இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.043.திருப்புள்ளிருக்குவேளூர்
2.043.திருப்புள்ளிருக்குவேளூர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் - வைத்தியநாதர்.
தேவியார் - தையல்நாயகியம்மை.
1928 | கள்ளார்ந்த
பூங்கொன்றை உள்ளார்ந்த சடைமுடியெம் தள்ளாய சம்பாதி புள்ளானார்க் கரையனிடம் |
2.043. 1 |
தேன்நிறைந்த அழகிய கொன்றைமலர், கடுநாற்றத்தை உடைய ஊமத்தைமலர், ஒளிபொருந்திய திங்கள் ஆகியன உள்ளே அமைந்து விளங்கும் சடையினனும், தள்ளத்தகாத பறவைப் பிறப்படைந்து சம்பாதி சடாயு எனப்பெயரிய இருவர் வழிபட அவர்கட்கு அரசனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் புள்ளிருக்குவேளூர்.
1929 |
தையலா ளொருபாகஞ் ஐயந்தேர்ந் துழல்வாரோ மெய்சொல்லா விராவணனை பொய்சொல்லா துயிர்போனான் |
2.043. 2 |
ஒருபாகத்தே விளங்கும் தையல்நாயகியோடும் சடையின் மேல் பொருந்திய கங்கை நங்கையோடும் சென்று ஐயம் ஏற்று உழலும் அழகிய கருணையாளனும், உண்மை புகலாத இராவணனைப் பறந்து சென்று வலிமையை அழித்து அவனால் தாக்குண்டு, இராமனுக்கு நடந்த உண்மைகளைப் புகன்று உயிர்விட்ட சடாயுவால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்கு வேளூர்.
1930 | வாசநலஞ்
செய்திமையோர் ஈசனெம் பெருமானார் யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் பூசனைசெய் தினிதிருந்தான் |
2.043. 3 |
தேவர்கள் தலவாசம் செய்து நாள்தோறும் தீர்த்த நீராடி நறு மலர்தூவி வழிபட விளங்கும் ஈசனும், எம் தலைவனும், யோசனை தூரம் சென்று மலர்பறித்து வந்து ஒருநாளும் தவறாமல் சம்பாதியால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் இனிதாக உறையும் இடம் புள்ளிருக்குவேளூர்.
1931 | மாகாயம்
பெரியதொரு ஏகாய மிட்டுகந்த ஆகாயந் தேரோடு போகாமே பொருதழித்தான் |
2.043. 4 |
பெரிய தனது திருமேனியில் பெரியதொரு யானையினை உரித்து அதன்தோலை உடைவகையில் ஒன்றான மேலாடையாகப் போர்த்து மகிழ்ந்தவனும், எரியில் நின்று ஆடுபவனும், சீதையைக் கவர்ந்து வானில் தேரோடு விரைந்து சென்ற இராவணனோடு போரிட்டுத் தாக்கி அவனைப் போகாதவாறு செய்ய முயன்ற சடாயுவால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் உறையுமிடம் புள்ளிருக்குவேளூர்.
1932 | கீதத்தை
மிகப்பாடு பாதத்தைத் தொழநின்ற வேதத்தின் மந்திரத்தால் போதத்தால் வழிபட்டான் |
2.043. 5 |
வேதகீதங்களை மிகுதியாகப் பாடும் அடியார்கள் கூடியிருந்து திருவடிகளைத் தொழுமாறு விளங்கி நிற்கும் ஒளி வடிவினனும், வெண்மணலைச் சிவலிங்கமாகத் திரட்டி வேதமந்திரங்களை ஓதி சடாயுவால் ஞானத்தோடு வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்குவேளூர்.
1933 |
திறங்கொண்ட வடியார்மேற் அறங்கொண்டு சிவதன்ம மறங்கொண்டங் கிராவணன்றன் புறங்கண்ட சடாயென்பான் |
2.043. 6 |
சைவத்திறம் மேற்கொண்ட அடியவர்மீது தீவினைகளால் வரும் துன்பங்கள் வாராமே செய்பவனும், சிவதன்மங்களாகிய அறநெறிகளை ஆலின் கீழ் இருந்து அருளியவனும் தனது வீரத்தையே பெரிதெனக்கருதி வந்த இராவணனை மறத்தொடு போரிட்டுப் புறங்கண்ட சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் அமரும் இடம் புள்ளிருக்குவேளூர்.
