நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.068.திருவாலங்காடு

4.068.திருவாலங்காடு
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுவரர்.
தேவியார் - வண்டார்குழலியம்மை.
659 | வெள்ளநீர்ச் சடையர்போலும் உள்ளுளே யுருகி நின்றங் கள்ளமே வினைக ளெல்லாங் அள்ளலம் பழனை மேய |
4.068.1 |
வயல்களில் சேறு நிரம்பிய பழையனூரை அடுத்த திருவாலங்காட்டுப் பெருமான் கங்கை சூடிய சடையினராய், விரும்புபவர்களுக்கு எளியவராய், உள்ளத்திலே இறை தியானத்தால் நெகிழ்ச்சியுற்று மகிழும் அடியவர்பால் அன்பராய், நுகர்வோர் காரணம் உணராத வகையில் நுகர்விக்கும் இரு வினைகளின் மாசுகளைப் போக்குபவர் ஆவார்.
660 | செந்தழ லுருவர் போலுஞ் வெந்தவெண் ணீறு கொண்டு மந்தமாம் பொழிற்ப ழனை அந்தமி லடிகள் போலு |
4.068.2 |
ஆலங்காட்டு அடிகளார் செந்தழல் நிறத்தவராய், கோபம் உடைய காளையை உடையவராய், வெண்ணீற்றைத் திருமேனியில் அணிபவராய், தென்றல் வீசும் சோலைகளை உடைய பழையனூரில் உறையும் வள்ளலாராய்த் தமக்கு ஒரு காலத்தும் இறுதியில்லாத பெருமானாய் உள்ளார்.
661 | கண்ணினாற் காம வேளைக் எண்ணிலார் புரங்கண் மூன்று பண்ணினார் முழவ மோவாப் அண்ணலா ரெம்மை யாளு |
4.068.3 |
நம்மை அடிமை கொள்ளும் ஆலங்காட்டுப் பெருமான் நெற்றிக்கண்ணால் கருவேள் ஆகிய மன்மதனைத் தீயினால் சாம்பலாகுமாறு விழித்தவரும், பகைவருடைய மும்மதில் களும் தீக்கு இரையாகுமாறு சிரித்தவரும், பண்ணுக்குஏற்ப ஒலிக்கும் முழாவின் ஒலி நீங்காததும், சோலைகளை உடையதுமான பழையனூரில் விரும்பித்தங்கிய தலைவரும் ஆவார்.
662 | காறிடு விடத்தை யுண்ட தூறிடு சுடலை தன்னிற் கூறிடு முருவர் போலுங் ஆறிடு சடையர் போலு |
4.068.4 |
குளிர்ந்த சோலைகளை உடைய பழையனூரைச் சேர்ந்த, கங்கை சூடிய ஆலங்காட்டுப் பெருமான் கொல்லுகின்ற விடத்தை உண்ட கழுத்தினராய், எட்டுத் தோளினராய்த் தூறுகள் மண்டிக் கிடக்கும் சுடுகாட்டு வெள்ளிய சாம்பலைப் பூசியவராய்ப் பார்வதிக்காக இடப்பாகத்தைப் பிரித்துக் கொடுத்துப் பார்வதிபாகராம் உருவினராய் உள்ளார்.
663 | பார்த்தனோ டமர் பொருது கூர்த்தவா யம்பு கோத்துக் பேர்த்துமோ ராவ நாழி தீர்த்தமாம் பழனை மேய |
4.068.5 |
பழையனூரையடுத்த, பாவத்தைப் போக்கும் தூய்மையை உடைய ஆலங்காட்டுப் பெருமான் பார்த்தனோடு போரிட்டு அவனுடைய பக்தியைக் கண்டவராய், கூர்மையான நுனியை உடைய அம்புகளைக் கோத்து அவன் குணங்களை அறிந்தவராய்ப் பின்னும் ஒரு அம்புப் புட்டிலை அத்திரத்தோடு அவனுக்கு வழங்கியவராய் உள்ளார்.
664 | வீட்டினார் சுடுவெண் ணீறு காட்டினின் றாடல் பேணுங் பாட்டினார் முழவ மோவாப் ஆட்டினா ரரவந் தன்னை |
4.068.6 |
ஆலங்காட்டுப் பெருமான் இறந்தவர்களைக் கொளுத்திய சாம்பலை உடலில் பூசியவராய்ச் சுடுகாட்டிலிருந்து கூத்தாடுதலை விரும்பும் கருத்தினை உடையவராய்ப் பாம்பினை ஆட்டுபவராய்ப் பாடுதலை உடையவராய், முழாவின் ஒலி நீங்காததும், பசுமையான சோலைகளை உடையதுமான பழையனூரை விரும்பி உறைகின்றார்.
