மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.080.திருவீழிமிழலை
3.080.திருவீழிமிழலை
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
3657 | சீர்மருவு
தேசினொடு தேசமலி தார்மருவு கொன்றையணி தாழ்சடையி பார்மருவு பங்கயமு யர்ந்தவயல் கார்மருவு வெண்கனக மாளிகை |
3.080.1 |
சிறப்புப் பொருந்திய சிவஒளியோடு, தேசங்களிலெல்லாம் புகழ்பெற்ற செல்வன் கழலேத்தும் செல்வத்தை உடைய அந்தணர்கள் வணங்குகின்ற தாழ்ந்த சடையையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் வெற்றிமிகும் பதியாவது, பூமியில் பொருந்திய தாமரை மலர்கள் மலர்ந்த வயல்களும், மேகம் சூழ்ந்த வெண்மையான, செல்வ வளமிக்க மாளிகைகளும் அழகுபெற விளங்குகின்ற திருவீழிமிழலையாகும்.
3658 | பட்டமுழ
விட்டபணி லத்தினொடு சிட்டர்கள்ச யத்துதிகள் செய்யவருள் மட்டுலவு செங்கமல வேலிவயல் விட்டுலவு தென்றல்விரை நாறுபதி |
3.080.2 |
கொட்டும் முழவின் ஓசையும், ஊதும் சங்கின் ஒலியும், பல வேதங்களை ஓதுகின்ற பணியை மேற்கொள்ளும், சீலமுடைய அந்தணர்கள் வெல்க என்னும் துதிப்பாடல்கள் பாட அருள்செய்பவர் அழல் போன்ற சிவந்த மேனியுடைய சிவபெருமான். அவர் வீற்றிருந்தருளும் ஊரானது நறுமணம் கமழும் செந்தாமரை மலர்கள் வேலி போன்று சூழ்ந்து விளங்குவதும், செந்நெல் பெருகும் வயல்வளமிக்கதும், வளம் பொருந்திய சோலைகள் சூழ்ந்ததும், தென்றலின் நறுமணம் கமழ்வதும் அந்தணர்கள் வசிக்கின்றதுமான திருவீழிநகர் என்னும் பதியாகும்.
3659 | மண்ணிழிசு
ரர்க்குவள மிக்கபதி கெண்ணிழிவி லின்பநிகழ் வெய்தவெழி பண்ணிழிவி லாதவகை பாடமட விண்ணிழிவி மானமுடை விண்ணவர்பி |
3.080.3 |
தேவலோகத்திலிருந்து பூவுலகிற்கு வந்த தேவர்கட்கு வளமிக்க பதி, மற்றுமுள்ள மன்னுயிர்கட்கு எண்ணற்ற இன்பங்களைத் தரும்பதி, அழகிய சோலைகளில் வண்டுகள் பாட, இள மயில்கள் நடனமாட, அழகிய தேவலோகத்திலிருந்து கொண்டு வரப்பட்டு வழிபடப்படும் விமானமுடைய கோயிலில் தேவர்களின் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் சிறப்புடைய திரு வீழிமிழலை என்னும் தலமாகும்.
3660 | செந்தமிழர்
தெய்வமறை நாவர்செழு டந்தமில்கு ணத்தவர்க ளர்ச்சனைகள் கொந்தலர்பொ ழிற்பழன வேலிகுளிர் வெந்திறல்வி ளங்கிவளர் வேதியர்வி |
3.080.4 |
பக்தியுடன் இனிய செந்தமிழ்ப் பாக்கள் பாடும் அன்பர்களும், தெய்வத் தன்மையுடைய வேதம் ஓதும் நாவையுடைய அந்தணர்களும், சிறந்த நற்பயன் தருவதாகிய கலைகளைத் தெரிந்த அர்ச்சனைகள் செய்ய, சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் ஊரானது, கொத்தாக மலரும் பூக்கள் நிறைந்த சோலைகளும், வேலி சூழ்ந்த வயல்களும், குளிர்ந்த நீர்நிலைகளும் வளம்பெருகி விளங்க, வேள்வி இயற்றும் வேத விற்பன்னர்கள் விரும்புகின்ற பதியாகிய திருவீழிமிழலையாகும்.