1934 | அத்தியினீ
ருரிமூடி பித்தரைப்போற் பலிதிரியும் பத்தியினால் வழிபட்டுப் புத்தியொன்ற வைத்துகந்தான் |
2.043. 7 |
யானையை உரித்த தோலால் உடலை மூடிக்கொண்டு அழகாகக் கையில் அனலை ஏந்தி, பித்தர் போலப் பலியேற்றுத் திரியும் பெருமானும், பத்தியோடு வழிபட்டுப் பலகாலம் தவஞ்செய்து தன் அறிவை இறை உணர்வொடு பொருந்தவைத்து மகிழ்ந்த சடாயுவால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் விரும்பும் இடம் புள்ளிருக்குவேளூர்.
1935 | பண்ணொன்ற
இசைபாடு மண்ணின்றி விண்கொடுக்கும் எண்ணின்றி முக்கோடி புண்ணொன்றப் பொருதழித்தான் |
2.043. 8 |
பண்பொருந்த இசைபாடும் அடியவர்கள் குடியாக இருந்து வழிபட உலகியல் இன்பங்களை மட்டுமல்லாமல் விண்ணுலக இன்பங்களையும் அருளும் நீலமணி மிடற்றோனும், கணக்கில் அடங்காத மூன்று கோடி ஆண்டுகளை வாழ் நாளாகப் பெற்ற இராவணனொடு போரிட்டுப் புண்படும்படி செய்து அவன் வலிமையை அழித்த சடாயுவால் பூசிக்கப்பட்டவனுமாகிய சிவபிரான் மருவும் இடம் புள்ளிருக்கு வேளூர்.
1936 | வேதித்தார்
புரமூன்றும் சாதித்த வில்லாளி ஆதித்தன் மகனென்ன போதித்த சடாயென்பான் |
2.043. 9 |
தன்னோடு பேதம் உற்ற அசுரர்களின் முப்புரங்களும் கொடிய கணையால் வெந்தவியுமாறு செய்த வில்லாளியும், கருணைக்கண்ணாளனும், ஆதித்தன் மகனாய் அகன்ற இந்நிலவுலக மக்களோடு பறவைவடிவாய்த் தோன்றி அறநெறி போதித்து வந்த சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபெருமான் சாரும் இடம் புள்ளிருக்குவேளூர்.
1937 | கடுத்துவருங்
கங்கைதனைக் தடுத்தவரெம் பெருமானார் விடைத்துவரு மிலங்கைக்கோன் புடைத்தவனைப் பொருதழித்தான் |
2.043.d |
சினந்துவந்த கங்கையைத்தனது மணம்கமழும் சடை ஒன்றில் அதுவும் முற்றிலும் நனையாதவாறு தடுத்துத் தாங்கியவராகிய எம் தலைவரும், சீறிவந்த இராவணன் மயங்குமாறு சென்று இராமனுக்காக அவனைப்புடைத்து அவனோடு போரிட்டுத்தடுத்த சடாயுவால் வழிபடப்பெற்றவரும் ஆகிய சிவபெருமான் உறையுமிடம் புள்ளிருக்குவேளூர்.
1938 | செடியாய
வுடல்தீர்ப்பான் பொடியாடிக் கடிமைசெய்த கடியார்ந்த பொழிற்காழிக் மடியாது சொல்லவல்லார்க் |
2.043. 11 |
குணமில்லாத இவ்வுடலொடு பிறக்கும் பிறப்பை நீக்கியருளுவானும், தீவினை காரணமாகவரும் நோய்களுக்கு மருந்தாக இருந்து அருள்பவனும், மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியனும் ஆகிய சிவபெருமானுக்கு அடித்தொண்டு பூண்ட மணம் கமழும் பொழில் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய கவுணியர்கோன் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் சொல்மாலையைச் சோம்பியிராமல் சொல்லி வழிபடவல்லவர் கட்கு மறு பிறப்பு இல்லை.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.043.திருப்புள்ளிருக்குவேளூர் , புள்ளிருக்கு, வேளூரே, இடம், சிவபிரான், ஆகிய, புள்ளிருக்குவேளூர், சடாயுவால், சென்று, திருமுறை, பொருதழித்தான், இருந்து, விளங்கும், திருப்புள்ளிருக்குவேளூர், வழிபட, வழிபடப்பட்டவனுமாகிய, பெருமானார், தனது, உறையுமிடம், புறங்கண்ட, வாராமே, மடியார்கள், வந்த, ஆதித்தன், சிவபெருமான், குடியாக, தவஞ்செய்து, போரிட்டுப், வழிபட்டுப், சடாயென்பான், வேளூர், சம்பாதி, அழகிய, உறையும், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், இரண்டாம், தேவாரப், வலிமையை, வழிபடப்பட்டவனும், பெரியதொரு, யுறையுமிடம், பூசிக்கப்பட்டவனும், செய்து, எழுந்தருளிய, இனிதாக, தேரோடு