நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.033.திருமறைக்காடு

4.033.திருமறைக்காடு
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர்.
தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.
324 | இந்திர னோடு தேவ சுந்தர மானார் போலுந் சந்திர னோடு கங்கை மந்திர மானார் போலு |
4.033.1 |
மேம்பட்ட மறைக்காட்டுப் பெருமானார் இந்திரனோடு தேவர்களும் முனிவர்களும் புகழுகின்ற அழகராய், எல்லோரும் போற்றும் ஞானஒளியினராய்ச் சந்திரன் கங்கை பாம்பு என்பனவற்றைச் சடையில் வைத்தவராய், தம்மைத் தியானிப்பவரைக் காப்பவராய் உள்ளார்.
325 | தேயன நாட ராகித் பாயன நாட றுக்கும் காயன நாடு கண்டங் மாயன நாடர் போலு |
4.033.2 |
தெய்வந் தன்மையே வடிவான அத்தகைய வீட்டுலகத்தை உடைய தேவர்கள் தலைவரான மாமறைக்காடரைப் பலவாகப் பரவியுள்ள உலகப்பற்றுக்களைத் துறக்கும் பக்தர்களே! வழி பட வாருங்கள். நாடுகளையும் கண்டங்களையும் கோபிப்பனவாய பலகூறுகளாகப் பரவிவந்த ஆலகால விடத்தின் கோபத்தை மனத்துள் கொண்டு அதனை விழுங்கிய நீலகண்டராம் பெருமானார், திருமாலால் தேடப் படுபவராவார்.
326 | அறுமையிவ் வுலகு தன்னை வெறுமையின் மனைகள் வாழ்ந்து சிறுமதி யரவு கொன்றை மறுமையு மிம்மை யாவார் |
4.033.3 |
மாமறைக் காடனார் அழியும் இயல்பினை உடைய இவ்வுலகை நிலைபெற்றது என்று நினைத்துக் கொண்டு உலக வாழ்க்கை வழி நின்று வீணாக இல்வாழ்க்கை நடத்தி இரு வினைகளால் துன்புறுத்தப்படாத வகையில், பிறை பாம்பு கொன்றை இவற்றைச் சடையுள் வைத்த பெருமானாய், தம் அடியவர்களுக்கு மறுமை இன்பமும் இம்மை இன்பமும் வழங்குபவராவார்.
327 | கால்கொடுத் திருகை யேற்றிக் தோல்படுத் துதிர நீராற் ஏல்வுடைத் தாவ மைத்தங் மால்கொடுத் தாவி வைத்தார் |
4.033.4 |
மாமறைக்காடனார் கால்களைக் கொடுத்து கைகளை ஏற்றி எலும்புக் கழிகளை நிரைத்து மேலே புலாலை வேய்ந்து குருதிநீரைக் கலந்து தோலை தட்டிச் சுவரை வைத்து இரண்டு வாயில்களையும் ஏழு சன்னல்களையும் அமைத்து உயிர்க்கு ஒரு வீடுகட்டி அதனுக்கு மால் என்ற பெயர் குறிக்கும் மயக்கம், காற்று, வேட்கை என்பனவற்றைச் செல்வங்களாகக் கொடுத்து குடியேற்றி வைத்துள்ளார்.
328 | விண்ணினார் விண்ணின் மிக்கார் பண்ணினார் கின்ன ரங்கள் கண்ணினார் கண்ணி னுள்ளே மண்ணினார் வலங்கொண் டேத்து |
4.033.5 |
நிலவுலக மக்கள் நகரையே வலம் வந்து போற்றும் மகிமையுள்ள திருமறைக்காட்டுப் பெருமான் விண்ணுலகில் உளரேனும் விண்ணினும் மேம்பட்டவர். உலகம் வேதத்தை விரும்பி ஓதப்பண்ணியவர். பத்தர்கள் இசைப்பாடல்களைப் பாடியாடத் திருவுளம் பற்றியவர். அகக்கண்ணினுள்ளே ஞானவொளியை எய்தி திகழும் எம் தலைவரும் அவராவார்.
