ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 14
2 செல்வம் சேர்க்கவேண்டுமென்னும் ஆசையே அந்தக் கப்பலைச் செய்யத் திட்டம் போட்டது@ கப்பலைக் கட்டியவன் அதைத் திறமையோடு கட்டினான்.
3 ஆனால், தந்தை உம் பராமரிப்பு தான் அதைச் சரியான வழியில் ஓட்டுகின்றது@ ஏனெனில் கடலில் அதற்கொரு வழியமைத்தீர்@ அலைகளினூடே பாதுகாப்பான வழியைக் காட்டினீர்.
4 எவ்வகை இடரினினிறும் உம்மால் காக்க முடியுமெனக் காட்டுகிறீர்@ ஆகவே, திறமையற்றவன் கூடக் கடலில் பயனம் செய்யலாம்.
5 உமது ஞானத்தின் செயல்கள் பயனின்றிப் போகக்கூடாது என்பது தான் உமது திருவுளம்@ அதை எண்பிக்கவே, மிகச் சிறிய மரத்துண்டினிடம் தங்கள் உயிரையே ஒப்படைக்கும் மனிதர்கள் அலைகடலில் படகு ஓட்டி இடரின்றிக் கரை சேர்கிறார்கள்.
6 பண்டைக்காலத்தில், ஆணவங்கொண்ட அரக்கர்கள் அழிக்கப்பட்ட போதுங் கூட, உலகின் நம்பிக்கை ஒரு படகில் தான் புகலிடம் கண்டது@ அந்தப் படகு உம் கையால் செலுத்தப்பட்டுப் புதிய மனுக்குலத்தின் வித்தை உலகில் விட்டுச் சென்றது.
7 நீதியைப் பிறப்பிக்கிற மரம் பேறு பெற்றது.
8 ஆனால் கையால் செய்யப்பட்ட சிலை சபிக்கப்பட்டது@ அதைச் செய்தவனும் சபிக்கப்பட்டவன்@ அவனோ அவ்வேலையைச் செய்ததற்காக, அதுவோ, அழியக்கூடிய பொருளாயிருந்தும் தெய்வம் எனப் பெயர் பெற்றதற்காக,
9 இறைப் பற்றில்லாதவனையும் அவனது இறைப்பற்றின்மையையும் கடவுள் சமமாகவே வெறுக்கிறார்.
10 ஏனெனில் செய்தவனோடு செய்யப்பட்ட வேலையும் ஒருமிக்கத் தண்டிக்கப்படும்.
11 ஆதலால் புறவினத்தாரின் சிலைகள்மேலும் தண்டனைத் தீர்ப்பு விழும்@ ஏனெனில் கடவுளின் படைப்புகளில் ஒரு பகுதியாயிருந்தும் அவை அருவருப்பான சிலைகளாயின@ மனிதர்களின் ஆன்மாக்களுக்குக் கண்ணிகளாகவும், அறிவிலிகளின் கால்களுக்கு வலையாகவும் ஆயின.
12 சிலைகள் செய்ய எண்ணியதே விபசாரத்தின் தொடக்கமாயிற்று@ அவற்றைக் கண்டுபிடித்ததே வாழ்வின் அழிவாயிற்று.
13 அவை தொடக்க முதல் இருந்ததுமில்லை, என்றென்றைக்கும் இருக்கப் போவதுமில்லை.
14 மனிதனின் வீண்பெருமையால் அவை உலகில் இடம் பெற்றன@ ஆதலால் அவற்றின் முடிவை விரைவில் காணலாம்.
15 ஆறாத் துயரில் ஆழ்ந்திருக்கும் தந்தையொருவன் குறுகிய காலத்திற்குள் திடீரெனத் தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட தன் மகனின் உருவத்தைச் செய்து, முன்பு செத்தவனாகிய அவனை இப்பொழுது தெய்வமாக வணங்குகிறான்@ மறைச் சடங்குகளும் பலிகளும் அதற்குச் செலுத்தும்படி தன்னுடைய ஊழியர்க்கும் சொல்லுகிறான்.
16 பிறகு காலப்போக்கில் இந்தத் தீய வழக்கம் உறுதிப்பட்டு ஒரு சட்டத்தைப் போல் கடைப்பிடிக்கப்பட்டது@ மன்னர்கள் பிறப்பித்த கட்டளையின்படி மனிதர்கள் செதுக்கப்பட்ட சிலைகளை வணங்கி வந்தனர்.
17 மேலும் தொலைவில் இருந்தவர்களை மனிதர் நேருக்கு நேராய் வணங்க முடியாததால், தொலைவிலிருந்தே அவர்களுடைய தோற்றத்தைக் கற்பனை செய்து, தொலைவிலிருந்தே அவர்களுடைய தோற்றத்தைக் கற்பனை செய்து, தொலைவிலிருந்தவனை எதிரிலிருப்பவன் போல் அவன்மேல் தாங்கள் காட்டும் ஆர்வத்தால் பாராட்டும் படி, தாங்கள் போற்ற விரும்பிய அந்த அரசனுடைய காணக்கூடிய சாயலொன்றைச் செய்தனர்.
18 அரசனை அறியாதவர்கள் கூட அவனை ஆர்வத்தோடு வணங்குவதற்குச் சிற்பியின் புகழார்வமும் அவர்களைத் தூண்டிற்று.
