மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.081.திருத்தோணிபுரம்
3.081.திருத்தோணிபுரம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தோணியப்பர்.
தேவியார் - திருநிலைநாயகியம்மை.
3668 | சங்கமரு
முன்கைமட மாதையொரு அங்கமுடன் மேலுறவ ணிந்துபிணி எங்கள்பெரு மானிடமெ னத்தகுமு துங்கமணி யிப்பிகள் கரைக்குவரு |
3.081.1 |
முன்கையில் சங்குவளையல் அணிந்த உமாதேவியைத் தன்னுடைய உடம்பின் ஒரு பாகமாக விருப்பத்துடன் அமர்த்தி, எலும்பைத் தன் உடம்பில் நன்கு பொருந்தும்படி அணிந்து, தன்னைத் தியானிப்பவரது மும்மலப் பிணிப்பு நீங்கும்படி அருள்புரிகின்ற எங்கள் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது அலைவீசுகின்ற கடலினின்றும் முத்துக்களும், இரத்தினங்களும், சங்குப்பூச்சிகளும் கரைக்கு வந்து சேருகின்ற திருத்தோணிபுரம் ஆகும்.
3669 | சல்லரியி
யாழ்முழவ மொந்தைகுழ கல்லரிய மாமலையர் பாவையொரு அல்லெரிகை யேந்திநட மாடுசடை சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர் |
3.081.2 |
சல்லரி, யாழ், முழவம், மொந்தை, குழல், தாளம் முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, பெரிய மலையாகிய இமயமலையரசரின் அரிய மகளாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகப் பிரியாமல் கொண்டு, கையில் அனலை ஏந்தி இரவில் நடனமாடுகின்ற, சடைமுடியையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம், சொல்லுதற்குரிய பெருமையுடைய தொண்டர்கள் போற்ற நாளும் புகழ் வளரும் திருத்தோணிபுரம் ஆகும்.
3670 | வண்டரவுகொன்றைவளர்
புன்சடையின் பண்டரவு தன்னரையி லார்த்தபர கண்டரவ வொண்கடலி னஞ்சமமு தொண்டரவர் மிண்டிவழி பாடுமல்கு |
3.081.3 |
வண்டுகள் மொய்த்து ஊதுகின்ற கொன்றைமலர் மாலையை அணிந்த வளர்ந்த சிவந்த சடையில் பிறைச்சந்திரனையும் தரித்து, பண்டைக்காலத்தில் இடையில் பாம்பைக் கச்சாகக் கட்டிய மேலான இடத்திலுள்ள சிவபெருமான், திருமால் முதலியோர் தனது அருளின்றி அமுதம் கடையச் சென்ற தோடம் அவரைவிட்டு நீங்குமாறு, திருவருள் செய்து, அலைகளின் ஆரவாரத்தையுடைய சிறந்த பாற்கடலினின்றும் எழுந்த நஞ்சினை அமுதமென உண்ட கடவுளாய் வீற்றிருந்தருளும் ஊர், திருத்தொண்டர்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செய்கின்ற வழிபாடுகள் மிகுந்த திருத்தோணிபுரம் ஆகும்.
3671 | கொல்லைவிடை
யேறுடைய கோவணவ ஒல்லையுடை யானடைய லாரரண வில்லையுடை யான்மிக விரும்புபதி சொல்லையடை வாகவிடர் தீர்த்தருள்செய் |
3.081.4 |
சிவபெருமான் முல்லைநிலத்ததாகிய இடபவாகனத்தை யுடையவன். கோவண ஆடை அணிந்தவன். அடிய வர்கள் பாடிப் போற்றித் தொழும் பாமாலைகளை உடையவன். தொண்டர்கள் பக்தியுடன் ஒலிக்கும் அரநாமமும், சிவநாமமும் ஓதப்படும் பண்பினன். பகைவரது மதில்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்த மேருவை வில்லாக உடையவன். அப் பெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது, இறைவனையே பற்றுக்கோடாகக் கொண்டு மேன்மேலும் பக்தி செய்கின்ற தொண்டர்களின் வேண்டு கோள்களை ஏற்று, அவர்களின் துன்பங்களைத் தீர்த்து அருள்செய்கின்ற திருத்தோணிபுரம் ஆகும்.
