இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.044.திருஆமாத்தூர்
2.044.திருஆமாத்தூர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அழகியநாதேசுவரர்.
தேவியார் - அழகியநாயகியம்மை.
1939 | துன்னம்பெய்
கோவணமுந் தோலு முடையாடை பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி அன்னஞ்சேர் தண்கான லாமாத்தூ ரம்மான்றன் பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே. |
2.044.1 |
தைத்தல் அமைந்த கோவணத்தை உடையாகவும், யானைத் தோலைமேல் ஆடையாகவும் கொண்டு பின்னிய சடைமீது இளம்பிறையைச் சூடி, அன்னங்கள் வாழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்டுள்ள திருஆமாத்தூரில் விளங்கும் இறைவனின் பொன் போன்ற அழகிய திருவடிகளைப் பரவாதவர் பொலிவு பொலிவாகுமா?
1940 | கைம்மாவின்
றோல்போர்த்த காபாலி வானுலகில் மும்மா மதிலெய்தான் முக்கணான் பேர்பாடி அம்மா மலர்ச்சோலை யாமாத்தூ ரம்மானெம் பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே. |
2.044.2 |
யானைத் தோலைப் போர்த்துள்ள காபாலியும், வானுலகில் திரிந்து இடம் விளைத்த முப்புரங்களை எய்தழித்தவனும், முக்கண்ணனும் ஆகிய சிவபிரானின் புகழைப்பாடி அழகிய பெரிய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த ஆமாத்தூர் அம்மானே எம் தலைவன் என்று ஏத்தாதார் பேயர்களினும் பேயராவர்.
1941 | பாம்பரைச்
சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர் தேம்ப லிளமதியஞ் சூடிய சென்னியான் ஆம்பலம்பூம் பொய்கை யாமாத்தூ ரம்மான்றன் சாம்ப லகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே. |
2.044.3 |
பாம்பை இடையில் கட்டியவன். ஒப்பற்ற பாண்டரங்கம் என்னும் திருக்கூத்தை ஆடியவன். வாய்பிளந்து மெலிந்ததோர் இளமதியைச் சூடிய சென்னியன். ஆம்பல் பூக்கள் மலர்ந்த பொய்கைகளை உடைய ஆமாத்தூரில் எழுந்தருளியவன். சாம்பல் பூசிய மார்பினனாய அப்பெருமானின் அடியவர்களின் சார்பு அல்லால் பிறிதொரு சார்பு நமக்கு இல்லை.
1942 | கோணாகப்
பேரல்குற் கோல்வளைக்கை மாதராள் பூணாகம் பாகமாப் புல்கி யவளோடும் ஆணாகங் காதல்செய் ஆமாத்தூ ரம்மானைக் காணாத கண்ணெல்லாங் காணாத கண்களே. |
2.044. 4 |
வலிய நாகத்தின் படம் போன்ற பெரிய அல்குலையும், திரண்ட வளையல்கள் அணிந்த கைகளையும் உடைய பார்வதி தேவியின் அணிகலன்கள் அணிந்த திருமேனியைத் தனது இடப்பாகமாகக் கொண்டு அவ்வம்மையோடு ஆண் உடலோடு விளங்கும் தான் காதல் செய்து மகிழும் ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்கள் எல்லாம் குருட்டுக் கண்களேயாகும்.
1943 | பாடனெறிநின்றான்
பைங்கொன்றைத் தண்டாரே சூடனெறிநின்றான் சூலஞ்சேர் கையினான் ஆடனெறிநின்றா னாமாத்தூ ரம்மான்றன் வேடநெறிநில்லா வேடமும் வேடமே. |
2.044. |
பாடும் நெறி நிற்பவனும், பசிய தண்மையான கொன்றை மாலையைச் சூடும் இயல்பினனும், சூலம் பொருந்திய கையினனும் ஆடும் நெறி நிற்போனும் ஆகிய ஆமாத்தூர் அம்மான் கொண்டருளிய மெய்வேடங்களாகிய மார்க்கங்களைப் பின்பற்றாதார் மேற்கொள்ளும் வேடங்கள் பொய்யாகும்.
1944 | சாமவரை
வில்லாகச் சந்தித்த வெங்கணையால் காவன் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான் யாவருஞ் சென்றேத்து மாமாத்தூ ரம்மானத் தேவர் தலைவணங்குந் தேவர்க்குந் தேவனே. |
2.044. 6 |
பொன்மயமான மேருமலையை வில்லாகக் கொண்டு அதன்கண் பொருந்திய கொடியகணையால் காவலை உடைய மும்மதில்களை எய்து அழித்தவனும், நெற்றிக்கண்ணனும் எல்லோரும் சென்று வணங்கிப் போற்றும் ஆமாத்தூர் அம்மானும் ஆகிய சிவபிரான் தேவர்கள் தலை வணங்கும் இந்திரனுக்கும் தேவன் ஆவன்.
