ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.079.திருத்தலையாலங்காடு
6.079.திருத்தலையாலங்காடு
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆடவல்லவீசுவரர்.
தேவியார் - திருமடந்தையம்மை.
2870 | தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைச் அண்டத்துக் கப்பாலைக் கப்பா லானை முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை தண்டத்திற் றலையாலங் காடன் தன்னைச் |
6.079.1 |
தொண்டர்க்குத் தன்வழி நிற்றலே நன்னெறியாகச் செய்து நின்றவனும், சூழும்நரகில் வீழாமல் தொண்டரைக் காப்பவனும், இப்புவிக்கு அப்பாலைக்கு அப்பால் ஆனவனும், ஆதிரை நாளை விரும்பிக்கொண்ட தலைவனும், நெற்றியிடத்துத் தோன்றி வளரும் தீயினனும், அயன், அரி, அரன் என்னும் மூவுருவங்களுள் ஓருருவமாய அரனாய் நின்று அம்மூவுருவங்களுக்கும் முதலாய் நின்ற இலிங்கவுருவினனும் ஆகிய தலையாலங்காட்டு அண்ணலை அடையாமல் மிக்க நாளைவீணாள் ஆக்கினேன்.
2871 | அக்கிருந்த அரையானை அம்மான் தன்னை கொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் தன்னைக் புக்கிருந்து போகாத புனிதன் தன்னைப் தக்கிருந்த தலையாலங் காடன் தன்னைச் |
6.079.2 |
சங்குமணி கட்டிய இடையினனும், தந்தை ஆனவனும், அசுரர் புரங்கள் மூன்றையும் ஒருவிநாடியில் எரித்தவனும், கொக்கிறகு செருகப்பட்ட சடைமுடிக்கூத்தனும், குண்டலஞ்சேர் காதினனும், தன்னை எண்ணி உருகுவார் மனத்துட்புக்கு அங்கிருந்து போகாத புனிதனும், புண்ணிய உருவினனும், அளவற்ற செல்வத்தான் ஆகும் இன்பமெல்லாம் வாய்த்திருந்தானும் ஆகிய தலையாலங்காட்டண்ணலை அடையாமல்மிக்க நாளை வீணாள் ஆக்கினேன்.
2872 | மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை எய்த்தவமே உழிதந்த ஏழை யேனை பொய்த்தவத்தா ரறியாத நெறிநின் றானைப் தத்துவனைத் தலையாலங் காடன் தன்னைச் |
6.079.3 |
உண்மைத் தவமாகி, வேதமுமாகி, வேதத்தின் முதலும் ஆகி, ஒளிரும் இளம்பிறையைச் சூடி, வேறுபட்ட இயல்பினனும், வீணே அலைந்து இளைத்த அறிவற்ற என்னைத் துன்பக் கடலில் வீழாமல் கரையேற எடுத்துப் பொய்த்தவத்தார் அறிய முடியாத நெறியில் என்னை நிற்பித்தவனும், கங்கையைச் சடையில் கரந்து உமையம்மையை ஒரு கூற்றிலே கொண்டு நின்றவனும் ஆகிய தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீண்நாள் ஆக்கினேன்.
2873 | சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச் புவனாகிப் புவனங்க ளனைத்து மாகிப் பவனாகிப் பவனங்க ளனைத்து மாகிப் தவனாய தலையாலங் காடன் தன்னைச் |
6.079.4 |
சிவனாய், நான்முகனாய்த் திருமாலாய், சூரிய சந்திரராய், தீயாய், நீராய், புவலோகமாய், புவனங்கள் யாவுமாய், பொன்னாய், மணியாய், முத்துமாய், வேண்டுமிடங்களில் வேண்டியவாறே தோன்றுபவனாய், உயிர்கள் வாழ்தற்கேற்ற இடங்கள் யாவுமாய், இடபத்தை ஊர்ந்து திரியும் ஒருகோலத்தை உடையனாய், தவ வேடந்தாங்கிநின்ற தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன்.
2874 | கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் தன்னைக் அங்கையினில் மான்மறியொன் றேந்தி னானை பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் தன்னைப் சங்கரனைத் தலையாலங் காடன் தன்னைச் |
6.079.5 |
விரைந்து வரும் புனலையுடைய கங்கையைச் சடையில் கரந்தவனாய், விரும்பத்தக்க அழகிய பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பனாய், அழகிய கையில்மான்கன்றொன்றை ஏந்தியவனாய், ஐயாறு மேயவனாய், ஆரூரனாய், குற்றமில்லா அடியார் மாட்டுப் பரிவுடையனாய், பரிதி நியமத்தவனாய், பாசூரினனாய், சங்கரனாய் நின்ற தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன்.
2875 | விடம்திகழும் அரவரைமேல் வீக்கி னானை அடைந்தவரை அமருலகம் ஆள்விப் பானை மடந்தையொரு பாகனை மகுடந் தன்மேல் தடங்கடலைத் தலையாலங் காடன் தன்னைச் |
6.079.6 |
விடமுடைய பாம்பினை இடையின் மேல் கட்டியவனாய், தேவர்களாலும் எண்ணுதற்கரிய அளவினனாய், தன்னை அடைந்தவரைத் தேவருலகம் ஆளச்செய்பவனாய், அழகிய பொன்னாய், அசையும் பெரிய களிற்றியானையை அழித்தவனாய், உமை திகழ் ஒருபாகனாய், சடைமுடிமேல் ஒழுகும் நீரையுடையகங்கையையும், கொடிய பாம்பையும், பிறையையும் வைத்தவனாய் அகன்ற கடலை ஒத்தவனாய்த் திகழும் தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீண்நாள் ஆக்கினேன்.
