நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.043.திருக்காஞ்சிமேற்றளி

4.043.திருக்காஞ்சிமேற்றளி
திருநேரிசை : பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை : பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமேற்றளிநாதர்.
தேவியார் - திருமேற்றளிநாயகி.
424 | மறையது பாடிப் பிச்சைக் பிறையது சடைமு டிமேற் கறையது கண்டங் கொண்டார் இறையவர் பாட லாட |
4.043.1 |
காஞ்சிமா நகரிலே தலைவராய்ப் பாடல் ஆடல் விளங்கும் மேற்புறக் கோயிலில் உறையும் பெருமான் வேதங்களைப் பாடிக்கொண்டு பிச்சை எடுப்பதற்காக வீடுதோறும் திரிந்து வாழ்பவராய், பிறையை அணிந்த சடையிலே கங்கையைச் சூடியவராய்க் கழுத்தில் விடத்தின் கருஞ்சுவடு கொண்டவராய் உள்ளார்.
425 | மாலன மாயன் றன்னை பாலனார் பசுப தியார் காலனைக் காலாற் செற்றார் ஏலநற் கடம்பன் றந்தை |
4.043.2 |
முருகனுடைய தந்தையாராய்க் காஞ்சி நகரத்து விளங்கும் மேற்புறக் கோயிலிலுள்ள பெருமான் மேகம் போன்ற நிறத்தை உடைய திருமாலைத் தம் திருமேனியில் மகிழ்ந்து ஏற்றவராய், எவர்க்கும் மூத்தவராகவும் இளைய சிறுவராகவும் வடிவு கொள்பவராய், ஆன்மாக்களுக்குத் தலைவராய், பால் போன்ற வெள்ளிய திருநீற்றைப் பூசுபவராய்க் கூற்றுவனைத் தம் திருவடியால் ஒறுத்தவராய் உள்ளார்.
426 | விண்ணிடை விண்ண வர்கள் பண்ணிடைச் சுவையின் மிக்க கண்ணிடை மணியி னொப்பார் எண்ணிடை யெழுத்து மானா |
4.043.3 |
எண்ணும் எழுத்துமாய் விளங்கும் காஞ்சி மேற்றளியனார் வானத்திலுள்ள தேவர்கள் விருப்பத்துடன் வந்து வணங்கி வாழ்த்தப் பண் இன்பம் மிக்க இன்னிசைப் பாடல்களைக் கேட்பவராய்க் கண்மணிபோல அடியவர்களுக்கு ஞானஒளி வழங்குபவராய் உள்ளார்.
427 | சோமனை யரவி னோடு வாமனை வான வர்கள் காமனைக் காய்ந்த கண்ணார் ஏமநின் றாடு மெந்தை |
4.043.4 |
மன்மதனை வெகுண்ட நெற்றிக் கண்ணராய், இரவில் யாமத்தில் கூத்து நிகழ்த்தும் எந்தையாராய், பிறையைப் பாம்பினோடும் கங்கையோடும் சூடும் அழகராய்த் தேவர்கள் வலப்புறமாகச் சுற்றி வந்து துதிக்குமாறு காஞ்சி மேற்றளியனார் அமர்ந்துள்ளார்.
428 | ஊனவ ருயிரி னோடு தானவர் தனமு மாகித் கானவர் காள கண்டர் ஏனமக் கோடு பூண்டா |
4.043.5 |
நீலகண்டராய், எலும்போடு பன்றிக் கொம்பினை அணிந்தவராய், அருச்சுனனோடு எதிர்த்துப் போரிட்ட வேடராய், உலகங்களிலும், ஊழிகளிலும், உடம்பினுள்ளும், உயிரினுள்ளும் உடனாய்க் கலந்து இருப்பவராய்த் தானம் செய்பவராய்ச் செல்வ வடிவினராய்க் காஞ்சிமேற்றளியனார் அமைந்துள்ளார்.
