ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 2
2 நாம் பிறந்ததோ தற்செயலாய் நேர்ந்தது, செத்த பிறகு இதற்கு முன் ஒரு போதும் இருந்திராதவர் போல் ஆகிவிடுவோம்@ நமது உயிர்மூச்சு வெறும் புகையே, நம் பகுத்தறிவு நமது இதயத் துடிப்புகளின் தீப்பொறியே.
3 அது அவிந்தால், உடல் சாம்பலாய்ப் போகும்@ உயிரோ அற்பக் காற்று போல் சிதறிப் போகும்@ நமது வாழ்வு கார்மேகத்தின் நிழல் போல் கடந்துபோகும்@ கதிரவனின் கதிர்களால் துரத்துப் பட்டு அதன் வெப்பத்தால் தாக்கப்படும் மூடுபனி போல் சிதறிப் போகும்.
4 காலத்தோடு நமது பெயர் மறக்கப்படும், நம் செய்லகளை யாருமே நினைக்கமாட்டார்கள்.
5 ஆம், நமக்குக் குறிக்கப்பட்ட காலம் நிழலைப் போல் கடந்து மறைகிறது, சாவுக்குப் பின் நாம் திரும்பி வருதல் இல்லை, முடிவு முத்திரையிடப்படுகிறது, எவனும் திரும்பி வருதல் இல்லை.
6 ஆதலால், தற்கால நன்மைகைளைத் துய்ப்போம், வாருங்கள்@ படைப்புப் பொருட்களை நம் இளமையிலேயே பயன்படுத்திக் கொள்ள விரைவோம்.
7 விலையுயர்ந்த மதுவை நிரம்பப் பருகுவோம், நறுமணத் தைலங்களைப் பூசிக் கொள்வோம், இன்பம் என்னும் மலரைப் பறிக்காமல் விடோம்.
8 வாடிப் போகு முன்பே ரோசா மலர்களால் முடி செய்து அணிவோம், நாம் இன்புறாத இடம் எங்குமே இருக்கலாகாது.
9 நம் காமச் செயல்களை நம்மில் ஒவ்வொருவனும் செய்வானாக, சிற்றின்பத்தின் சுவடுகளை எங்கணும் விட்டுச் செல்வோம், ஏனெனில் இதுவே நம் பங்கு, இதுவே நம் பாகம்.
10 நீதிமானாகிய எளியவனை ஒடுக்குவோம், கைம் பெண்ணைக் கொடுமை செய்வோம், முதியவரின் நரை வயதையும் மதிக்கமாட்டோம்.
11 ஆனால் நமது வலிமையே நீதியின் சட்டமாய் இருக்கட்டும், ஏனெனில் வலிமையற்றது எதுவும் பயனற்றதே.
12 நீதிமானை நாம் மடக்கப் பார்ப்போம், ஏனெனில் அவன் நமக்குத் தொல்லையாய் இருக்கிறான், நம் நடத்தைக்கு அவன் பகையாளியாய் இருக்கிறான், திருச்சட்டத்திற்கு எதிராய் நாம் செய்யும் பாவங்களைக் கண்டிக்கிறான். நமது பயிற்சிக்கு எதிரான பாவங்களை நம் மேல் சுமத்துகிறான்.
13 கடவுளைப் பற்றிய அறிவு தனக்கிருப்பதாகச் சொல்லிக் கொள்கிறான், ஆண்டவரின் குழந்தை என்று தன்னைக் கூறிக் கொள்கிறான்.
14 நம் சிந்தனைகளின் நடமாடும் கண்டனவுரையாய் இருக்கிறான்:
15 அவனைக் காண்பதே நமக்குத் தாங்கமுடியாததாய் இருக்கிறது@ ஏனெனில் அவன் நடத்தை மற்றவர்களின் நடத்தை போலில்லை, அவனுடைய போக்கே தனிப்பட்டது.
16 ஈனர்கள் என்று நம்மை அவன் எண்ணுகிறான், அசுத்தமானவை என்று நம் நெறிகளை அவன் விலக்குகிறான்@ நீதிமான்களின் கடைசி முடிவை ஆவலாய்த் தேடுகிறான், கடவுள் தன் தந்தையென்று சொல்லி இறுமாந்திருக்கிறான்.
17 அவனுடைய சொற்கள் உண்மையா என்று பார்ப்போம், அவன் வாழ்வின் முடிவில் என்ன நடக்குமெனச் சோதித்தறிவோம்.
18 எனெனில், நீதிமான் கடவுளின் மகனாயின், அவனுக்கு அவர் துணை செய்வார், மாற்றார் கையினின்று அவனை விடுவிப்பார்.
19 அவனுடைய சாந்தத்தை அறிந்து கொள்ளவும், பொறுமையைச் சோதித்துப் பார்க்கவும், அவனை நிந்தை வேதனைப்படுத்திப் பார்ப்போம்.
20 வெட்கத்துக்குரிய சாவுக்கு அவனை ஆளாக்குவோம், ஏனெனில், அவன் சொற்படி அவனுக்குத் தான் கடவுளின் துணையிருக்குமே!"
21 பொல்லாதவர்கள் இவ்வாறு எண்ணி ஏமாந்து போயினர்@ ஏனெனில் அவர்களின் தீய எண்ணமே அவர்களைக் குருடராக்கிவிட்டது.
22 கடவுளின் மறைபொருட்களை அவர்கள் அறியார்கள்@ தூய வாழ்விற்குத் கைம்மாறு உண்டு என்பதில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை@ மாசற்ற ஆன்மாக்களுக்குப் பரிசு கிடைக்கும் என அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
23 ஏனெனில் அழியாமைக்கென்றே கடவுள் மனிதனைப் படைத்தார், தமது காலங்கடந்த தன்மையின் சாயலாகவே அவனை உண்டாக்கினார்.
24 ஆனால் பசாசின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது.
25 அவன் பக்கம் சேர்கிறவர்கள் அதை நுகர்வார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு, அவன், ஏனெனில், நமது, நாம், ஏற்பாடு, போல், பழைய, அவனை, இருக்கிறான், ஆகமம், திரும்பி, கடவுளின், பார்ப்போம், அவனுடைய, கொள்கிறான், கடவுள், நமக்குத், நடத்தை, சிதறிப், இவ்வாறு, ஆன்மிகம், திருவிவிலியம், சொல்லிக், ", இல்லை, வருதல், போகும்@, இதுவே