மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.082.திருஅவளிவணல்லூர்
3.082.திருஅவளிவணல்லூர்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாட்சிநாயகர்.
தேவியார் - சவுந்தரநாயகியம்மை.
3679 | கொம்பிரிய
வண்டுலவு கொன்றைபுரி தம்பரிசி னோடுசுடு நீறுதட கம்பரிய செம்பொனெடு மாடமதில் அம்பெரிய வெய்தபெரு மானுறைவ |
3.082.1 |
இறைவர் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மாலை அணிந்தவர். முப்புரிநூல் அணிந்த திருமார்பினர். திருவெண்ணீறு பூசியவர். இடப வாகனத்தில் ஏறி வீற்றிருப்பவர். ஆகாயத்தில் திரிந்த பொன், வெள்ளி, இரும்பு ஆகிய கோட்டைகளின் மதில்களை, மேருமலையை வில்லாகக் கொண்டு அம்பு எய்து எரித்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலம் திரு அவளிவணல்லூர் ஆகும்.
3680 | ஓமையன
கள்ளியன வாகையன ஈமமெரி சூழ்சுடலை வாசமுது தூய்மையுடை யக்கொடர வம்விரவி ஆமையொடு பூணுமடி கள்ளுறைவ |
3.082.2 |
ஓமை, கள்ளி, வாகை முதலிய மரங்கள் நிறைந்ததும், கோட்டான்கள் கத்தும் ஓசையும் உடையதும் ஆன கொள்ளி நெருப்புச் சூழ்ந்த சுடலை வாசமுடைய சுடுகாட்டில் திருநடனம் செய்பவர் சிவபெருமான். தூய்மையான எலும்பும், பாம்பும் கலந்து ஒளி துலங்க, ஆமையோட்டினை ஆபரணமாக அணிந்துள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும்.
3681 | நீறுடைய
மார்பிலிம வான்மகளொர் கூறுடைய வேடமொடு கூடியழ ஏறுடைய ரேனுமிடு காடிரவி ஆறுடைய வார்சடையி னானுறைவ |
3.082.3 |
சிவபெருமான் திருநீறணிந்த தம் திருமார்பில் இமவான் மகளாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு அர்த்தநாரி என்னும் அழகிய கோலத்தில் இடபவாகனத்தில் வீற்றிருப்பவர். சுடுகாட்டில் இரவில் நடனம் ஆடுபவர். கங்கையை நீண்ட சடையில் தாங்கியவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும்.
3682 | பிணியுமிலர்
கேடுமிலர் தோற்றமில பணியுமடி யார்களன பாவமற துணியுடைய தோலுமுடை கோவணமு அணியுமழ காகவுடை யானுறைவ |
3.082.4 |
பிணியும், இறப்பும், பிறப்பும் இல்லாதவர் என்று உலகத்தவரால் போற்றப் படும் சிவபெருமான் தம்மை வணங்கும் அடியவர்களின் பாவம் யாவும் நீங்குமாறு செய்து, இன்னருள் புரிபவர். கிழிந்த தோலையும், கோவணத்தையும் ஆடையாக உடுத்ததுடன், பாம்பை அழகிய ஆபரணமாக அணிந்து விளங்கும் அவர் வீற்றிருந்தருளுவது திருஅவளிவண்ணலூர் என்னும் திருத்தலமாகும்.
3683 | குழலின்வரி
வண்டுமுரன் மெல்லியன கழலின்மிசை யிண்டைபுனை வார்கடவு தொழலும்வழி பாடுமுடை யார்துயரு அழலுமழு வேந்துகையி னானுறைவ |
3.082.5 |
குழலின் ஓசைபோல் வண்டுகள் ஒலி எழுப்பி மொய்க்கும் மெல்லிய அழகிய மலர்களைக் கொண்டு இண்டைமாலைகட்டி, சிவபெருமான் திருவடிகளில் சார்த்தித் தேவர்கள் எல்லாம் ஒன்றுகூடி, "இவரே முழுமுதற் கடவுள்" என்று தொழுது போற்றுவர். அத்தகைய வழிபாட்டைச் செய்பவர்கட்கு, உள்ளத்தால் வரும் துயரும், உடலால் வரும் நோயும் இல்லை. அவ்வாறு அடியவர்கட்கு அருள்புரியும் இறைவன், நெருப்புப்போல் ஒளிவீசும் மழுவேந்திய கையுடையவனாய் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும்.
3684 | துஞ்சலில
ராயமரர் நின்றுதொழுப நஞ்சுமிட றுண்டுகரி தாயவெளி மஞ்சுறநி மிர்ந்துமைந டுங்கவக அஞ்சமத வேழவுரி யானுறைவ |
3.082.6 |
உறக்கமின்றித் தேவர்கள் இடையறாது தம்மைத் தொழுது போற்ற, நஞ்சினையுண்டு அவர்களைக் காத்து அருள் செய்து, கண்டம் கரியதாகவும் ஏனைய உருவம் படிகம் போல் வெண்மையாகவும் விளங்குபவர் சிவபெருமான். மதம் பிடித்த யானை அஞ்சும்படி, வானளாவ நிமிர்ந்து அதன் தோலை உரித்து, உமை நடுங்கத் தம் மார்பில் போர்த்தவர். அப்பெருமான் வீற்றிருந் தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும்.