3672 | தேயுமதி
யஞ்சடையி லங்கிடவி காயுமடு திண்கரியி னீருரிவை தாயென நிறைந்ததொரு தன்மையினர் தூயமறை யாளர்முறை யோதிநிறை |
3.081.5 |
கலைகள் தேய்ந்து அழியும் நிலையிலிருந்த சந்திரனைச் சடைமுடியில் தரித்து மீண்டும் விளங்கி ஒளிருமாறு செய்தவர் சிவபெருமான். மலைகள் மிக்க காட்டில் திரிகின்ற சினமுடைய, கொல்லும் தன்மையுடைய வலிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவர். தம்மையே சிந்தித்திருப்பவர்கட்குத் தாயைப் போலக் கருணை காட்டிப் பாதுகாப்பவர். எங்கும் நிறைந்த தன்மையர். அடியவர்கட்கு நன்மை புரிதலையே தம் கடனாகக் கொண்ட அப்பெருமானார் வீற்றிருந்தருளுகின்ற இடம், தூய்மையுடைய வேதியர்கள் வேதங்களை ஓதி நிறைகின்ற திருத்தோணிபுரம் ஆகும்.
3673 | பற்றலர்த
முப்புரமெ ரித்தடிப குற்றமதொ ழித்தருளு கொள்கையினன் பற்றவனி சைக்கிளவி பாரிடம துற்றசடை யத்தனுறை கின்றபதி |
3.081.6 |
சிவபெருமான் பகைவர்களின் முப்புரங்களை எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். தம் திருவடிகளைப் பணிந்து வணங்குபவர்களின் குற்றங்களை ஒழித்துத் திருவருள் புரியும் கொள்கையினையுடையவர். பாடைகள் மலிந்த சுடுகாட்டில் பற்றுடையவர். பூதகணங்கள் இசைப் பாடல்களைத் துதித்துப்பாட நடனமாடுபவர். அடர்ந்து வளர்ந்த சடையையுடைய, அனைத்துயிர்க்கும் தந்தையாகிய சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்ற தலம் திருத்தோணிபுரம் ஆகும்.
3674 | பண்ணமரு
நான்மறையர் நூன்முறை பெண்ணமரு மேனியினர் தம்பெருமை திண்ணமரும் வல்வினைக டீரவருள் துண்ணென விரும்புசரி யைத்தொழிலர் |
3.081.7 |
சிவபெருமான் பண்ணிசையோடு கூடிய நான்கு வேதங்களை அருளியவர். வேதாகம சாத்திரங்களின் முடிவான கருத்தை, மோனநிலையில் சின்முத்திரையால் தெரிவித்தருளிய திருமார்பையுடையவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். தமது பெருமை பேசும் அடியவர்களின் தீர்ப்பதற்கரிய வல்வினைகளைத் தீர்த்து அருளியவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது சரியையாதி தொழில்களை விரைவுடன் பணிசெய்தலில் விருப்புடைய மெய்த்தொண்டர் வாழ்கின்ற திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.
3675 | தென்றிசையி
லங்கையரை யன்றிசைகள் வென்றிசை புயங்களை யடர்த்தருளும் ஒன்றிசையி யற்கிளவி பாடமயி துன்றுசெய வண்டுமலி தும்பிமுர |
3.081.8 |
தென்திசையில் விளங்கிய இலங்கை மன்னனான இராவணன் எல்லாத் திசைகளிலும் திக்விஜயம் செய்து தனது வீரத்தை நிலைநாட்டி, வெற்றி கொண்ட தோள்களை நெருக்கிப் பின் அருளும் புரிந்த வித்தகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், இசையுடன் குயில்கள் பாட, மயில்கள் ஆட, வளம் பொருந்திய சோலைகளின் மலர்களிலுள்ள தேனை உண்ணும்பொருட்டு, வண்டுகளும், மிகுந்த தும்பிகளும் சுருதிகூட்டுவது போல் முரல்கின்ற திருத்தோணிபுரம் ஆகும்.