19 ஏனெனில் அவன் தன்னை ஆள்பவனுக்கு மகிழ்ச்சி தர விரும்பித் தன் திறமையெல்லாம் காட்டி அந்தச் சாயலை உள்ளதற்கு மேல் மிக அழகாய் ஒருவேளை செய்திருப்பான்.
20 அவனது வேலைப்பாட்டின் அழகில் வயப்பட்ட மக்கள் திரள், கொஞ்ச காலத்திற்கு முன் மனிதனாக மதிப்பு தந்த ஒருவனை இப்பொழுது தெய்வமாக வணங்கி வந்தனர்.
21 இதுவே வாழ்வை வீழ்த்தும் படுகுழியாயிற்று@ ஏனெனில் கேடுகாலத்திற்கு அல்லது அரசனது அதிகாரத்திற்கு அடிமையாகி கடவுளுக்கே தனிப்பெரும் உரிமையான பெயரை மனிதர் கற்களுக்கும் மரங்களுக்கும் கொடுத்தார்கள்.
22 கடவுளை அறியாததால் இவ்வாறு மனிதர் தவறிப் போனது போதாமல், அறியாமையின் காரணத்தால் பெரும் போராட்டத்தில் வாழ்கிறார்கள்@ இத்தகைய பெருந் தீமைகளை அவர்கள் சமாதானம் என்கின்றனர்.
23 ஏனெனில் தங்கள் குழந்தைகளைப் பலியிட்டாலும், அல்லது மறைவான மறைச் சடங்குகளைக் கொண்டாடினாலும், அல்லது விந்தையான வழக்கப்படி களியாட்டங்கள் நடத்தினாலும்,
24 தங்கள் வாழ்க்கையையோ திருமணங்களையோ அவர்கள் ஒருபோதும் தூய்மையாய்க் காப்பதில்லை@ மாறாக, ஒருவனையொருவன் பொறாமையால் கொலை செய்கிறான், விபசாரத்தால் ஒருவனுக்கு ஒருவன் துயர் விளைக்கிறான்.
25 எங்கும் புரட்சி, இரத்தம், கொலை, களவு, வஞ்சகம்@ ஊழல், பிரமாணிக்கமின்மை, குழப்பம், பொய்யாணை@
26 நன்மை இன்னதென்று உணராத அறிவின் மயக்கம், பிறர் செய்த நன்மைகளை மறத்தல்@ ஆன்மாக்களைத் தீட்டுப்படுத்தல், இயல்புக்கு மாறான காமவேட்டை@ மணவாழ்வில் தாறுமாறு, விபசாரம், ஒழுக்கக் கேடு முதலியன மலிந்து போயின.
27 ஏனெனில், பெயரைக் கூடச் சொல்லக் கூடாத சிலை வழிபாடு தான் தீமைகளுக்கெல்லாம் துவக்கமும் காரணமும் முடிவுமாகும்.
28 ஏனெனில், அவற்றை வணங்குகிறவர்கள் மகிழ்ச்சியால் வெறிபிடித்தவர்களாகிறார்கள்@ அல்லது பொய்களை இறைவாக்கு போல் கூறுகிறார்கள்@ நேர்மையாய் வாழ்வதில்லை@ தாராளமாய்ப் பொய்யாணை இடுகிறார்கள்.
29 உயிரற்ற சிலைகளில் தங்கள் நம்பிக்கையை வைப்பதால் பொய்யாணையிட்டாலும் தங்களுக்குத் தீமை வருமென எண்ணுவதில்லை.
30 ஆனால் இரண்டு காரணங்களை முன்னிட்டு நீதியான தண்டனைகள் அவர்களுக்குக் கிடைக்கும்: ஒன்று: சிலைகளுக்குத் தங்களைத் தொண்டர்களாக்கிக் கடவுளைப்பற்றிக் கீழான எண்ணங்கொண்டனர்@ இரண்டு: பரிசுத்தத்தை இகழ்ந்து நீதிக்கு முரணாகவும் வஞ்சகத்தோடும் ஆணையிட்டார்கள்.
31 பொல்லாதவர் எவற்றின் பெயரால் ஆணையிட்டார்களோ அவற்றின் ஆற்றல் அவர்களின் வஞ்சனையைத் தண்டிப்பதில்லை@ ஆனால், பாவஞ் செய்கிறவர்களுக்குரிய நீதியான தண்டனையே அவர்களின் வஞ்சனையைத் தண்டிக்கிறது
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏனெனில், ஏற்பாடு, பழைய, தங்கள், தான், அல்லது, மனிதர், போல், செய்து, ஆகமம், வந்தனர், தெய்வமாக, வணங்கி, மறைச், தொலைவிலிருந்தே, கற்பனை, நீதியான, அவர்களின், வஞ்சனையைத், இரண்டு, கொலை, தோற்றத்தைக், இப்பொழுது, தாங்கள், அவர்களுடைய, ஆதலால், ஒருவன், அதைச், கடலில், அலைகடலில், மேலும், திருவிவிலியம், ஆன்மிகம், உமது, மனிதர்கள், சிலை, அவனது, அவற்றின், செய்யப்பட்ட, உலகில், படகு, கையால், அவனை