3685 | கூடரவ
மொந்தைகுழல் யாழ்முழவி பீடரவ மாகுபட ரம்புசெய்து காடரவ மாகுகனல் கொண்டிரவில் ஆடரவ மார்த்தபெரு மானுறைவ |
3.082.7 |
மொந்தை, குழல், யாழ், முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, எண்தோள்வீசி ஆடும்போது சடையிலுள்ள கங்கைநீர் அம்பு போலப் பாய, பெரிய இடப வாகனத்தோடு, சுடுகாட்டில் ஓசையுடன் எரியும் நருப்பையேந்தி இரவில் நடனமாடி, படமெடுத்தாடும் பாம்பைக் கச்சாகக் கட்டிய சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலம் ஆகும்.
3686 | ஒருவரையு
மேல்வலிகொ டேனெனவெ பெருவரையின் மேலொர்பெரு மானுமுளனோ கருவரையு மாழ்கடலு மன்னதிறல் அருவரையி லூன்றியடர்த் தானுறைவ |
3.082.8 |
எனக்கு மேல் ஒருவரையும் வலிமையுடையவராகக் காணப்பொறேன் என வீரத்துடன் எழுந்து, இக்கயிலைமலையின் மேல்ஒரு பெருமான் உளனோ என வெகுண்டு, மலையைப் பெயர்த்த பெரியமலை போன்றும், ஆழமான கடல்போன்றும் வலிமையுடைய அரக்கனான இராவணனைத் தன்காற் பெருவிரலை ஊன்றி, அம்மலையின்கீழ் நெரியும்படி செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும் .
3687 | பொறிவரிய
நாகமுயர் பொங்கணைய வெறிவரிய வண்டறைய விண்டமலர் செறிவரிய தோற்றமொடு வாற்றன்மிக அறிவரிய னாயபெரு மானுறைவ |
3.082.9 |
புள்ளிகளையுடைய நெடிய பாம்பை உயர்ந்த படுக்கையாகக் கொண்டு விளங்குகின்ற புகழ்மிக்க திருமாலும், வாசனையறிகின்ற கீற்றுகளையுடைய வண்டு ஒலித்து ஊத, அதனால் விரிந்த தாமரைமேல் வசிக்கின்ற பிரமனும், பிறர்க்கு அரிய வலிமையுடைய தோற்றத்தோடு தமது ஆற்றல் முழுவதையும் செலுத்தித் தேடியும், சிறிதளவும் அறிவதற்கு அரியவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும்.
3688 | கழியருகு
பள்ளியிட மாகவடு வழியருகு சாரவெயி னின்றடிசி பழியருகி னாரொழிக பான்மையொடு அழியருவி தோய்ந்தபெரு மானுறைவ |
3.082.10 |
ஆற்றங்கழி அருகிலிருக்கும் சமணப்பள்ளி இடமாக நின்று, சமைத்து உண்பதற்குரிய மீன்களைக் கவரும் சமணர்களும், தெருக்களில் உச்சிவேளையில் நின்று உணவு ஏற்க வரும் புத்தர்களும் கூறும் பழிக்கு அடுத்துச் சொல்வதாகிய பாவத்தை உடையவர்கள். பக்தியால் தொழுதேத்தும் அடியவர்கள் கண்களில் இருந்து தோன்றும் அருவி போன்ற நீரில் தோய்ந்து விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும்.
3689 | ஆனமொழி யானதிற லோர்பரவு போனமொழி நன்மொழி களாயபுகழ் ஞானமொழி மாலைபல நாடுபுகழ் தேனமொழி மாலைபுகழ் வார்துயர்க |
3.082.11 |
பொருளுடைய புகழ்மொழிகளால் மெய்ஞ்ஞானிகள் துதிக்கின்ற அவளிவணல்லூர் என்னும் திருத்தலத்தைத் திசைகள் தோறும் பரவிய நன்மொழியால் புகழ்போற்றும் தோணிபுரத்தில் அவதரித்த சிவஞானங் கமழ்கின்ற திருப்பதிகங்களால் நல்ல நாடுகளெல்லாம் புகழ்கின்ற ஞானசம்பந்தன் அருளிய தேன்போன்ற இனிமையான மொழிகளால் ஆன இப்பாமாலையால் புகழ்ந்து போற்றுபவர் துயரற்றவர் ஆவர். அவர்களைத் தீமை அணுகாது.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.082.திருஅவளிவணல்லூர் , திருஅவளிவணல்லூர், என்னும், சிவபெருமான், தவளிவண, லூரே, திருத்தலமாகும், வீற்றிருந்தருளுவது, கொண்டு, செய்து, மானுறைவ, அப்பெருமான், சுடுகாட்டில், திருமுறை, வரும், அழகிய, னானுறைவ, நின்று, வாரும், வலிமையுடைய, இரவில், தொழுது, தேவர்கள், விளங்கும், பாம்பை, யானுறைவ, முதலிய, திருச்சிற்றம்பலம், வண்டுகள், பதிகங்கள், தேவாரப், மூன்றாம், மொய்க்கும், வீற்றிருப்பவர், ஆகும், அவளிவணல்லூர், வீற்றிருந்தருளும், அம்பு, ஆபரணமாக