நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.034.திருமறைக்காடு

4.034.திருமறைக்காடு
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர்.
தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.
334 | தேரையு மேல்க டாவித் ஆரையு மேலு ணரா பாரையும் விண்ணு மஞ்சப் காரிகை யஞ்ச லென்பார் |
4.034.1 |
செழிப்பு மிக்கமறைக்காடனார், யாரையும் தனக்கு மேம்பட்டவராக மதிக்காதவனும் ஆளுந்தன்மையால் மேம்பட்டவனுமான இராவணன் கயிலாய மலைக்கு மேலும் தேரைச் செலுத்துமாறு தேரோட்டியை ஏவி அவன் அஃது இயலாமையைக் குறிக்க அவனை அதட்டிக் கடுமையாக நோக்கிக் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் மண்ணும் விண்ணும் அஞ்சுமாறு பரந்த அவனுடைய தோள்களையும் முடிகளையும் நசுக்கிப் பார்வதியை அஞ்சேல் என்று அமைதியுறுத்தினார்.
335 | முக்கிமுன் வெகுண் டெடுத்த நக்கிருந் தூன்றிச் சென்னி அக்கர வாமை பூண்ட தெக்குநீர்த் திரைகண் மோதுந் |
4.034.2 |
நீரைத் தம்மாட்டுக் கொள்கின்ற அலைகள் கரையை நோக்கி மோதும் திருமறைக்காடனார், தன் முழுவலியையும் பயன்படுத்தி முந்திக் கொண்டு கோபத்தோடு கயிலையைப் பெயர்த்த, முடியை அணிந்த இராவணனைச் சிரித்தபடியே கால் விரலை ஊன்றி நசுக்கியவராய், பிறைசூடிய எம் தலைவராய், எலும்பு, பாம்பு ஆமையோடு இவற்றை அணிந்த அழகராய்த் தம் விருப்பினாலே மறைக்காட்டை இருப்பிடமாகக் கொண்டுள்ளார்.
336 | மிகப்பெருத் துலாவ மிக்கா அகப்படுத் தென்று தானு உகைத்தெடுத் தான்ம லையை நகைப்படுத் தருளி னானூர் |
4.034.3 |
மிகப்பெரிய உருவினனாய் எங்கும் சஞ்சரிப்பவனாய் உள்ள இராவணன் நகைத்துத் தேரோட்டியை அதட்டி, மலையை மேவித் தேரைச் செலுத்தென்று நிர்ப்பந்திக்க, அஃது இயங்காமையால் தன் மிக்க வலிமையை முழுதும் கொண்டு செலுத்தி மலையைப் பெயர்க்கத் தன் உடம்பினைச் செயற்படுத்திய அளவில் அவனை அவ்விடத்திலேயே சிரிக்கப்படுதலுக்கு உரியனாய் நசுக்கியவருடைய ஊர் நான்கு வேதங்களும் வழிபட்ட மறைக்காடாகும்.
337 | அந்தரந் தேர்க டாவி உந்தினான் மாம லையை பந்தமாந் தலைகள் பத்தும் சிந்தனை செய்து விட்டார் |
4.034.4 |
வானத்திலே தேரைச் செலுத்தி அதன் செலவு தடைப்பட்ட அளவில் அதனைத் தடைப்படுத்தியவன் யாவன் என்று வினவிக் கோபத்தால் உந்தப்பட்டு இராவணன் அப்பெரிய கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில், அவன் உடம்பில் இணைந்த பத்துத்தலைகளும் வாய் திறந்து அலறித் தரையிலே சாயுமாறு திருமறைக்காடனார் திருவுள்ளத்தில் நினைத்துச் செயற்பட்டார்.
338 | தடுக்கவுந் தாங்க வொண்ணாத் கடுக்கவோர் தேர்க டாவிக் எடுப்பனா னென்ன பண்ட அடுக்கவே வல்ல னூரா |
4.034.5 |
விரைவாகப் புட்பகவிமானத்தைச் செலுத்திச் சென்ற வழியில் அதன் செலவினைக் கயிலை மலை தடுக்க அதனைப் பொறுக்க முடியாத ஆத்திரத்தால் மிக்க வலிமையை உடையவனாகி, 'இதுவும் ஒரு பண்டமா? இதோ கையால் பெயர்த்து எறிந்து விடுகிறேன்' என்று கயிலையைப் பெயர்த்த இராவணனை வருந்துமாறு செய்யவல்ல சிவபெருமான் உகந்தருளியுள்ள திருத்தலம் அழகிய மறைக்காடு ஆகும்.
339 | நாண்முடிக் கின்ற சீரா கோள்பிடித் தார்த்த கையான் நீண்முடிச் சடையர் சேரு தோண்முடி நெரிய வைத்தார் |
4.034.6 |
ஒவ்வொருநாளையும் முடிக்குஞ் சிறப்புடைய சூரியன் ஒடுங்கிக்கொண்டு இலங்கையின்மேல் செல்லாதபடி ஏனைய கிரகங்களையும் தன் ஆணைக்கு உட்படுத்திய செயலினனாய்க் கொடியவனாகிய இராவணன் தான் பெருவலிமை உடையவன் என்று செருக்கி நீண்ட சடைமுடியை உடைய சிவபெருமானுடைய மலையைப் பெயர்க்கத் தொடங்கிய அளவில் பழைய மறைக்காட்டுப் பெருமான் அவனுடைய தோள்களும் தலைகளும் நசுங்குமாறு செய்துவிட்டார்.