2876 | விடையேறிக் கடைதோறும் பலிகொள் வானை முடைநாறு முதுகாட்டி லாட லானை உடையாடை யுரிதோலே உகந்தான் தன்னை சடையானைத் தலையாலங் காடன் தன்னைச் |
6.079.7 |
இடபமூர்ந்து வீட்டு வாயில்கள் தோறும் பிச்சையேற்பவனாய், வீரட்டங்கள் எட்டும் மேவினவனாய், வெண்ணீறு அணிந்தவனாய், பிணம் எரிந்து முடைநாறும் சுடுகாட்டில் ஆடுபவனாய், இறப்பு எதிர்வு நிகழ்வு ஆகிய முக்காலமும் ஆபவனாய், அரையிலுடை புலித்தோலாகவும் மேலாடை யானைத் தோலாகவும் அமைய விரும்பினனாய், உமைபொருந்தியபாகத்தோடுள்ள ஒருவனாய், சடையவனாய்த் திகழும் தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன்.
2877 | கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக் இரும்பமர்ந்த மூவிலைவேல் ஏந்தி னானை சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத் தரும்பொருளைத் தலையாலங் காடன் தன்னைச் |
6.079.8 |
கரும்பின்கண் இருந்த சாறுகொண்டு சமைத்த கட்டியையும் கனியையும் தேனையும் ஒப்பவனாய், கன்றாப்பூரின் நடுதறியாய், பன்றியின் வெண்மருப்பாலாகியகாறை அணியினனாய், இரும்பாலான மூவிலை வேலை ஏந்தியவனாய், எனக்கு முதல்வனாய், அழகிய ஆனைக் காவனாய், வண்டுமொய்க்கும் கொன்றை மலரைச்சூடியவனாய், தூயவனாய், தாயானவனாய், உலகுக்கெல்லாம் பொருள் வழங்குபவனாய்த் திகழும் தலையாலங்காட்டு அண்ணலை அடையாமல் மிக்க நாளைவீணாள் ஆக்கினேன்.
2878 | பண்டளவு நரம்போசைப் பயனைப் பாலைப் கண்டளவிற் களிகூர்வார்க் கௌயான் தன்னைக் எண்டளவி லென்னெஞ்சத் துள்ளே நின்ற தண்டரனைத் தலையாலங் காடன் தன்னைச் |
6.079.9 |
பண்டுதொட்டுவரும் இசையிலக்கணத்தொடு பொருந்திய யாழிசையின் பயனாய், பாலாய், பாலின் சுவையாய், பெரியவானமாய், கனலாய், காற்றாய், தன்னைக்கண்ட அளவிலே மகிழ்ச்சி மிகுவார்க்கு எளியனாய், முதல்வனாய், திருமாலாய், நான்முகனாய், எட்டிதழ்த் தாமரை வடிவிலுள்ள இல்லமாகிய என் நெஞ்சத்துள்ளேநின்ற எம் தலைவனாய், யானைத் தோற் போர்வையைப் பேணுபவனாய், இலிங்கவடிவினனாய்த் திகழும் தலையாலங் காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளைவீணாள் ஆக்கினேன்.
2879 | கைத்தலங்க ளிருபதுடை அரக்கர் கோமான் முத்திலங்கு முடிதுளங்க வளைக ளெற்றி பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப் தத்துவனைத் தலையாலங் காடன் தன்னைச் |
6.079.10 |
இருபது கைகளையுடைய அரக்கர் கோமான் தோள்வளைகளைப் புடைத்து ஓடிச்சென்று ஆராயாது கயிலை மலையை விரைந்தெடுக்க அவன் முத்து விளங்கும் முடிகள் பத்தும் நடுங்கும் வண்ணம் திருவிரல் ஒன்றை அவன்மேல் வைத்து ஊன்ற அவன் தன் பத்துவாயாலும் பாடிய சாமகீதப் பாடலைக் கேட்டு இரக்கம் மிக்கவனாய் அவனுக்கு இராவணன் என்ற பெயரை ஈந்த தத்துவனாய்த் திகழும் தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேனே.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.079.திருத்தலையாலங்காடு , னேனே, போக்கி, காடன், தன்னைச்சாராதே, தலையாலங், சாலநாள், அடையாமல், ஆக்கினேன், மிக்க, நாளை, தலையாலங்காட்டண்ணலை, திகழும், வீணாள், அழகிய, ஆகிய, திருமுறை, நாளைவீணாள், திருத்தலையாலங்காடு, முத்து, ளனைத்து, வீண்நாள், அவன், அரக்கர், சடையில், திருமாலாய், யானைத், ஏந்தியவனாய், முதல்வனாய், மேயானை, பொன்னாய், கங்கையைச், யாவுமாய், ஆறாம், நின்றவனும், வீழாமல், ஆனவனும், திருச்சிற்றம்பலம், தொண்டர்க்குத், அம்மான், வீழாமே, நின்ற, தலையாலங்காட்டு, முதலாய், தன்னை, போகாத, தேவாரப், அண்ணலை, பதிகங்கள், சூடி