ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 8
2 என் இளமை முதல் அதன் மேல் நான் அன்பு வைத்தேன், தேடினேன்: அதை என் வாழ்க்கைத் துணை ஆக்கிக்கொள்ள விழைந்தேன்: அதனுடைய அழகில் என்னையே பறிகொடுத்து விட்டேன்.
3 கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வினால் ஞானம் தன் மேன்மையான பிறப்பின் மகிமையை மிகுதிப்படுத்துகிறது@ ஆதலால் அனைத்துலக ஆண்டவர் அதன் மேல் அன்புகூர்கிறார்.
4 ஆம், கடவுளைப்பற்றிய அறிவுக்கு இட்டுச் செல்வது ஞானமே@ அவருடைய வேலைகளைத் தேர்ந்தெடுப்பதும் அதுவே.
5 மிகுந்த செல்வம் வாழ்வில் விரும்பத்தக்க உடைமையாயின், அனைத்தையும் ஆக்கும் ஞானத்தை விட விலையுயர்ந்தது என்ன?
6 அறிவு வேலைத்திறன் மிக்கது ஆயின், அனைத்தையும் உருவாக்கும் கலைஞனான ஞானத்தினும் சிறந்தவர் யார்?
7 எவனாவது நீதியின் மேல் அன்புகூர்வானாயின், அதன் ( ஞானத்தின் ) செயல்கள் நற்பண்புகளாய் மிளிரும்: அது ( ஞானம் ) தன்னடக்கம், விவேகம், நீதியுடைமை, துணிவு ஆகியவற்றைக் கற்பிக்கிறது@ இவற்றினும் வாழ்க்கையில் பயனுள்ளவை மனிதனுக்கு வேறொன்றும் கிடையாது.
8 பரந்த அனுபவம் பெற ஒருவன் விரும்புவானாயின், ஞானம் இறந்த காலத்தை அறியும், எதிர்காலத்தைக் கணிக்கும், சொல் நயங்களும் புதிர்களின் விடைகளும் அதற்குத் தெரியும்@ நிகழ்வதற்கு முன்பே அடையாளங்களையும் அற்புதங்களையும், பருவங்களையும் காலங்களையும் பற்றிய அறிவு அதற்குண்டு.
9 ஆகையால், ஞானத்தை என் வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக் கொள்ள நான் முடிவு செய்தேன்@ எனெனில் வளமான வாழ்வில் அது எனக்கு நல்லறிவூட்டும் என்றும், கவலைகளிலும் துயரத்திலும் ஊக்கந்தரும் என்றும் நான் அறிவேன்.
10 அதை முன்னிட்டு மக்கள் நடுவில் நான் மகிமையடைவேன், இளைஞனாயினும் முதியோர் முன் எனக்கு மதிப்பு இருக்கும்.
11 நீதி வழங்கும் போது எனது அறிவின் நுட்பம் காணப்படும்@ ஆள்வோர் என்னைக் கண்டு வியப்பில் ஆழ்வர்@ தலைவர்கள் என்னைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.
12 நான் பேசாமலிருந்தால், நான் பேசும்படி எதிர்பார்ப்பார்கள்@ நான் பேசும் போது அக்கறையாய்ச் செவிமடுப்பார்கள்@ நீண்ட நேரம் நான் உரையாற்றினால், தங்கள் கைகளால் வாயைப் பொத்திக் கொண்டிருப்பார்கள்.
13 மேலும் ஞானத்தினால் எனக்குச் சாகாமை கிட்டும்@ எனக்குப் பின் வருகிறவர்களுக்கு என்னைப் பற்றிய நீடித்த நினைவை விட்டுச் செல்வேன்.
14 மக்களினங்களை ஆட்சி செய்வேன்@ நாடுகள் எனக்குக் கீழ்ப்பட்டிருக்கும்.
15 கொடிய மன்னர்கள் கூட என்னைப்பற்றிக் கேள்வியுற்று நடுங்குவர்@ மக்கள் நடுவில் இனியனாகவும் போரில் வீரனாகவும் இருப்பேன்.
16 வீட்டிற்கு வந்தால், ஞானத்தோடு அமைதியாய் இளைப்பாறுவேன்@ அதனுடைய தோழமையில் வெறுப்புக்குரியது ஒன்றுமில்லை@ அதனுடன் நடத்தும் வாழ்க்கையில் துன்பமே இல்லை@ எல்லாம் இன்பமும் மகிழ்ச்சியுமே.
17 இவற்றையெல்லாம் உள்ளத்தில் சிந்திக்கையில், மனத்தில் இவற்றைப் பற்றி எண்ணும் போது- அதாவது, ஞானத்தின் உறவால் சாகாமை கிட்டுமென்றும்,
18 அதனுடன் கொள்ளும் நட்பில் தூய இன்பமுண்டென்றும், அதன் செயல்களால் குன்றாத செல்வம் கொழிக்குமென்றும், அதனுடைய தோழமையில் அறிவாற்றல் பெருகுமென்றும், அதனோடு செய்யும் உரையாடலால் பெரும் புகழ் கிடைக்குமென்றும்- இவற்றையெல்லாம் நான் நினைத்துப் பார்த்து, அதை என்னுடன் சேர்த்துக் கொள்ள எங்கும் தேடிப்போனேன்.
19 குழந்தையாய் இருந்த போதே நல்ல இயல்பினனாய் இருந்தேன்@ நல்ல உள்ளம் எனக்குப் பங்காய் அமைந்தது.
20 இல்லை- நல்லவனாய் இருந்ததால் மாசற்ற உடலுக்குள் புகுந்தேன்.
21 ஆனால், கடவுள் அருள் கூர்ந்தாலொழிய, ஞானம் எனக்குக் கிட்டாதெனக் கண்டேன்- அது யாருடைய கொடையென்று அறிதலே நுண்ணறிவுக்கோர் அறிகுறியன்றோ- ஆகவே, ஆண்டவரை அணுகி மன்றாடி என் முழு உள்ளத்தோடு அவரைக் கெஞ்சி வேண்டினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு, நான், ஏற்பாடு, ஞானம், பழைய, போது, மேல், ஆகமம், அதனுடைய, அனைத்தையும், இவற்றையெல்லாம், என்னைப், நல்ல, மக்கள், நடுவில், பார்த்து, சாகாமை, அதனுடன், என்றும், தோழமையில், எனக்குக், எனக்குப், வாழ்க்கையில், செல்வம், வாழ்வில், வாழ்க்கைத், ஆன்மிகம், திருவிவிலியம், ஞானத்தை, அறிவு, கொள்ள, சேர்த்துக், பற்றிய, ஞானத்தின், எனக்கு