மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.112.திருப்பல்லவனீச்சரம்
3.112.திருப்பல்லவனீச்சரம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
4001 | பரசுபாணியர்
பாடல்வீணையர் தரசுபேணி நின்றார் |
3.112.1 |
சிவபெருமான் மழுப்படையைக் கையில் ஏந்தியவர். வீணையில் பாட்டிசைப்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் ஆட்சி புரிந்து அருள்புரிபவர். இவரது தன்மை எத்தகையது என்பதை யார் அறிவார்? ஒருவரும் அறியார்.
4002 | பட்டநெற்றியர்
நட்டமாடுவர் திட்டமா யிருப்பார் |
3.112.2 |
தலைமைப் பட்டத்திற்குரிய அடையாள அணிகலன் அணிந்த நெற்றியர். திருநடனம் செய்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர். இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார்?
4003 | பவளமேனியர்
திகழுநீற்றினர் தழகரா யிருப்பார் |
3.112.3 |
சிவபெருமான் பவளம் போன்ற சிவந்த மேனியுடையவர், ஒளிபொருந்திய திருவெண்ணீற்றினை அணிந்துள்ளவர். காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் அழகர். இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார்?
4004 | பண்ணில்யாழினர்
பயிலுமொந்தையர் தண்ணலா யிருப்பார் |
3.112.4 |
இறைவன் பண்ணிசைக்கும் யாழினை உடையவர். மொந்தை என்னும் வாத்தியத்தை வாசிப்பவர். காவிரிப்பூம் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் தலைவர். இவரது தன்மை எத்தகையது என்பதை யார் அறிவார்?
4005 | பல்லிலோட்டினர்
பலிகொண்டுண்பவர் தெல்லியாட் டுகந்தார் |
3.112.5 |
சிவபெருமான் பற்களே இல்லாத மண்டையோட்டில் பிச்சையேற்று உண்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர். இரவில் நடனம் ஆடுதலை விரும்புபவர். இவர் தன்மை யார் அறிவார்?
4006 | பச்சைமேனியர்
பிச்சைகொள்பவர் திச்சையா யிருப்பார் |
3.112.6 |
சிவபெருமான் பச்சைநிறம் கொண்ட திருமேனி உடையவர். பிச்சையேற்று உண்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர். இவர் தன்மை யார் அறிவார்?
4007 | பைங்கணேற்றினர்
திங்கள்சூடுவர் தெங்குமா யிருப்பார் |
3.112.7 |
இறைவன் பசிய கண்களையுடைய எருதின்மேல் ஏறுபவர். பிறைச்சந்திரனை சூடியுள்ளவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளினாலும், எங்கும் வியாபித்துள்ளவர். இவர் தன்மை யார் அறிவார்?
4008 | பாதங்கைதொழ
வேதமோதுவர் தாதியா யிருப்பார் |
3.112.8 |
தம் திருவடிகளைக் கைகளால் தொழுது உலகத்தினர் நன்மையடையும் பொருட்டு வேதங்களைச் சிவபெருமான் அருளிச்செய்தார். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தியாய் இருப்பவர். இவரது தன்மையை யார் அறிவார்?
4009 | படிகொண்மேனியர்
கடிகொள்கொன்றையர் தடிகளா யிருப்பார் |
3.112.9 |
இறைவன் உலகம் முழுவதையும் தம் திரு மேனியாகக் கொண்டவர். நறுமணம் கமழும் கொன்றை மாலையை அணிந்துள்ளவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் தலைவனாய் விரும்பி வீற்றிருந்தருளுபவன். இவன் தன்மை யார் அறிவார்?
4010 | பறைகொள்பாணியர்
பிறைகொள்சென்னியர் திறைவரா யிருப்பார் |
3.112.10 |
இறைவன் பறை என்னும் இசைக்கருவியை உடையவன். பிறைச்சந்திரனைத் தலையிலே அணிந்துள்ளவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் யாவர்க்கும் தலைவனாய் விரும்பி வீற்றிருந்தருளுபவன். இவர் தன்மை யார் அறிவார்?
4011 | வானமாள்வதற்
கூனமொனறிலை ஞானசம்பந்தன் நற்றமிழ் |
3.112.11 |
அழகிய காவிரிப்பூம்பட்டினப் பல்லவனீச்சரத்து இறைவனைப் போற்றி, ஞானசம்பந்தன் அருளிய இந்நற்றமிழ்த் திருப் பதிகத்தை ஓத வல்லவர்கள் நற்குணங்கள் வாய்க்கப் பெறுவர். அவர்கள் மறுமையில் வானுலகை ஆள்வதற்குத் தடையொன்றுமில்லை.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.112.திருப்பல்லவனீச்சரம் , பல்லவனீச்சரத், பல்லவனீச்சரத்தில், அறிவார், இவர்தன்மை, யறிவாரார், பட்டினத்துறை, தன்மை, விரும்பி, யிருப்பார், காவிரிப்பூம்பட்டினத்துப், யார், சிவபெருமான், இவரது, என்பதை, இறைவன், இவர், திருமுறை, வீற்றிருந்தருளும், திருப்பல்லவனீச்சரம், உண்பவர், பிச்சையேற்று, தலைவனாய், ஞானசம்பந்தன், வீற்றிருந்தருளுபவன், என்னும், அணிந்துள்ளவன், எத்தன்மையது, பதிகங்கள், எத்தகையது, திருச்சிற்றம்பலம், தேவாரப், மூன்றாம், யாவரே, வீற்றிருந்தருளுபவர், உடையவர்