நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.105.திருவதிகைவீரட்டானம்

4.105.திருவதிகைவீரட்டானம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர்.
தேவியார் - திருவதிகைநாயகி.
1002 | மாசிலொள் வாள்போன் மறியு மணிநீர்த் ஊசலை யாடியங் கொண்சிறை யன்ன பாசறை நீலம் பருகிய வண்டுபண் வீசுங் கெடில வடகரைத் தேயெந்தை |
4.105.1 |
குற்றமற்ற ஒளிபொருந்திய வாள்போல ஏறி மடங்கும், பளிங்கு போன்ற நீர் அலைகளின் தொகுதியாகிய ஊசலை ஆடி அங்கு ஒளி பொருந்திய சிறகுகளை உடைய அன்னம் உறங்கத் தொடங்கினால் பசிய இலைகளை உடைய கொடிகளில் உள்ள நீலமலர்களில் தேனைப் பருகி வண்டுகள் பண்ணினைப் பாடுதலைக் கேட்டுக் கெடிலநதி பரிசுப்பொருளாக மணி முதலியவற்றை அவற்றை நோக்கி வீசும் வடகரைக்கண் எம்பிரானுடைய அதிக வீரட்டம் உள்ளது.
1003 | பைங்காற் றவளை பறைகொட்டப் பாசிலை அங்காற் குவளைமே லாவி யுயிர்ப்ப செங்காற் குருகிவை சேருஞ் செறிகெடி வெங்காற் குருசிலை வீர னருள்வைத்த |
4.105.2 |
விரும்பத்தக்க அடிப்பகுதியை உடைய பொன்நிறமான மேருமலையாகிய வில்லினை உடைய வீரனாகிய சிவபெருமான் திரிபுரத்தை அழித்துத் தன் அருளை நிலைநாட்டிய அதிகை வீரட்டம், பசிய கால்களை உடைய தவளைகள் பறை போல ஒலி செய்யப் பசிய இலைகளை உடைய நீர்தங்கும் பள்ளத்தில் அழகிய தண்டினை உடைய குவளை மலர்கள் மணம் வீச, அருகில் உலவும் சிவந்த கால்களை உடைய குருகுகள் குவளைமலர்களை அடையும் நீர் செறிந்த கெடிலநதியின் வடகரையில் உள்ளது.
1004 | அம்மலர்க் கண்ணிய ரஞ்சனஞ் செந்துவர் வெம்முலைச் சாந்தம் விலைபெறு மாலை தம்மருங் குற்கிரங் கார்தடந் தோண்மெலி விம்மு புனற்கெடி லக்கரைத் தேயெந்தை |
4.105.3 |
அழகிய மலர் போன்ற மை எழுதிய கண்ணினராய்ச் சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய மகளிர் விரும்பத்தக்க முலைகளுக்குச் சந்தனமும் விலை மதிப்புடைய மாலைகளும் அணிந்தவராய், தம் இடைக்கு இவை பாரமாகுமே என்ற இரக்கம் இல்லாவராய்த் தம் பெரிய தோள்கள் நீந்துதலால் மெலிவு அடையும்படி நீராடுதலால் ஒலிக்கும் நீரை உடைய கெடிலநதியின் வடகரையில் உள்ளது எம்பிரானுடைய அதிகை வீரட்டம்.
1005 | மீனுடைத் தண்புனல் வீரட்ட ரேநும்மை யானுடைச் சில்குறை யொன்றுள தானறுந் தேனுடைக் கொன்றைச் சடையுடைக் கங்கைத் கூனுடைத் திங்கட் குழவியெப் போதுங் |
4.105.4 |
மீன்களை உடைய குளிர்ந்த புனல் பாயும் அதிகையிலுள்ள வீரட்டரே! உம்மை அடியேன் வேண்டுகின்ற சிறிய தேவை ஒன்று உள்ளது. குளிர்ந்த எருக்கம் பூ வொடு தேனை உடைய கொன்றைப் பூவை அணிந்த சடைக்கண் தேக்கி வைத்துள்ள கங்கையின் அலைகளில் தவழும் பிறைச் சந்திரனை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவேண்டும். அப்பிறை கங்கைவெள்ளத்தில் முழுகிப் போகாதபடி கவனிக்கவேண்டும்.
