077.10 |
மாலும் அயனும் கலங்குமாறு நீண்ட தழற் பிழம்பாய்த் தோன்றிய காரணராய், முதலாய் நின்று பயன்களைத் தன்னுட் கொண்டு மகிழ்ந்த பண்பினராய், பாடல் இசையும் ஏனைய ஒலியும் தாம் ஆம் தன்மையராய், இலங்கைக் கிறை இராவணனுடையபத்துத் தலைகளும் நசுங்கச் செய்து பின் அவனுக்கு வரங்கள் ஈந்தபெருமையராய், வலக்கையிடத்து அனல் ஏந்தியவராய் வாய்மூர்ச் சிவபெருமானைநான் கண்டேன்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.077.திருவாய்மூர் , கண்ட, வாறே, கண்டேன்வாய்மூ, ரடிகளைநான், கண்டேன், நான், சிவபெருமானை, வாய்மூர்ச், பொருந்திய, கையில், உடையவராய், விளங்கும், அனல், தோன்றக், திருமுறை, நின்று, கையிற், தம்மை, திருவாய்மூர், திகழ்பவராய், ஆகிய, விளைத்த, விளங்குபவராய், போன்றனவும், கொண்டு, ஏந்தியவராய், செய்கைகள், பொலியக், பெருமை, பலவகை, கொண்டவராய், முடியுங், அடியார்கள், சூழ்ந்து, பதிகங்கள், திருச்சிற்றம்பலம், அடியார், தரித்தவரும், கொண்டவரும், கட்டப்பட்ட, முழவம், ஆறாம், தேவாரப், சிலம்பு