ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 4
2 அந்நினைவு இருக்கும் போது மனிதர் அதைப் பின்பற்றுகிறார்கள். இல்லாத போதோ அதற்காக ஏங்கித் தவிக்கிறார்கள்@ மாசற்ற போர்களில் வெற்றிபெற்ற அந்தச் சால்பு வாகை சூடிக் காலமெல்லாம் பவனி வருகிறது.
3 பொல்லாதவர்களின் பெரும் சந்ததி பயனற்றது, அவர்களது வேசித்தனத்தின் நாற்றுகள் ஆழமாய் வேரூன்றுவதில்லை, உறுதியாய்த் தரையில் ஊன்றி நிற்பதுமில்லை.
4 கொஞ்ச காலத்திற்கு அவர்கள் கிளைகள் விட்டாலும், நிலையற்றவர்களாதலால் காற்றால் அலைக் கழிக்கப்படுவர், கடும் புயலின் சீற்றத்தால் வேரோடு பிடுங்கப்படுவர்.
5 வளர்ந்து வயிரமேறுமுன்பே கிளைகள் முறிந்து விடும், அவற்றின் கனிகள் பயனற்றுப் போகும்@ உண்பதற்குத் தக்க அளவு அவை பழுக்காததால், ஒன்றுக்கும் உதவாமல் போய்விடும்.
6 கடவுள் பரிசோதிக்க வருகிற நாளில், விபசாரத்தில் பிறந்த பிள்ளைகளே தங்கள் பெற்றோரின் கூடா ஒழுக்கத்திற்குச் சாட்சிகளாய் நிற்பர்.
7 ஆனால் நீதிமான் காலம் வருமுன்பே இறந்து விட்டாலும், இளைப்பாற்றி அடைவான்.
8 நீண்ட காலம் வாழ்வதால் முதுமைக்கு மதிப்பில்லை, ஆண்டுகளின் எண்ணிக்கை அதற்கு அளவுகோலன்று.
9 ஆனால் அறிவுடைமையே மனிதனுக்கு நரை திரை, மாசற்ற வாழ்வே பழுத்த முதுமைப் பருவமாம்.
10 கடவுளுக்கு உகந்தவனாயிருந்ததால் அவரது அன்பைப் பெற்றான்@ பாவிகள் நடுவில் வாழ்ந்த அவன் அங்கிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டான்.
11 தீமை அவனது அறிவைக் கெடுக்காதிருக்கவும், வஞ்சனை அவனது ஆன்மாவை ஏய்க்காதிருக்கவுமே அவன் இம்மையினின்று அகற்றப்பட்டான்.
12 தீமையின் கவர்ச்சி நன்மையை இருளச்செய்கிறது, இச்சை என்னும் புயல் மாசற்ற மனத்தைக் கெடுத்து விடுகிறது.
13 குறுகிய காலத்தில் நிறைவு பெற்று நீண்ட வாழ்வினை நிறைவு செய்து கொண்டான்.
14 அவனது ஆன்மா ஆண்டவருக்கு உகந்ததாயிருந்தது@ ஆதலால் தீமையின் நடுவிலிருந்து அவனை உடனடியாய் எடுத்துக் கொண்டார். ஆயினும் பார்த்திருந்த மக்கள் இதைக் கண்டுபிடிக்கவுமில்லை@
15 கடவுளின் அருளும் இரக்கமும், அவரால் தேர்ந்துகொள்ளப் பட்டவர்களுக்கே உரியவை, தம் பரிசுத்தர்களை அவர் கண்காணிக்கிறார் என்பதை அம்மக்கள் உள்ளத்தில் எண்ணிப் பார்க்கவுமில்லை.
16 இறந்து போன நீதிமான் உயிரோடிருக்கும் பொல்லாதவர்களைக் குற்றவாளிகளாய்த் தீர்ப்பிடுகிறான்@ விரைவில் முடிந்து போன (அவனது) இளமைப் பருவம் பொல்லாதவனின் நீண்ட வாழ்வைக் கெட்டதெனக் காட்டுகிறது.
17 பொல்லாதவர்கள் ஞானியின் முடிவைக் காண்பார்கள்@ ஆயினும் ஆண்டவர் அவனுக்கு என்ன பரிசு கொடுக்கவிருக்கிறார் எனவும், எதற்காக அவனைப் பாதுகாக்கிறார் எனவும் கண்டுபிடியார்கள்.
18 அவன் முடிவைக் கண்டு அவனை நிந்திப்பார்கள், ஆண்டவரோ அவர்களைப் பார்த்து நகைப்பார்.
19 அதன் பின் அவர்கள் இழிவான பிணமாவார்கள், செத்தவர்கள் நடுவிலும் என்றென்றும் வெறுப்புக்குள்ளாவார்கள்@ ஆண்டவர் அவர்களைத் தலைகீழாய் வீழ்த்தி நாவடக்குவார்@ அவர்களை அடியோடு ஆட்டி அதிரவைப்பார்@ முற்றிலும் அவர்கள் பாழாக்கப்படுவர்@ கொடிய வேதனைக்கு ஆளாவர்@ அவர்களுடைய பெயர்கூட நிலைக்காமல் அழிந்து போகும்.
20 அவர்களுடைய பாவங்கள் கணக்கெடுக்கப் படும்பொழுது, அஞ்சி நடுநடுங்கிக்கொண்டு வருவார்கள்@ அவர்களுடைய அக்கிரமச் செயல்கள் அவர்களுக்கு எதிரே நின்று குற்றஞ்சாட்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, அவனது, பழைய, மாசற்ற, அவன், அவர்களுடைய, நீண்ட, ஆகமம், தீமையின், நிறைவு, முடிவைக், எனவும், ஆண்டவர், ஆயினும், அவனை, இறந்து, அந்நினைவு, ஆன்மிகம், திருவிவிலியம், கிளைகள், விட்டாலும், காலம், நீதிமான், எடுத்துக்