நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.047.திருக்கயிலாயம்
4.047.திருக்கயிலாயம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் இமயமலையிலுள்ளது.
சுவாமிபெயர் - கயிலாயநாதர்.
தேவியார் - பார்வதியம்மை.
456 | கனகமா வயிர முந்து உனகனா யரக்க னோடி அனகனாய் நின்ற வீச மனகனா யூன்றி னானேன் |
4.047.1 |
பொன்னும் வயிரமும் முற்பட்ட சிறந்த இரத்தினங்களும் உடைய கயிலையைப் பார்த்தும் அதனைப் பெயர்த்துவிடும் அகந்தையுற்ற மனத்தானாய் அரக்கன் ஒடிவந்து அதனைப் பெயர்க்க முற்பட்ட அளவிலே பார்வதி அச்சம் கொள்ளப் பாவமில்லாதவனாய் நிலைபெற்று எல்லோரையும் அடக்கி ஆளும் பெருமான் விரலைச் சற்று ஊன்றிய அளவிலே அரக்கனாகிய இராவணன் அலறிக் கொண்டு செயலற்றுக் கீழே விழுந்தான். எம் பெருமான் நிலைபெற்ற உள்ளத்தனாய் விரலை அழுந்த ஊன்றி இருந்தானாயின் மீண்டும் இராவணன் கண்விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்பட்டிருக்க மாட்டாது.
457 | கதித்தவன் கண்சி வந்து அதிர்த்தவ னெடுத்தி டல்லு நெதித்தவ னூன்றி யிட்ட மதித்திறை யூன்றி னானேன் |
4.047.2 |
மன எழுச்சியை உடைய இராவணன் கோபத்தாற் கண்கள் சிவக்கப் பெரிய கயிலைமலையை நோக்கி ஆரவாரித்துக் கொண்டு ஓடிப் பெயர்க்க முற்பட்ட அளவில், பார்வதி அஞ்ச, எல்லோரையும் ஆள்பவனாகிய தவச்செல்வனான சிவபெருமான் விரலைச் சிறிது ஊன்றியிட்ட நிலையிலேயே அவன் ஆற்றல் அழிந்து கதறிக்கொண்டு விழுந்தான். பெருமான் அவனை அழித்தலைக் கருதி விரலை அழுத்தமாக ஊன்றியிருந்தால் இராவணன் மீண்டும் கண் விழித்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
458 | கறுத்தவன் கண்சி வந்து மறித்தலு மங்கை யஞ்ச நெறித்தொரு விரலா லூன்ற மறித்திறை யூன்றி னானேன் |
4.047.3 |
கரிய நிறத்தை உடைய இராவணன் வெகுண்டு கயிலையாகிய பெரிய மலையைக் கையால் புரட்ட முயன்ற அளவில் பார்வதி பயப்படத் தேவர் தலைவனாகிய சிவபெருமான் சிரித்து ஒருவிரலை மெதுவாக ஊன்றி அவனை நெரிக்கப் பெரியமலை கீழே விழுவதுபோல அவன் விழுந்தான். மீண்டும் அவ்விரலை பெருமான் ஊன்றியிருந்தால் இராவணன் மீண்டும் கண்விழிக்கும் வாய்ப்பே ஏற்பட்டிருக்காது.
459 | கடுத்தவன் கண்சி வந்து எடுத்தலு மங்கை யஞ்ச நொடிப்பள விரலா லூன்ற மடித்திறை யூன்றி னானேன் |
4.047.4 |
கோபம் கொண்ட இராவணன் கண்கள் சிவக்கக் கயிலை நன்மலையை ஓடி எடுத்த அளவில் பார்வதி அஞ்ச, எம்பெருமான் அதனை நோக்கி முறுவலித்து ஒருகணநேரம் தன் கால் விரலை ஊன்றிய அவ்வளவில் இராவணன் உடல் நொந்து கதறி விட்டான். கால்விரலை மடித்துச் சிறிது அழுந்த ஊன்றியிருந்தானாகில் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.
460 | கன்றித்தன் கண்சி வந்து வென்றித்தன் கைத்த லத்தா நன்றுத்தா னக்கு நாத மன்றித்தா னூன்றி னானேன் |
4.047.5 |
வெகுண்டு கண் சிவந்து கயிலை நன்மலையை நோக்கி ஓடி இராவணன் பல வெற்றிகளைப் பெற்ற தன் கைகளால் எடுத்தலும் பார்வதி அஞ்ச எம் பெருமான் நன்கு சிரித்துத் தன் கால் விரலை ஊன்றிய அளவில் அவன் துன்புற்று வீழ்ந்தான். அவனைத் தண்டிக்கக்கருதி விரலைப் பெருமான் அழுத்தி ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.
