ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 10
2 அவனைப் பாவத்தினின்று விடுவித்து, அனைத்தையும் அடக்கியாளும் ஆற்றலையும் தந்தது.
3 ஆனால் அநீதன் தன் ஆத்திரத்தில் ஞானத்தை விட்டகன்ற போது, சினமுற்றுத் தன் தம்பியைக் கொன்றதால் அழிந்துபோனான்.
4 அவனை முன்னிட்டு மண்ணுலகைப் பெருவெள்ளம் மூழ்கடித்த போது, அற்ப மரத்துண்டால் நீதிமானை நடத்தி மறுபடி காத்ததும் ஞானமே.
5 மக்களினங்கள் தீய ஒப்பந்தம் செய்து, குழப்பத்திற்குள்ளான போது, ஞானந்தான் நீதிமானை அறிந்து தேர்ந்தெடுத்து, அவனைக் கடவுள் முன்னிலையில் மாசற்றவனாய்க் காத்து வந்தது@ அவன் பிள்ளைப் பாசத்தை வெல்லும் ஆற்றலையும் அவனுக்களித்தது.
6 பொல்லாதவர்கள் அழிந்த போது நீதிமானைக் காப்பாற்றிற்று@ அவனும் ஐம்பெரு நகரங்கள் தீக்கிரையான போது, தப்பியோடிப் பிழைத்துக் கொண்டான்.
7 அவர்களுடைய அக்கிரமத்திற்குச் சான்றுகள் இன்னும் உள்ளன: இடைவிடாது புகையெழும்பும் பாழ்வெளி@ கனிந்து பழுக்காத காய்களை மட்டும் தரும் மரங்கள்@ விசுவசியாத ஆன்மாவின் நினைவுச் சின்னமாய் நிற்கும் உப்புத்தூண்.
8 ஞானத்தைப் பொருட்படுத்தாமல் விலகிச் சென்றதால், அவர்கள் நன்மையைக் கண்டுணர இயலாமற் போனதோடு, தங்கள் அறியாமையின் சின்னங்களையும் மனுக்குலத்திற்கு விட்டுச் சென்றனர்@ ஆதலால் அவர்களின் தவறுகள் புலப்படாமல் போகமுடியாது.
9 தனக்கு ஊழியம் செய்தவர்களை ஞானம் இடையூறுகளினின்று விடுவித்தது.
10 உடன் பிறந்தவனின் சினத்திற்கு அஞ்சியோடிய நீதிமானை ஞானம் நேர் வழியில் நடத்திச் சென்றது@ கடவுளின் அரசை அவனுக்குக் காண்பித்தது@ பரிசுத்தமானவற்றைப் பற்றிய அறிவைத் தந்தது@ அவனுடைய வேலைகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கச் செய்தது@ அவனது உழைப்பின் பயனைப் பன்மடங்காய்ப் பெருக்கிற்று.
11 கொடியவர்கள் அவனை ஒடுக்கிச் சுரண்டப் பார்த்த போது, அவனுக்கு அருகில் துணை நின்று அவனைச் செல்வந்தனாக்கிற்று.
12 அவனுடைய பகைவர்களிடமிருந்து அவனைப் பாதுகாத்தது@ அவர்கள் வீசிய வலைகளில் சிக்காதபடி அவனைத் தடுத்துக் காத்தது@ மாபெரும் போராட்டத்தில் அவனுக்கு வெற்றி தந்தது@ இவ்வாறு, இறைப்பற்று எல்லாவற்றையும் விட வலிமை மிக்கது என்பதை அவன் அறிந்து கொள்ளச் செய்தது.
13 பணத்திற்கு விற்கப்பட்ட நீதிமானை ஞானம் கைவிடவில்லை@ பாவத்தில் விழாமல் அவனைத் தடுத்தாட்கொண்டது. பாதாளச் சிறைக்கு அவனோடு இறங்கிச்சென்றது@
14 அவன் விலங்கிடப்பட்டிருந்த போது, அவனை விட்டு அகலாமல் இருந்து, அரச செங்கோலை அவனுக்குக் கொண்டு வந்தது@ கொடிய தலைவர்கள்மேல் அதிகாரம் தந்தது@ அவன் மேல் குற்றம் சுமத்தியவர்களைப் பொய்யர்களென எண்பித்தது@ முடிவில்லா மகிமையை அவனுக்குக் கொடுத்தது.
15 பரிசுத்த மக்களை- மாசற்ற இனத்தாரை ஞானம் கொடிய மக்களினத்தின் கையினின்று விடுவித்தது@
16 ஆண்டவருடைய ஊழியன் ஒருவனின் உள்ளத்தில் இருந்து கொண்டு அற்புதங்களாலும் அடையாளங்களாலும் கொடிய மன்னரை எதிர்த்து நின்றது:
17 பரிசுத்தர்களுக்கு அவர்கள் உழைப்புக்குக் கைம்மாறு தந்தது@ வியப்புக்குரிய நெறியில் அவர்களை நடத்திச் சென்றது@ பகல் நேரத்தில் அவர்களுக்குத் தண்ணிழலாகவும், இராவேளையில் விண்மீன் சுடராகவும் இருந்தது.
18 செங்கடலைக் கடந்து அவர்களைக் கூட்டி வந்தது@ ஆழ்கடல் வழியாய் அவர்களை நடத்தி வந்தது@
19 அவர்களுடைய பகைவர்களையே கடலில் ஆழ்த்திப் பிறகு கடலின் ஆழத்திலிருந்து வெளியே துப்பிற்று. ஆகையால் நீதிமான்கள் பொல்லாதவர்களின் பொருளை எடுத்துக் கொண்டனர்.
20 அதன்பின், ஆண்டவரே, உமது பரிசுத்த பெயரைப் பாடிப் போற்றினர், வெற்றி பெற்ற உம் கைவன்மையை ஒரு மிக்கப் புகழ்ந்தனர்.
21 ஏனெனில் ஊமைகளின் வாயை ஞானம் திறந்து விட்டது@ குழந்தைகளின் நாவுக்குத் தெளிவான பேச்சைத் தந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு, போது, ஞானம், ஏற்பாடு, அவன், வந்தது@, நீதிமானை, தந்தது@, பழைய, ஆகமம், கொடிய, அவனுக்குக், அவனை, அவனைத், கொண்டு, பரிசுத்த, அவர்களை, இருந்து, வெற்றி, அவனுக்கு, சென்றது@, அவனுடைய, அறிந்து, ஞானமே, அவனைக், அதிகாரம், ஆன்மிகம், திருவிவிலியம், காத்து, அவனைப், அவர்களுடைய, நடத்தி, தந்தது, ஆற்றலையும், நடத்திச்