329 | அங்கையு ளனலும் வைத்தார் தங்கையில் வீணை வைத்தார் திங்களைக் கங்கை யோடு மங்கையைப் பாகம் வைத்தார் |
4.033.6 |
மாமறைக் காடனார் பார்வதி பாகராய், உள்ளங்கையில் தீயையும், ஒரு கையில், வீணையையும் வைத்தார். அறுவகைச் சமயங் களைப் படைத்து அடியவர்கள் தம் திருவடிகளை வழிபடுமாறு செய்தவராவார். விளங்குகிற சடையில் சந்திரனைக் கங்கையோடும் வைத்தவர் ஆவார்.
330 | கீதராய்க் கீதங் கேட்டுக் வேதராய் வேத மோதி ஏதராய் நட்ட மாடி மாதையோர் பாகம் வைத்தார் |
4.033.7 |
மாமறைக் காடனார் பார்வதி பாகராய், கங்கையிடம் விருப்பம் உடையவராய், இசைவடிவினராய்ப் பாடலைக் கேட்டு மகிழும் இசை உணர்வை உலகுக்கு வழங்கியவராய், வேதவடிவினராய், வேதம் ஓதுதலால் ஏற்படும் ஞான ஒளியை வழங்குபவராய், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஆதிகாரணராய்க் கூத்து நிகழ்த்துபவராய் உள்ளார்.
331 | கனத்தினார் வலியு டைய சினத்தினுட் சினமாய் நின்று தனத்தினைத் தவிர்ந்து நின்று மனத்தினுண் மாசு தீர்ப்பார் |
4.033.8 |
மாமறைக் காடனார் செருக்குற்ற அசுரர்களுடைய மும்மதில்களையும் கோபத்தின் கோபமாய்க் காட்சி வழங்கித் தீக்கு இரையாகுமாறு அழித்தவர்! உலகச் செல்வத்தின் பற்றுக்களை விடுத்துத் தம் திருவடிகளை முன்நின்று போற்றும் அடியார்களின் மனத்திலுள்ள களங்கங்களை எல்லாம் போக்குபவர்.
332 | தேசனைத் தேசன் றன்னைத் வாசனை செய்து நின்று காசினைக் கனலை யென்றுங் மாசினைத் தீர்ப்பர் போலு |
4.033.9 |
மாமறைக் காடனார் ஒளி வடிவினராய், எல்லா உலகங்களையும் உடையவராய் உள்ளார். அவரை நறுமணப் பொருள்களைக் கொண்டு வழிபடும் அடியார்களே! நாள்தோறும் வணங்குங்கள். பொன்போல ஒளி வீசுபவராய்க் கனல் போல மாசுகளை எரித்து ஒழிப்பவராய் உள்ள அப்பெருமானாரை என்றும் தியானிப்பவருடைய மாசுகளை அவர் அடியோடு போக்குபவராவார்.
333 | பிணியுடை யாக்கை தன்னைப் பணியுடைத் தொழில்கள் பூண்டு துணிவுடை யரக்க னோடி மணிமுடிப் பத்தி றுத்தார் |
4.033.10 |
கயிலையைப் பெயர்த்து அற்புறப்படுத்தலாம் என்ற துணிவினை உடைய இராவணன் விரைந்து சென்று கயிலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் பார்வதி. அஞ்ச, அவன்தலைகள் பத்தனையும் நசுக்கியவர் மாமறைக் காடனார், பலபற்றுக்களையும் உடைய இவ்வுடல் தொடர்புக்கேதுவான பிறவிப் பிணியைப் போக்கி ஒழிக்கக் கருதினால், தம் பணிவைப் புலப்படுத்தலுக்கு உரிய இறை தொண்டினை மேற்கொண்டு அடியவர்கள் விருப்பத்தோடு மாமறைக்காடனாரை வழிபடுங்கள்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.033.திருமறைக்காடு , னாரே, மாமறைக், காடனார், உடைய, சடையுள், கங்கை, போற்றும், கொண்டு, பார்வதி, வைத்தார்மாமறைக், திருமுறை, உள்ளார், திருமறைக்காடு, போலுமாமறைக், நான்காம், பாகராய், பாகம், விரும்பி, அடியவர்கள், திருவடிகளை, கயிலையைப், மாசுகளை, எல்லா, உடையவராய், கொடுத்து, இன்பமும், சடையில், என்பனவற்றைச், பாம்பு, சோதி, மானார், னோடு, பெருமானார், வைத்த, பதிகங்கள், திருச்சிற்றம்பலம், தேவாரப்