இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.042.திருஆக்கூர்
2.042.திருஆக்கூர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுயம்புநாதேசுவரர்.
தேவியார் - கட்கநேத்திரவம்மை.
1917 | அக்கிருந்த
வாரமும் தொக்கிருந்த மார்பினான் புக்கிருந்த தொல்கோயில் தக்கிருந்தார் ஆக்கூரிற் |
2.042.1 |
என்புமாலை, ஆடும் பாம்பு, ஆமைஒடு, ஆகியனவற்றை ஒருசேர அணிந்த மார்பினனும், திருவெண்ணீறு அணிந்தவனும், ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள பழமை யான கோயில், பொய்யில்லாத மெய்ந் நெறியாகிய சைவ சமயத்தைச் சார்ந்தொழுகுவார் பலர் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான்தோன்றி மாடம் ஆகும்.
1918 | நீரார
வார்சடையான் காரார்பூங் கொன்றையினான் கூராரல் வாய்நிறையக் தாராமல் காக்கூரிற் |
2.042. 2 |
கங்கை தங்கிய நீண்ட சடையினனும், திருநீறு அணிந்தவனும் விடையேற்றை ஊர்தியாகக் கொண்ட வனும், கார் காலத்தே மலரும் கொன்றை மலரைச் சூடியவனும் ஆகிய சிவபெருமான் விரும்பிய பழமையான கோயில் நாரைப் பறவைகள் மிகுதியான ஆரல்மீன்களை வாய் நிறைய எடுத்துக்கொண்டு நீர்க்கரைகளில் மிகுதியாக வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடமாகும்.
1919 | வாளார்கண்
செந்துவர்வாய் தோளாகம் பாகமாப் வேளாள ரென்றவர்கள் தாளாளர் ஆக்கூரிற் |
2.042. 3 |
ஒளி பொருந்திய கண்களையும், சிவந்தபவளம் போன்ற வாயினையும் உடையவனாய் இமவான் மகளாகிய பார்வதியை தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு அவள் தோளைத் தழுவிய சிவபெருமானது பழமையான கோயில், வள்ளன்மை உடைய, பிறர்க்கு உபகாரியாக விளங்கும் ஊக்கமுடைய வேளாளர்கள் மிகுந்து வாழும் ஆக்கூரில் விளங்கும் தான்தோன்றி மாடம் ஆகும்.
1920 | கொங்குசேர்
தண்கொன்றை பொங்கினான் பொங்கொளிசேர் அங்கமா றோடும் தங்கினார் ஆக்கூரிற் |
2.042. 4 |
தேன் பொருந்திய குளிர்ந்த கொன்றை மாலையைச் சூடியவனும் இயமனை வருத்தச் சினந்தவனும் ஒளிமிக்க திருவெண்ணீற்றை அணிந்தவனும் ஆகிய சிவபெருமானது அழகிய கோயில், அரிய நான்கு வேதங்களோடு ஆறு அங்கங்களையும் கற்றுணர்ந்து ஐவகை வேள்விகளையும் புரியும் அந்தணர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான் தோன்றி மாடமாகும்.
1921 | வீக்கினா
னாடரவம் பாக்கினான் பலகலன்கள் ஆக்கினான் தொல்கோயில் தாக்கினார் ஆக்கூரிற் |
2.042. 5 |
ஆடுகின்ற பாம்பைக் கச்சாக்கட்டியவரும், இறந்து அழிந்தவருடைய வெண்டலைகளையும், என்புகளையும் பல அணிகலன்களாக அணிந்தவரும், விரும்பி ஒருபாகமாகப் பெண்ணைக் கொண்டவரும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில் ஆம்பல் பூக்கள் மலரும் அழகிய பொய்கைக்கரையை உயர்த்திக் கட்டிய உழவர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான்தோன்றிமாடம் ஆகும்.
1922 | பண்ணொளிசேர்
நான்மறையான் கண்ணொளிசேர் நெற்றியினான் விண்ணொளிசேர் மாமதியந் தண்ணொளிசேர் ஆக்கூரிற் |
2.042. 6 |
பண்ணமைதியும், அறிவொளியும் அமைந்த நான்கு வேதங்களையும் அருளியவனும், பாடலிலும் ஆடலிலும் வல்லவனும், ஒளிசெறிந்த கண்பொருந்திய நெற்றியினனும் ஆகிய சிவபெருமான் காதலித்த பழமையான கோயில், வானவெளியில் உலாவும் பெரிய மதியொளி சேர்தலால் வெண்மையான மாடவீடுகள் குளிர்ந்த ஒளியைப் பெறும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.