461 | களித்தவன் கண்சி வந்து நௌத்தவ னெடுத்தி டல்லு வெளித்தவ னூன்றி யிட்ட மளித்திறை யூன்றி னானேன் |
4.047.6 |
செருக்குற்ற இராவணன் கண்சிவந்து கயிலை நன்மலையை நோக்கி ஓடிச் சென்று உடலை நௌத்துக் கொண்டு பெயர்க்கமுற்பட்ட அளவில் பார்வதி அஞ்ச, அதனை நோக்கி வெண்ணிற நீறு பூசிய பெருமான் மலையை அழுத்த, இராவணன் அலறிக்கொண்டு விழுந்தான். விரலை மடித்துக் கொண்டு அழுத்தமாக ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.
462 | கருத்தனாய்க் கண்சி வந்து எருத்தனா யெடுத்த வாறே திருத்தனாய் நின்ற தேவன் வருத்துவா னூன்றி னானேன் |
4.047.7 |
இலங்கைத் தலைவன் வெகுண்டு கயிலை நன் மலையைக் காளைபோன்றவனாய்க் கழுத்தைக் கொடுத்துப் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்ச, எல்லோரையும் ஆள்பவனாய்த் தீய வினைகளிலிருந்து திருத்தி ஆட்கொள்ளும் எம் பெருமான் திருவிரலை ஊன்றிய அளவில் அவன் செயலற்று விழுந்தான். இராவணனைத் துன்புறுத்தும் எண்ணத்தோடு விரலை ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.
463 | கடியவன் கண்சி வந்து வடிவுடை மங்கை யஞ்ச செடிபடத் திருவி ரல்லா வடிவுற வூன்றி னானேன் |
4.047.8 |
கொடிய இராவணன் வெகுண்டு ஓடிச்சென்று கயிலை நன்மலையைப் பார்வதி அஞ்சுமாறு பெயர்த்த அளவில் சிவபெருமான் பொருந்த நினைத்து அவனுக்குத் தீங்கு நிகழுமாறு திருவிரலால் அழுத்திய அளவில் உருச்சிதைந்து விழுந்தான். விரல் நன்றாகப் பொருந்த ஊன்றியிருந்தாராயின் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.
464 | கரியத்தான் கண்சி வந்து இரியத்தா னெடுத்தி டல்லு நெரியத்தா னூன்றா முன்ன மரியத்தா னூன்றி னானேன் |
4.047.9 |
உள்ளம் கரியக் கண்கள் சிவக்கக் கயிலை மலையைப் பற்றி அது உறுதிகெட்டுத் தளர இராவணன் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்ச, ஈசன் இராவணன் உடல் நெரியுமாறுதன் கால்விரலைச் சிறிது ஊன்றாத முன்னரே கனத்தைத் தாங்கமுடியாத அவன் அலறியவாறு விழுந்தான். அவன் இறக்குமாறு எம் பெருமான் விரலை ஊன்றியிருப்பின் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.
465 | கற்றனன் கயிலை தன்னைக் செற்றவ னெடுத்த வாறே உற்றிறை யூன்றா முன்ன மற்றிறை யூன்றி னானேன் |
4.047.10 |
சிவபெருமானுடைய கயிலைமலையைக் கண்ட அளவில் இராவணன் வெகுண்டு ஓடிச் சென்று அதனை எடுத்த அளவில் பார்வதி அஞ்ச, எம் பெருமான் அவன் செயலை உள்ளத்துக் கொண்டு தன் விரலை ஊன்றிய மாத்திரத்தே அறிவு அழியும் நிலையில் இராவணன் விழுந்தான். சற்று எம்பெருமான் அழுத்தி ஊன்றியிருந்தால் மீண்டு அவன் உயிரோடு கண் விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்படாது போயிருக்கும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.047.திருக்கயிலாயம் , இராவணன், அளவில், கில்லை, யன்றே, பார்வதி, பெருமான், னானேன்மறித்துநோக், அவன், வந்துகயிலைநன், விழுந்தான், விரலை, கண்சி, கயிலை, அஞ்ச, அன்றே, நோக்கு, மறித்தும், இல்லை, ஊன்றியிருந்தால், மலையை, யூன்றி, வெகுண்டு, நோக்கி, கொண்டு, னூன்றி, ஊன்றிய, மலையைக், யஞ்ச, மீண்டும், சிவபெருமான், கண்கள், மங்கை, பெயர்த்த, திருக்கயிலாயம், நன்மலையை, னெடுத்தி, எல்லோரையும், சிறிது, திருமுறை, பார்க்கும், உடைய, வாய்ப்பே, முற்பட்ட, பதிகங்கள், தேவாரப், அளவிலே, எம்பெருமான், நான்காம், கால், உடல், ஓடிச், பொருந்த, மலையைப், விரலைச், சென்று, சற்று, எடுத்த, அழுத்தி, விரலா, நின்ற, அவனை, ஊன்றி, மலறி, தலறி, பெரிய, அழுத்தமாக, திருச்சிற்றம்பலம், பெயர்க்க, சிவக்கக், அதனைப், அழுந்த, விழித்துப், ஏற்பட்டிருக்காது, கீழே