3676 | நாற்றமிகு
மாமலரின் மேலயனு ஆற்றலத னான்மிகவ ளப்பரிய ஊற்றமிகு கீழுலகு மேலுலகு தோற்றமிக நாளுமரி யானுறைவு |
3.081.9 |
நறுமணம் கமழும் தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் தேட முயலத் தங்களது ஆற்றலால் அளந்தறிதற்கு அரிதாகும் வண்ணம், நெருப்புப் பிழம்பாகி, கீழுலகு மேலுலகு ஆகியவற்றை வியாபித்து ஓங்கியெழுந்த தன்மையுடைய தோற்றத்தை உடையவனாய் ஒருநாளும் அவர்கள் அறிதற்கரியனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருத்தோணிபுரம் ஆகும்.
3677 | மூடுதுவ
ராடையினர் வேடநிலை கேடுபல சொல்லிடுவ ரம்மொழிகெ காடுபதி யாகநட மாடிமட றோடுகுழை பெய்தவர்த மக்குறைவு |
3.081.10 |
உடலை மூடி மறைக்கின்ற துவராடையணிந்த புத்தர்களும், தமது வேடமாகிய ஆடையணியாத் தன்மையினைப் போல தமது அறிவும் உளது எனக் காட்டும் அறிவிலிகளாகிய சமணர்களும் தீமை விளைவிக்கக் கூடிய பல சொற்களைக் கூறுவர். அத்தீய மொழிகளை நீக்கி, சுடுகாட்டைத் தமது இருப்பிடமாகக் கொண்டு, நடனமாடி, உமாதேவியோடு கூடி, இருகாதுகளிலும் முறையே தோடும், குழையும் அணிந்தவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருத்தோணிபுரம் ஆகும்.
3678 | துஞ்சிருளி
னின்றுநட மாடிமிகு மஞ்சனைவ ணங்குதிரு ஞானசம் தஞ்சமென நின்றிசைமொ ழிந்தவடி வஞ்சமிலர் நெஞ்சிருளு நீங்கியருள் |
3.081.11 |
அனைத்துலகும் ஒடுங்கிய பிரளயம் எனப்படும் பேரிருளில் நின்று நடனமாடுபவனாய்ப், புகழ்மிகுந்த திருத்தோணிபுரத்தை விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை வணங்கித திருஞானசம்பந்தர் அருளிய இச்சொல்மாலைகளே தமக்குப் பற்றுக்கோடாகும் என்ற கருத்தில் நிலைத்துநின்று, அதனை இசையுடன் ஓதும் அடியவர்கள் நெறிதவறுதலும் அதற்குக் காரணமான வஞ்சனையும் இல்லாதவர்கள். அவர்கள் நெஞ்சிலுள்ள அறியாமை என்னும் இருள் நீங்கப் பெற்று, இறைவனது அருள் பெற்றுச் சீலத்துடன் வளர்வர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.081.திருத்தோணிபுரம் , திருத்தோணிபுரம், சிவபெருமான், தோணிபுர, மாமே, ஆகும், வீற்றிருந்தருளும், இடம், தமது, செய்து, திருமுறை, வீற்றிருந்தருளுகின்ற, கொண்டு, உமாதேவியைத், தன்மையுடைய, கொண்ட, செய்தவர், தீர்த்து, சாம்பலாகுமாறு, இசையுடன், கானிற், தலம், கூடிய, எரிந்து, என்னும், அருளியவர், மேலுலகு, கீழுலகு, வேதங்களை, தரித்து, விரும்பி, அணிந்த, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், மூன்றாம், தேவாரப், திருமேனியில், தொண்டர்கள், மிகுந்த, மாலை, செய்கின்ற, திருவருள், வளர்ந்த, தனது, உடையவன்