1923 | வீங்கினார்
மும்மதிலும் வாங்கினார் வானவர்கள் பாங்கினார் நான்மறையோ தாங்கினார் ஆக்கூரிற் |
2.042. 7 |
பெருமை மிக்கவரும், மும்மதில்களையும் வெந்து அழியுமாறு மலைவில்லை வளைத்தவரும், தேவர்களால் வந்து வணங்கப்படுபவருமாகிய சிவபெருமான் எழுந்தருளிய பழமையான கோயில், பல பிரிவுகளுடன் கூடிய நான்மறைகளையும் ஆறு அங்கங்களையும் பலகலைகளையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடமாகும்.
1924 | கன்னெடிய
குன்றெடுத்தான் இன்னருளா லாட்கொண்ட பொன்னடிக்கே நாடோறும் தன்னடியார் ஆக்கூரிற் |
2.042. 8 |
கற்கள் நிரம்பிய நீண்ட கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்கள் நெரியுமாறு கால் விரலை ஊன்றிப் பின் அவன் வருந்தி வேண்ட அவனுக்கு இனிய கருணை காட்டி ஆட்கொண்ட எம்பெருமானின் பழமையான கோயில், சிவபிரானின் பொன்போன்ற திருவடிகளுக்கு நாள்தோறும் பூவும் நீரும் சுமக்கும் சிவனடியார்கள் பலர் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமடம் ஆகும்.
1925 | நன்மையா
னாரணனும் நான்முகனுங் காண்பரிய தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில் இன்மையாற் சென்றிரந்தார்க் தன்மையார் ஆக்கூரிற் |
2.042. 9 |
நன்மைகள் செய்பவனாகிய திருமாலும் நான்முகனும் காணுதற்கு அரிய பழமையோனும், பிறப்பிறப்பு இல்லாதவனும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில், இன்மையால் வந்து இரந்தவர்கட்கு இல்லை யென்று கூறாது ஈந்து மகிழும் தன்மையார் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.
1926 | நாமருவு
புன்மை பூமருவு கொன்றையினான் சேன்மருவு பைங்கயத்துச் தாமருவு மாக்கூரிற் |
2.042. 10 |
சமணபௌத்தர்கள் நாவிற் பொருந்திய புன்மை மொழிகளால் அறியாது பிதற்றித்திரிய, கொன்றைப் பூக்கள் பொருந்திய சடைனினாகிய சிவபிரான் எழுந்தருளி அமரும் கோயில், சேல்மீன்கள் பொருந்திய நீர்நிலைகளில் செங்கழுநீர் பசுமையான குவளை மலர்கள் ஆகியன வளரும் வளமையைக் கொண்ட ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.
1927 | ஆட லமர்ந்தானை
மாட மமர்ந்தானை நாடற் கரியசீர் பாட லிவைவல்லார்க் |
2.042. 11 |
திருக்கூத்து ஆடுவதை விரும்புபவனாய், ஆக்கூரில் தான்தோன்றிமாடத்து எழுந்தருளிய சிவபிரானை ஏத்தி மாட வீடுகள் நிரம்பிய சீகாழிப்பதியில் தோன்றிய அறிதற்கரிய புகழினனாகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப்பாடல்கள் வல்லவர்கட்குப் பாவம் இல்லை.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.042.திருஆக்கூர் , றான்றோன்றி, ஆக்கூரில், மாடமே, கோயில், தொல்கோயில், ஆக்கூரிற், வாழும், விளங்கும், பழமையான, ஆகும், தான், ஆகிய, பொருந்திய, சிவபெருமான், காதலித்த, திருமுறை, உள்ள, தான்தோன்றி, தோன்றிமாடம், அணிந்தவனும், திருஆக்கூர், எழுந்தருளிய, செங்கழுநீர், அந்தணர்கள், நான்கு, அங்கங்களையும், மாடமாகும், சிவபிரானது, நிரம்பிய, வந்து, தன்மையார், அரிய, இல்லை, பூக்கள், புன்மை, கொண்ட, வெண்ணீற்றான், பலர், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், இரண்டாம், தேவாரப், மாடம், கொன்றையினான், சிவபெருமானது, குளிர்ந்த, சூடியவனும், கொன்றை, நீண்ட, மலரும், அழகிய