665 | தாளுடைச் செங் கமலத் நாளுடைக் காலன் வீழ கோளுடைப் பிறவி தீர்ப்பார் ஆளுடை யண்ணல் போலு |
4.068.7 |
குளிர்ந்த சோலைகளை உடைய பழையனூரை அடுத்த ஆலங்காட்டுப் பெருமான் தண்டினை உடைய செங்கமலப்பூப் போன்ற பெருமை பொருந்திய திருவடிகளை உடையவராய், தனக்கு உயிர்வாழ வேண்டிய நாள்கள் இன்னும் பலவாக உடைய இயமன் அழியுமாறு உதைத்த, நம்மால் விரும்பப்படும் தலைவராய், யாம் வினைவயத்தாற் கொள்ளுதற்குரிய பிறவிகளைப் போக்குபவராய் நம்மை அடிமையாகக்கொள்ளும் தலைவராக உள்ளார்.
666 | கூடினா ருமை தனோடே சூடினார் கங்கை யாளைச் பாடினார் சாம வேதம் ஆடினார் காளி காண |
4.068.8 |
பசுமையாகிய சோலைகளை உடைய பழையனூரை விரும்புபவராகிய ஆலங்காட்டுப் பெருமான் காதற் குறிப்புடைய வேடத்தைக் கொண்டு பார்வதி பாகராகிக் கங்கையைச் சூடி அதன் பெருக்கைக் குறைத்த சடையினராய்ச் சாமவேதம் பாடினவராய்க் காளிதேவி காண ஆடிய பெருமானாராவார்.
667 | வெற்றரைச் சமண ரோடு ஒற்றரைச் சொற்கள் கொள்ளார் பெற்றமே யுகந்தங் கேறும் அற்றங்க ளறிவர் போலு |
4.068.9 |
ஆலங்காட்டு அடிகளார் ஆடையற்ற சமணர்களோடு விலைமதிப்புடைய ஆடைகளைப் போர்க்கும் புத்தர்கள் பேசும் ஒன்றும் பாதியுமாகிய சொற்களை ஏற்றுக் கொள்ளாத சிவனடியார்களுடைய குணங்களை விரும்பியவராய், விரும்பிக் காளையை வாகனமாகக் கொள்ளும் பெருமையை உடையவராய்ப் பிறர் அறியாதவாறு மறைத்துச் செய்யும் பாவங்களை அறியும் ஞானமுடையவராய் உள்ளார்.
668 | மத்தனாய் மலையெ டுத்த ஒத்தினார் திருவி ரலா பத்தர்தம் பாவந் தீர்க்கும் அத்தனார் நம்மை யாள்வா |
4.068.10 |
ஆலங்காட்டுப் பெருமான் செருக்குற்றவனாய்க் கயிலையைப் பெயர்த்த இராவணனைக் கைகளோடு தளருமாறு விரலை ஊன்றிப் பின் அவனுக்கு அருள் செய்தவராய், பக்தர்களுடைய தீவினைகளைத் தீர்ப்பவராய், பசுமையான சோலைகளை உடைய பழையனூரை விரும்பி உறையும் தலைவராய் நம்மை அடிமை கொள்பவராய் உள்ளார்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.068.திருவாலங்காடு , உடைய, ளாரே, டடிக, பெருமான், பழனை, சோலைகளை, ஆலங்காட்டுப், உள்ளார், பழையனூரை, போலுமாலங்காட், நம்மை, திருமுறை, உடையவராய், திருவாலங்காடு, கங்கை, விடத்தை, சடையர், உடையதுமான, நீங்காததும், நான்காம், முழாவின், குணங்களை, விரும்பி, தலைவராய், பசுமையான, உடையவராய்ப், கொள்ளும், அவனுக்கு, குளிர்ந்த, தேவாரப், அடுத்த, காளையை, அடிகளார், ஆலங்காட்டு, ஆவார், திடுவர், திருச்சிற்றம்பலம், பழையனூரில், மோவாப்பைம்பொழிற், சூடிய, முழவ, பதிகங்கள், உறையும், அடிமை