429 | மாயனாய் மால னாகி தேயமாய்த் திசையெட் டாகித் காயமாய்க் காயத் துள்ளார் ஏயமென் றோளி பாக |
4.043.6 |
தமக்குப் பொருந்திய மென்மையான தோள்களை உடைய பார்வதியின் பாகராய், திருமாலாகவும், இந்திரனாகவும், பிரமனாகவும், நிலமாகவும், நாடாகவும் எண் திசைகளாகவும் புனித நீர்களாகவும் இயங்குதிணைகளுக்கு உரிய உடல்களாகவும், அவ்வுடல்களின் உள் இருப்பவராகவும் காஞ்சிமேற்றளியனார் கரந்து எங்கும் பரந்து உள்ளார்.
430 | மண்ணினை யுண்ட மாயன் பண்ணினைப் பாடி யாடும் கண்ணினை மூன்றுங் கொண்டார் எண்ணினை யெண்ண வைத்தா |
4.043.7 |
உலகை விழுங்கிய திருமாலை ஒரு பாகமாகக் கொண்டவராய், இன்னிசைகளைப் பாடிக் கூத்தாடும் அடியார்கள் உடைய உள்ளங்களைத் தமக்கு இருப்பிடமாகக் கொண்டவராய், முக் கண்ணராய், அடியார்களுடைய எண்ணத்திலே தம்மையே தியானிக்குமாறு வைத்தவராய்க் காஞ்சிமேற்றளியனார் அமைந்துள்ளார்.
431 | செல்வியைப் பாகங் கொண்டார் மல்லிகைக் கண்ணி யோடு கல்வியைக் கரையி லாத எல்லியை விளங்க நின்றா |
4.043.8 |
பார்வதிபாகராய், முருகனை மகனாகக் கொண்டவராய் மல்லிகை கொன்றை இவற்றாலாய முடி மாலையைச் சூடிக் கல்வியைக் கரை கண்ட சான்றோர் வாழும் காஞ்சிநகரிலே, சூரியன் விளக்கமுற அவனொளிக்கு உள்ளொளியாய் மேற்றளியனார் விளங்குகின்றார்.
432 | வேறிணை யின்றி யென்றும் கூறியல் பாகம் வைத்தார் ஆறினைச் சடையுள் வைத்தார் ஏறினை யேறு மெந்தை |
4.043.9 |
தனக்கு இணையில்லாதபடி ஒளிவீசும் குறுகிய இடையை உடைய பார்வதியின் பாகராய்க் கொடிய பாம்பு பிறை கங்கை என்ற இவற்றைச் சடையுள் வைத்துக் காளையை ஏறி ஊரும் எம் தந்தையாராய்க் கச்சிமேற்றளியனார் விளங்குகிறார்.
433 | தென்னவன் மலையெ டுக்கச் மன்னவன் விரலா லூன்ற கன்னலின் கீதம் பாடக் இன்னவற் கருளிச் செய்தா |
4.043.10 |
காஞ்சியில் இலங்கும் மேற்றளியனார் தென் திசையை ஆண்ட இராவணன் கயிலையைப் பெயர்க்கப் பார்வதி நடுங்கக் கண்டு, என்றும் நிலையாயிருக்கும் அவர் தம் விரலால் அழுத்த, அதனால் இராவணனுடைய அழகிய தலைகள் நெரியப் பின் அவன் வாயினால் கரும்பைப் போன்ற இனிய பாடல்கள் பாட, அவற்றைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு இன்னருள் செய்தவராவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.043.திருக்காஞ்சிமேற்றளி , னாரே, றளிய, நகர்தன், கொண்டவராய், காஞ்சி, மேற்றளியனார், உடைய, உள்ளார், வந்து, திருக்காஞ்சிமேற்றளி, திருமுறை, காஞ்சிமேற்றளியனார், விளங்கும், கங்கை, மெந்தையிலங்குமேற், கண்ணராய், அமைந்துள்ளார், பார்வதியின், நடுங்கக், சடையுள், கொன்றை, பாகங், மகிழ்ந்து, மேற்புறக், பாடல், திருச்சிற்றம்பலம், திரிந்து, பெருமான், தந்தையாராய்க், நான்காம், கொண்டார்காஞ்சிமா, தேவாரப், பதிகங்கள், தேவர்கள்