1945 | மாறாத
வெங்கூற்றை மாற்றி மலைமகளை வேறாக நில்லாத வேடமே காட்டினான் ஆறாத தீயாடி யாமாத்தூ ரம்மானைக் கூறாத நாவெல்லாங் கூறாத நாக்களே. |
2.044. 7 |
யாவராலும் ஒழிக்கப் படாத கூற்றுவனை ஒழித்து, மலைமகளைத் தனித்து வேறாக நில்லாது தன் திருமேனியிலேயே ஒரு பாதியை அளித்து மாதொரு பாகன் என்ற வடிவத்தைக் காட்டியவனும், ஆறாத தீயில் நின்று ஆடுபவனும் ஆகிய ஆமாத்தூர் இறைவன் புகழைக் கூறாத நாக்குடையவர் நாவிருந்தும் ஊமையர் எனக் கருதப்படுவர்.
1946 |
தாளா லரக்கன்றோள் சாய்த்த தலைமகன்றன் நாளா திரையென்றே நம்பன்ற னாமத்தால் ஆளானார் சென்றேத்து மாமாத்தூ ரம்மானைக் கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே. |
2.044.8 |
தோல்வி உறாத இராவணனின் தோள் வலிமையை அழித்த தலைவனாகிய சிவபெருமானுக்கு உகந்த நாள் திருவாதிரையாகும் எனக்கருதித் தங்கள் விருப்புக்கு உரியவனாகிய, அடியவர் சென்று வழிபடும் ஆமாத்தூர் அம்மான் புகழைக் கேளாச்செவிகள் எல்லாம் செவிட்டுச் செவிகள் ஆகும்.
1947 | புள்ளுங்
கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர் உள்ளு மவன்பெருமை யொப்பளக்குந் தன்மையதே அள்ளல் விளைகழனி யாமாத்தூ ரம்மானெம் வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே. |
2.044. 9 |
கருடப்பறவை தாமரை ஆகியவற்றை இடமாகக் கொண்ட திருமால் பிரமன் ஆகிய இருவரால் தியானிக்கப்படும் சிவபிரானது பெருமை அளவிடற்கு உரியதோ? சேறாக இருந்து நெற்பயிர் விளைக்கும் கழனிகள் சூழ்ந்த ஆமாத்தூர் அம்மானாகிய எம் வள்ளலின் திருவடிகளை வணங்காத வாழ்க்கையும் வாழ்க்கை யாமோ?
1948 | பிச்சை
பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக் கொச்சை புலானாற வீருரிவை போர்த்துகந்தான் அச்சந்தன் மாதேவிக் கீந்தான்ற னாமாத்தூர் நிச்ச னினையாதார் நெஞ்சமு நெஞ்சமே. |
2.044. 10 |
மகளிர் பிச்சையிட்டுப் பின்னே வர, தன்தலைமைத்தன்மை கெடாதபடி, உமையம்மை அஞ்ச இழிவான புலால் மணம் வீசும் யானைத் தோலைப் போர்த்து அழியாது மகிழ்ந்தவனாகிய சிவபிரானது ஆமாத்தூரை நாள்தோறும் நினையாதார் நெஞ்சம் நெஞ்சாகுமா?.
1949 | ஆட லரவசைத்த
வாமாத்தூ ரம்மானைக் கோட லிரும்புறவிற் கொச்சை வயத்தலைவன் நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன் பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே. |
2.044. 11 |
படம் விரித்து ஆடும் பாம்பை இடையில் கட்டிய ஆமாத்தூர் அம்மானைக் காந்தள் மலரும் கரிய காடுகளைக் கொண்ட கொச்சைவயம் என்னும் சீகாழிப் பதிக்குத் தலைவனாகிய நாடற்கு அரிய புகழை உடைய ஞானசம்பந்தன் பாடியருளிய இப்பாடல்களை வல்லவர்க்குப் பாவம் இல்லை.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.044.திருஆமாத்தூர் , ஆமாத்தூர், ஆகிய, உடைய, ரம்மானைக், யாமாத்தூ, திருமுறை, கூறாத, கொண்டு, யானைத், காணாத, திருஆமாத்தூர், ரம்மான்றன், சென்றேத்து, அம்மான், ஆடும், நெறி, எல்லாம், வேடமே, பொருந்திய, வேறாக, வாழ்க்கையும், கொண்ட, சிவபிரானது, கொச்சை, தலைவனாகிய, கேளாச், சென்று, அம்மானைக், ஆறாத, புகழைக், மாமாத்தூ, சார்பு, அழகிய, வானுலகில், மதிலெய்தான், விளங்கும், திருச்சிற்றம்பலம், இரண்டாம், தேவாரப், பதிகங்கள், ரம்மானெம், தோலைப், என்னும், இல்லை, படம், இடையில், பாம்பை, பெரிய, சூழ்ந்த, சூடிய, அணிந்த