1006 | ஆரட்ட தேனு மிரந்துண் டகமக வேரட்ட நிற்பித் திடுகின்ற தால்விரி சூரட்ட வேலவன் றாதையைச் சூழ்வய வீரட்டத் தானை விரும்பா வரும்பாவ |
4.105.5 |
விரிந்த நீரை உடைய கடலில் சூரபதுமனை அழித்த வேலை ஏந்திய முருகனுடைய தந்தையாய் வயலால் சூழப்பட்ட அதிகை வீரட்டப் பெருமானைப் பண்டைப் பிறப்பில் வழிபட்டு உய்ய விரும்பாத கொடிய தீவினைப் பயனாகிய வேதனை இப்பிறப்பில், வியர்வை சொட்டச் சொட்ட வீடு வீடாகத் திரிந்து யாவர் சமைத்த பொருளாயிருப்பினும் அதனைப் பிச்சை யேற்று உண்ணுமாறு செய்துள்ளது.
1007 | படர்பொற் சடையும் பகுவா யரவும் சுடலைப் பொடியுமெல் லாமுள வேயவர் கெடிலக் கரைத்திரு வீரட்ட ராவர்கெட் நடலைக்கு நற்றுணை யாகுங்கண் டீரவர் |
4.105.6 |
அவர் தௌந்த நீரை உடைய கெடில நதியில் வடகரையில் அமைந்த அதிகைப் பதியின் வீரட்டராவர். பரவின பொன் போன்ற ஒலியுடைய சடையும், பிளந்த வாயை உடைய பாம்பும், குளிர்ந்த பிறையும் சுடுகாட்டுச் சாம்பலும் எல்லாம் அவருக்கு அடையாளங்களாக உள்ளன. அவருடைய திருநாமங்கள் அவரை அடைக்கலமாக அடைந்தவர்களுடைய துன்பத்தைத் தீர்க்கும் பெரிய துணையாகும். அவ்வாறாகவும் அறிவுகெட்ட அடியேன் அவரைத் தொடர்ந்து பற்றிக் கொள்ள முயலாமல் விட்டு ஒழிந்தேனே.
1008 | காளங் கடந்ததொர் கண்டத்த ராகிக்கண் நாளங் கடிக்கொர் நகரமு மாதிற்கு தாளங்கள் கொண்டுங் குழல்கொண்டும் யாழ்கொண்டுந் வேளங்கள் கொண்டும் விசும்புசெல் வாரவர் |
4.105.7 |
பார்வதியின் பொருட்டு விடத்தை இருத்திய நீலகண்டராகி, வானத்திலே உலவிச் செல்லும் திரிபுர அசுரரைத் திரிபுரத்தோடு அழித்த வீரத்தானத்தை உடைய பெருமான். நன்கு பொருந்திய தாளங்கள், குழல், யாழ் இவற்றைக் கொண்டு பாம்புகளைச் சூடி, காலையிலே விளக்கமாக உறைவதற்கு அதிகையாகிய ஒரு நகரமும் உடையராய் அவ்வாறே பாய்கால்களை உடைய கெடிலநதிக்கும் உரியவராவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.105.திருவதிகைவீரட்டானம் , உடைய, உள்ளது, பசிய, திருமுறை, வடகரையில், குளிர்ந்த, நீரை, அதிகை, வீரட்டம், திருவதிகைவீரட்டானம், பெரிய, பதிகங்கள், கெடிலநதியின், தேவாரப், வீரட்ட, சடையும், அழித்த, அடியேன், நான்காம், சிவந்த, அழகிய, இலைகளை, தேயெந்தைவீரட்டமே, நீர், எம்பிரானுடைய, கெடில, கால்களை, விரும்பத்தக்க, திருச்சிற்றம்பலம், பொருந்திய