3661 | பூதபதி
யாகியபு ராணமுனி பேதமதி லாதவகை பாகமிக மாதவர்க ளன்னமறை யாளர்கள் ஏதமதி லாதவகை யின்பமமர் |
3.080.5 |
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என விளங்குகின்ற ஐம்பூதங்கட்கும் பதியாகிய சிவபெருமான் பழமையான தவக் கோலம் பூண்டவர். அவர் புண்ணிய தேவியாகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது மாதவர்களும், அந்தணர்களும் அழலோம்பி வளர்க்கும் வேள்வியினால் பசி, பிணி, வறுமை, மழையின்மை முதலிய தீங்கு நேராமலும், உண்டி, நோயின்மை, செல்வம், பருவ மழை முதலிய நன்மை நிகழவும், மாந்தர் மகிழ்ச்சியடைகின்ற திருவீழிமிழலை ஆகும்.
3662 | மண்ணின்மறை
யோர்மருவு வைதிகமு தெண்ணில்பொரு ளாயவை படைத்தவிமை நண்ணிவரு நாவலர்க ணாடொறும் விண்ணுலவு மாளிகை நெருங்கிவளர் |
3.080.6 |
இப்பூவுலகில் அந்தணர் ஆற்றி வருகின்ற வைதிக தருமங்களையும், மகா முனிவர் ஒழுகிவருகின்ற தவநெறிகளையும், மற்றும் உலகியல் நெறி பற்றிய பல்வகை அறங்களையும் படைத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, நாடிவருகின்ற புலவர்கள் நாள்தோறும்வளர்க்க வளர்ந்து வரும் புகழையுடையதும், வானளாவிய மாளிகையின் நிறைந்து செல்வம் வளர்வதும், ஓங்கிய மதிலையுடையதுமான திருவீழிமிழலை ஆகும். கு - ரை: வைதிகமும் - வேதநெறி யொழுக்கத்திற்குரிய அறங்களையும். மாதவம் - சிறந்த தவநெறி யொழுக்கத்திற்குரிய அறங்களையும், மற்றும் உலகியல் நெறிபற்றி யொழுகற்பால பல்வகையறங்களையும் படைத்தருளிய சிவபெருமானது இடமாவது என்பது முதலிரண்டடியின் கருத்து. நாடி வருகின்ற புலவர்கள் நாள்தோறும் வளர்க்க வளர்ந்து வரும் புகழையுடையதும், வான் அளாவிய மாளிகைகள் செறிந்து செல்வம் வளர்வதும், ஓங்கிய மதிலையுடையதுமாகிய திருவீழிமிழலையென்பது பின்னிரண்டடியின் கருத்து.
3663 | மந்திரநன் மாமறையி னோடுவளர் அந்தரவி சும்பணவி யற்புத மந்தரநன் மாளிகை நிலாவுமணி வெந்தழல் விளக்கென விரும்பினார் |
3.080.7 |
வேத மந்திரங்கள் ஓதி வளர்க்கப்படும் வேள்வியின் புகையானது மேலே சென்று ஆகாயத்தில் கலந்து அற்புதம் போன்று பகற்காலத்தே இருள் சூழக் கடலைக் கடைந்த மந்திரமலையைப்போன்ற அழகிய மாளிகைகளில் பதிக்கப்பட்ட இரத்தினங்களின் ஒளியானது நெடுந்தூரம் பாய்ந்து புகையால் விளைந்த இருளைப் போக்கி ஒளிரும். அவ்வொளி வெவ்விய தழலில் ஏற்றிய விளக்கொளிபோல் விளங்கும் இயல்பினதாய் விருப்பமுடையவர்களாய், மனநிறைவோடு மக்கள் வாழ்கின்ற தலம் திருவீழிமிழலையாகும்.
3664 | ஆனவலி
யிற்றசமு கன்றலைய ஊனமரு யர்ந்தகுரு திப்புனலில் தேனமர் திருந்துபொழில் செங்கனக டானதிரு வுற்றுவள ரந்தணர் |
3.080.8 |
தசமுகன் எனப்படும் இராவணன் தன் வலிமையைப் பெரிதாகக் கருதிக் கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க, அவனது தலைகள் அரைபடும்படி அழகிய திருக்காற்பெருவிரலை ஊன்றி, அவனுடைய உடலிலிருந்து குருதி பெருகுமாறு செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது தேன்மணம் கமழும் சோலைகளும், செம்பொன் மாளிகைகளும், உயர்ந்த மதில்களும் உடையதாய்ச் செல்வம் பெருகி வளரும் அந்தணர்கள் நிறைந்த அழகிய திருவீழிநகராகும்.