340 | பத்துவா யிரட்டிக் கைக பொத்திவாய் தீமை செய்த கத்திவாய் கதற வன்று முத்துவாய் திரைகண் மோது |
4.034.7 |
முத்துக்களைத் தம்மிடையே கொண்டனவாய் அலைகள் மோதும் பழைய மறைக்காட்டுப்பெருமான், பத்துவாய்களையும் இருபது கைகளையும் உடைய இராவணன் தான் மிக்கவலிமை உடையவன் என்ற செருக்கால் சத்தப்படாமல் தீவினைகள் செய்பவனாய்க் கயிலையைப் பெயர்த்தலாகிய தீவினையைச் செய்ய அவன் வாயினால் பெரிய குரலில் கதறுமாறு தம் கால்விரலால் அழுத்தி அவனை நசுக்கிவிட்டார்.
341 | பக்கமே விட்ட கையான் புக்கனன் மாமலைக் கீழ்ப் மிக்கமா மதிகள் கெட்டு நக்கன பூத மெல்லா |
4.034.8 |
ஒவ்வொரு பக்கமும் பத்துக் கைகளை உடைய இராவணன் தன் தீச்செயல் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவு இல்லாதவனாய் மலையின் அடியில் புகுந்து வெளியே வரும் வழியை அறிய இயலாதவனாய் மேம்பட்ட அறிவும் கெட்டு வீரத்தையும் இழந்த நிலையைக் கண்டுமறைக்காட்டுப் பெருமானுடைய பூத கணங்கள் சிரித்தன.
342 | நாணஞ்சு கைய னாகி பாணஞ்சு முன் னிழந்து நீணஞ்சு தா(அ) னுணரா ஏணஞ்சு கைகள் செய்தா |
4.034.9 |
இருபது கையனாய்ப் பத்துத் தலைகளை உடைய இராவணன், நைந்து சாமகீதம் பாடும் எண்ணத்தை விடுத்து. தனக்குத் துணையாக உதவாத அறிவினால், பெரும்பயன் தரும் திருவைந் தெழுத்தைத் தியானம் செய்யாது, கயிலையைப் பெயர்க்க முற்பட்டானாக, இனி இந்தக் கைகள் எழுச்சியோடு எந்தச் செயலையும் செய்ய முடியாது போய்விடுமோ என்று அவன் அஞ்சுமாறு அழகிய மறைக்காடனார் அவன் கைகளை நசுக்கினார்.
343 | கங்கைநீர் சடையுள் வைக்கக் தென்கையான் றேர்க டாவிச் முன்கைமா நரம்பு வெட்டி அங்கைவா ளருளி னானூ |
4.034.10 |
கங்காதேவியைச் சிவபெருமான் சடையில் வைத்திருந்ததைக் கண்ட பார்வதி ஊடல் கொண்ட நேரத்தில், தென் இலங்கை மன்னனாகிய இராவணன் தேரைச் செலுத்திக் கயிலைமலை தேரின் இயக்கத்திற்கு இடையூறாயுள்ளது என்று அதனைப் பெயர்க்க முற்பட்டானாக, பெருமான் கால்விரல் ஒன்றினால் அவனைக் கயிலை மலையின் கீழ் நசுக்க, அவன்தன் நரம்புகளை எடுத்து யாழ் அமைத்து யாழ் இசையோடு வேதத்தைப்பாட அதனால் உள்ளம் மகிழ்ந்து அவனுக்குத் தாம் கையில் வைத்திருந்த சந்திரகாசம் என்ற வாளினை அருளினார். அப்பெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலம் அழகிய திருமறைக்காடாகும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.034.திருமறைக்காடு , இராவணன், னாரே, அவன், கயிலையைப், அளவில், தேரைச், உடைய, பெயர்க்க, தேர்க, அழகிய, திருமுறை, காடு, மலையைப், தானே, கயிலை, மிக்க, அவனை, திருமறைக்காடு, தான், நான்காம், உடையவன், வலிய, திருத்தலம், அதனைப், சிவபெருமான், தேவாரப், பழைய, மலையின், கைகள், முற்பட்டானாக, யாழ், கைகளை, மதிய, பெருமான், இருபது, செய்ய, தானை, பெயர்க்கத், மோதும், திருமறைக்காடனார், கொண்டு, அலைகள், திரைகண், அஞ்சுமாறு, அவனுடைய, யரக்கர், பெயர்த்த, அணிந்த, வலிமையை, செலுத்தி, முற்பட்ட, திருச்சிற்றம்பலம், தேரோட்டியை, அஃது, தான்ம, லையையூன்றலு, பதிகங்கள்