மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.111.திருவீழிமிழலை
3.111.திருவீழிமிழலை
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
3990 | வேலினேர்தரு
கண்ணினாளுமை ஆலநீழலின் மேவினானடிக் |
3.111.1 |
வேல் போன்று கூர்மையும், ஒளியுமுடைய கண்களை உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். அழகிய கண்களையுடைய சிவபெருமான். அவர் திருவீழிமிழலை என்னும் மாநகரில் வீற்றிருந்தருளுகின்றார். ஆலமரநிழல் கீழிருந்து அறம்உரைத்தவர். அப்பெருமானின் திருவடிகளை அன்புடன் வணங்குபவர்கட்குத் துன்பம் இல்லை.
3991 | விளங்குநான்மறை
வல்லவேதியர் உளங்கொள்வார்தமை யுளங்கொள்வார்வினை |
3.111.2 |
நான்கு வேதங்களையும் நன்கு கற்றுவல்ல அந்தணர்கள் வசிக்கின்ற, புகழ்மிக்க திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை உள்ளத்தால் தியானிப்பவர்கள் சிவனடியார்கள், அவ்வடியார்களை வழிபடும் அன்பர்களின் வினையான குற்றம் விரைவில் நீங்கும்.
3992 | விசையினோடெழு
பசையுநஞ்சினை இசையுமீசனை நசையின்மேவினான் |
3.111.3 |
வேகமாகப் பரவும் கொல்லும் தன்மையுடைய விடத்தை உண்டு சிவபெருமான் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். நஞ்சுண்டும் சாவாது புகழுடன் விளங்கும் அப்பெருமானை நாடி வணங்கினால் வினையானது துன்பம் செய்யாது.
3993 | வென்றிசேர்கொடி
மூடுமாமதிண் நின்றவாதிதன் னடிநினைப்பவர் |
3.111.4 |
சிவபெருமானின் வெற்றிக்கொடிகள் வானத்தை மூடும்படி விளங்கும், உயர்ந்த மதில்களையுடையது திருவீழி மிழிலை என்னும் மாநகர். அப்பெருமாநகரினைவிரும்பி ஆங்கு வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை நாள் தோறும் நினைத்து வழிபடுபவர்கட்குத் துன்பம் சிறிதும் இல்லை.
3994 | போதகந்தனை
யுரிசெய்தோன்புய ஆதரஞ்செய்த வடிகள்பாதம் |
3.111.5 |
செருக்குடன் முனிவர்களால் கொடு வேள்வியினின்றும் அனுப்பப்பட்ட மதங்கொண்ட யானையின் தோலை உரித்த சிவபெருமான், மேகம்படியும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானின் திருவடிகளைத்தவிர வேறு பற்று எதுவும் எமக்கு இல்லை.
3995 | தக்கன்வேள்வியைச்
சாடினார்மணி நக்கனாரடி தொழுவர் மேல்வினை |
3.111.6 |
சிவபெருமான், தக்கன் வேள்வியைத் தகர்த்தவர். இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற மாளிகைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் திகம்பரரான சிவபெருமானின் திருவடிகளை நாள்தோறும் தொழுபவர்கட்கு மேல்வினை உண்டாகாது.
3996 | .
போரணாவுமுப்
புரமெரித்தவன் சேருமீசனைச் சிந்தைசெய்பவர் |
3.111.7 |
போர்க்குணத்தை விரும்பி அதனை மேற் கொண்ட அசுரர்களின் முப்புரங்களை எரித்த சிவபெருமான், சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானைச் சிந்தித்து வழிபடும் அடியவர்களின் தீவினை அழிந்துவிடும்.
3997 | இரக்கமிஃறொழி
லரக்கனாருட சிரக்கொள்பூவென வொருக்கினார்புகழ் |
3.111.8 |
இரக்கம் அற்ற தொழில்புரியும் அரக்கனான இராவணனின் உடல் நெரியும்படி கயிலைமலையின் கீழ் அடர்த்த சிவபெருமான் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானின் திருவடிக் கமலங்களை சிரசின்மேல் வைத்த மலர்போலக் கொண்டு, சிந்தையை ஒருமுகப்படுத்தி வழிபடுபவர்கள், உலகில் புகழுடன் விளங்குவர்.
3998 | துன்றுபூமகன்
பன்றியானவ சென்றுபூம்புன னின்றுதூவினார் |
3.111.9 |
இதழ் நெருங்கிய தாமரைப் பூவில் வீற்றிருக்கும் பிரமனும், பன்றி உருவெடுத்த திருமாலும் உணர்தற்கரியவனான சிவ பெருமான், திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமானின் திருவடிகளை, பூவும், நீரும் கொண்டு பூசிப்பவர்கள், முத்தி பெறுவர்.
3999 | புத்தர்கைச்சமண்
பித்தர்பொய்க்குவை சித்தம்வைத்தவ ரித்தலத்தினுண் |
3.111.10 |
புத்தர்களும், சமணர்களும் கூறும் பொய்க் குவியல்களாகிய உபதேசங்களைத் தோற்க வைத்த ஞானசொரூபரான சிவபெருமான், திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் மீது சித்தம் வைத்து வழிபடுபவர்கள் இப்பூவுலகில் மெய்யான தவத்தைப் புரிந்தவராவர்.
4000 | சந்தமார்பொழின்
மிழலையீசனைச் பந்தமார்தமிழ் பத்தும்வல்லவர் |
3.111.11 |
சந்தன மணம் கமழும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி, சண்பையில் அவதரித்த ஞானசம்பந்தர் அருளிய திருவருளால் பிணிக்கப்படும் இத்தமிழ்ப்பதிகத்தை ஓதவல்லவர்கள் பத்தர்கள் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.111.திருவீழிமிழலை , திருவீழிமிழலை, என்னும், திருத்தலத்தில், சிவபெருமான், மிழலைமாநகர், வீற்றிருந்தருளுகின்றார், திருவடிகளை, சிவபெருமானின், வீற்றிருந்தருளும், அப்பெருமானின், திருமுறை, இல்லை, மிழலையானடி, துன்பம், மேல்வினை, விரும்பி, கெடுமே, தீவினை, வழிபடுபவர்கள், கொண்டு, வைத்த, சோலைகளையுடைய, விளங்கும், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், தேவாரப், வழிபடும், வீற்றிருந்தருளுகின்றான், மூன்றாம், புகழுடன்