ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 9
2 உமது ஞானத்தால் மனிதனை உருவாக்கி, நீர் உண்டாக்கிய படைப்புகளின் மேல் ஆட்சி செலுத்தவும்,
3 தூய்மையோடும் நீதியோடும் உலகை ஆளவும், நேர்மையான உள்ளத்தோடு நீதி வழங்கவும் ஏற்படுத்தினீர்.
4 உமது அரியணையருகில் வீற்றிருக்கும் ஞானத்தை எனக்கருளும்@ உம்முடைய ஊழியர்கள் குழுவினின்று என்னைத் தள்ளிவிடாதீர்@
5 எனெனில் நான் உம் ஊழியன், உம் அடியாளிள் மைந்தன், நான் வலுவற்றவன், குறுகிய வாழ்வினன்@ சட்டங்கள், நீதி இவைபற்றி மிகச் சிறிதே அறிவேன்@
6 ஏனெனில் மனிதர்களுள் ஒருவன் அறிவு நிறைந்தவனாயிருந்தாலும், நீர் அருளும் ஞானம் அவனிடமில்லையேல், அவன் ஒன்றுமே இல்லை.
7 உம் மக்களின் மன்னனாகவும், உம் புதல்வர் புதல்வியர்க்கு நீதிபதியாகவும் இருக்கும்படி என்னை நீர் தேர்ந்துகொண்டீர்@
8 உமது பரிசுத்த மலைமேல் திருக்கோயில் ஒன்றும், நீர் குடிகொண்டிருக்கும் நகரில் பீடமொன்றும், தொடக்கத்திலிருந்தே நீர் தயாரித்திருக்கும் பரிசுத்த கூடாரத்தின் மாதிரி ஒன்றும் அமைக்கும்படி எனக்கு ஆணை விடுத்தீர்.
9 உம்மிடத்தில் தான் ஞானம் இருக்கிறது@ உம் வேலைகள் அதற்குத் தான் தெரியும்@ நீர் உலகை உண்டாக்கிய போது அது உம் அருகில் இருந்தது@ உம் கண்களுக்கு உகந்தது எதுவென அது அறியும், உம் கட்டளைகளின்படி எது சரியென அதற்குத் தெரியும்.
10 அது என்னுடனிருந்து என்னுடனுழைக்கவும், உமக்குகந்ததை எனக்குக் கற்றுக் கொடுக்கவும், உமது பரிசுத்த வான் வீட்டினின்று அதை அனுப்பியருளும்@ உமது மகிமையின் அரியணையினின்று என்னிடம் வரவிடும்.
11 ஏனெனில் அதற்கு எல்லாம் தெரியும்@ அனைத்தையும் அது கண்டு பிடிக்கிறது@ என் செயல்களில் ஞானத்தோடு என்னை வழி நடத்தும்@ தன் மகிமையால் என்னைப் பாதுகாக்கும்.
12 அப்போது தான் என் வேலைகள் உமக்கு ஏற்புடையனவாகும்@ அறங்கோணாமல் உம் மக்களுக்கு நீதி வழங்குவேன்@ என் தந்தையின் அரியணையில் இருக்கத் தகுதி பெறுவேன்.
13 உள்ளபடியே கடவுளின் திருவுளத்தை அறிபவன் யார்? அல்லது ஆண்டவர் விரும்புவதைக் கண்டுபிடிப்பவன் எவன்?
14 மனிதருடைய எண்ணங்கள் பயனற்றவை@ நம்முடைய திட்டங்கள் தவறக்கூடியவை@
15 ஏனெனில் அழியக் கூடிய உடல் ஆன்மாவைப் பளுவாக்குகிறது@ இந்த மண் குடிசை சிந்தனை நிறைந்த மனத்தை அழுத்துகிறது@
16 உலகில் உள்ளவற்றை அறிவதே நமக்கு மிகக் கடினம்@ நம் கண்முன்னிருப்பவற்றைக் கண்டுபிடிப்பதோ மிக அரிது@ அப்படியிருக்க, விண்ணிலுள்ளவற்றை ஆராய்பவன் எவன்?
17 நீர் ஞானத்தைத் தராமலும், உன்னதத்திலிருந்து உமது பரிசுத்த ஆவியை அனுப்பாமலும் இருந்தால், உமது திருவுளத்தை அறியக் கூடியவன் யார்?
18 இவ்வாறு, உலகோரின் வழிகள் செம்மைப் படுத்தப்பட்டன@ உமக்கு உகந்தவை மனிதர்களுக்குக் கற்பிக்கப்பட்டன@
19 ஞானத்தால் அவர்கள் மீட்கப்பட்டனர். ஏனெனில், ஆண்டவரே, தொடக்க முதல் உமக்கு உகந்தவர்களாய் இருந்த அனைவரும், ஞானத்தினால் நலமடைந்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு, உமது, நீர், ஏற்பாடு, பரிசுத்த, ஏனெனில், பழைய, ஆகமம், தான், உமக்கு, நீதி, ஒன்றும், தெரியும்@, எவன், யார், திருவுளத்தை, அதற்குத், வேலைகள், நான், ஆண்டவரே, ஆன்மிகம், திருவிவிலியம், அனைத்தையும், ஞானத்தால், ஞானம், உலகை, உண்டாக்கிய, என்னை