ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 3
2 அறிவிலிகளின் கண்களில் அவர்கள் செத்துப் போனதாகத் தோன்றினர், இம்மையினின்று அவர்கள் பிரிந்தது பெருந்துன்பமாய்க் கருதப்பட்டது,
3 நம்மிடமிருந்து அவர்கள் போனது அவர்களுக்கு அழிவென எண்ணப்பட்டது@ ஆனால் அவர்கள் சமாதானத்தில் இருக்கிறார்கள்.
4 ஏனெனில் மனிதர்களுக்கு முன் பாவ வேதனையடைந்திருந்தாலும், அவர்களது நம்பிக்கையோ சாகாமையால் நிரம்பியிருக்கிறது.
5 அற்பத் துன்பமுற்ற பின் அவர்கள் மாபெரும் நன்மையடைவார்கள், கடவுள் அவர்களைப் பரிசோதித்தார், பரிசோதித்துத் தமக்கேற்ற தகுதியுடையவர்கள் எனக் கண்டார்.
6 பொன்னை உலையிலிட்டுச் சோதிப்பது போல் அவர்களை பரிசோதித்தார், தகனப் பலியாக அவர்களை ஏற்றுக்கொண்டார்.
7 கடவுளின் வருகைக் காலத்தில், அவர்கள் சுடரொளி வீசுவார்கள்@ நாணற் காட்டில் தீப்பொறிகள் எரிவது போல் ஒளிர்வார்கள்.
8 புறவினத்தாரைத் தீர்ப்பிடுவார்கள், மக்களினங்களை ஆளுவார்கள்@ ஆண்டவர் அவர்கள் மேல் என்றென்றும் ஆட்சி செலுத்துவார்.
9 அவரில் நம்பிக்கை வைக்கிறவர்கள் உண்மையைக் கண்டுபிடிப்பார்கள், விசுவாசம் கொண்டவர்கள் அவரோடு அன்பில் நிலைத்திருப்பார்கள், ஏனெனில் அருளும் இரக்கமும் அவரால் தேர்ந்துகொள்ளப் பட்டவர்களுக்கே உரியவை.
10 பொல்லாதவர்களோ அவர்கள் எண்ணத்திற்குத் தக்கபடி தண்டிக்கப்படுவார்கள்@ எனெனில் நீதிமானைப் புறக்கணித்து ஆண்டவரை எதிர்த்தார்கள்.
11 ஞானத்தையும் ஒழுக்கத்தையும் புறக்கணிக்கிறவன் இரங்கத்தக்கவன், அவனது நம்பிக்கை வீணானது, அவனுடைய செயல்கள் பலனற்றவை, அவனுடைய வேலைகள் விழலுக்கிறைத்த நீரே@
12 அவர்களுடைய மனைவியர் அறிவில்லாதவர்கள், அவர்கள் குழந்தைகள் பொல்லாதவர்கள், அவர்களது சந்ததி சாபத்திற்குள்ளானது. கெட்ட பிள்ளைகளைப் பெறுவதை விட மலடியாய் இருப்பதே மேல்.
13 தூய்மையிழக்காதவளும் முறைகேடான சேர்க்கையால் தீட்டுப் படாதவளுமான மலடி பேறுபெற்றவள்@ ஆன்மாக்களைக் கடவுள் சந்திக்க வரும் போது, அவள் கைம்மாறு பெற்றுக் கொள்வாள்.
14 தன் கைகளால் முறை தவறிய செயல்களைச் செய்யாமலும், ஆண்டவருக்கு எதிராகப் பொல்லாதவற்றைச் சிந்தியாமலும் இருக்கிற அண்ணகனும் பேறுபெற்றவனே. அவனது பிரமாணிக்கத்திற்காகச் சிறப்பான சலுகை அவனுக்குக் கிடைக்கும்@ கடவுளின் திருக்கோயிலில் இனிமை மிக்க பங்கு தரப்படும்.
15 நற்செயல்களின் பலன் மகிமை நிறைந்தது, அறிவின் வேர் ஒரு போதும் காய்ந்து போகாது.
16 விபசாரிகளின் மக்களோ முதுமை வரை வாழ மாட்டார்கள், முறைகேடான சேர்க்கையால் பிறந்த பிள்ளை அழிந்து போகும்.
17 அவர்கள் நெடுங்காலம் வாழ்ந்தாலும், அவர்களை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்@ அவர்களின் முதுமையின் இறுதியில் கூட அவர்களுக்கு மதிப்பு தரப்படமாட்டாது.
18 அவர்கள் இளமையில் இறந்தாலோ, அவர்களுக்கு நம்பிக்கையே இராது, தீர்வையின் நாளில் ஆறுதலும் கிடைக்காது.
19 உள்ளபடியே பொல்லாதவர்களின் முடிவு அச்சத்திற்குரியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, அவர்களுக்கு, அவர்களை, ஆகமம், கடவுளின், நம்பிக்கை, மேல், சேர்க்கையால், அவனது, அவனுடைய, முறைகேடான, கடவுள், ஆன்மிகம், திருவிவிலியம், ஏனெனில், அவர்களது, பரிசோதித்தார், போல்