3665 | ஏனவுரு
வாகிமணி டந்தவிமை ஆனவனு மாதியினோ டந்தமறி வானணவு மாமதிண் மருங்கலர் வேனலமர் வெய்திட விளங்கொளியின் |
3.080.9 |
பன்றி வடிவம் கொண்டு பூமியைத் தோண்டிய திருமாலும், அழகிய அன்னப்பறவை உருவெடுத்த பிரமனும் தேடத் தன் முடியையும், அடியையும் அறியப்படாத வண்ணம் நெருப்பு வடிவாய் நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது, வானளாவிய பெரிய மதில்களினருகில் மலர்கள் அடர்ந்த, வளமிக்க சோலையில் மாந்தர் வெயிற்காலத்தில் தங்க, விளங்குகின்ற தெய்வத்தன்மை மிக்க புகழுடைய திருவீழிமிழலையாகும்.
3666 | குண்டமண
ராகியொரு கோலமிகு தெண்டிசையு மில்லதொரு தெய்வமுள பண்டையய னன்னவர்கள் பாவனை வெண்டரள வாணகைநன் மாதர்கள் |
3.080.10 |
சமணர்கள் முரட்டுத்தன்மை உடையவராய், அழகிய மயிற்பீலியும், குண்டிகையும் ஏந்தி, எட்டுத் திக்கிலும் மிகுந்த ஆற்றலுடைய தெய்வம் ஒன்று உள்ளது என்பதால் என்ன பயன் உள்ளது? வேதத்தை ஓதும் பிரமனைப் போன்ற அறிஞர்கள் விரும்பிப் போற்றும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர், வெண்ணிற முத்துப்போன்ற ஒளிபொருந்திய பற்களையுடைய கற்புடைப் பெண்கள் விளங்கும் அழகிய திருவீழிமிழலையாகும்.
3667 | மத்தமலி
கொன்றைவளர் வார்சடையில் வித்தகனை வெங்குருவில் வேதியன் சித்திர விமானமமர் செல்வமலி அத்தகு குணத்தவர்க ளாகியனு |
3.080.11 |
பொன்னூமத்தை மலரும், கொன்றைமலரும், நீண்ட சடையிலே அணிந்த பெருமானும், திருவீழிமிழலைநகரில் வீற்றிருந்தருளும் சதுரனுமாகிய சிவபெருமானைப் போற்றி. வெங்குறு என்னும் பெயரையுடைய சீகாழியில் அவதரித்த வேதவல்லுநனான ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ் மாலைகளை ஓதவல்லவர்கள், அழகிய கோயிலையுடைய செல்வம் மலிகின்ற சிவலோகத்தை அடைந்து, சத்துவ குணம் உடையவர்களாகி இறைவனோடு பேரின்பம் துய்ப்பதற்குரிய சிவயோகத்தைப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.080.திருவீழிமிழலை , வீழிநகரே, வீற்றிருந்தருளும், சிவபெருமான், அழகிய, திருவீழிமிழலையாகும், திருவீழிமிழலை, செல்வம், ஊரானது, அந்தணர்கள், என்னும், மாளிகை, பொருந்திய, திருமுறை, லாதவகை, அறங்களையும், விளங்குகின்ற, இடமாவது, வளமிக்க, மலர்கள், நெருப்பு, வருகின்ற, உலகியல், ஆகும், முதலிய, மாந்தர், உள்ளது, வளர்ந்து, வானளாவிய, வளர்வதும், ஓங்கிய, யொழுக்கத்திற்குரிய, புகழையுடையதும், மானதிடமாம், புலவர்கள், கருத்து, விளங்கும், வரும், படைத்தருளிய, ஓதும், சூழ்ந்த, மாளிகைகளும், மேனியவனூர், அவர், வயல்களும், மூன்றாம், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், நறுமணம், கமழும், சிறந்த, மலரும், நிறைந்த, சோலைகளும், அந்தணர்களும், கொண்டு, வேலி, போன்று, தேவலோகத்திலிருந்து, பதியாகிய