ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 12
2 ஆகையால், மீறுகிறவர்களை நீர் சிறிது சிறிதாய்க் கண்டிக்கிறீர்@ அவர்கள் எந்தக் காரியங்களில் பாவம் செய்கிறார்களோ அந்தக் காரியங்களை நினைவுபடுத்தி எச்சரிக்கை செய்கிறீர்@ ஆண்டவரே, அவர்கள் தீமையினின்று விடுபடவும், உம்மில் தங்கள் நம்பிக்கையை வைக்கவுமே நீர் இவ்வாறு செய்கிறீர்.
3 உம்முடைய பரிசுத்த நாட்டில் வாழ்ந்த பண்டைக் குடிமக்களை
4 அவர்களுடைய அருவருப்புக்குரிய செயல்கள், மந்திரவாதங்கள், அக்கிரமம் நிறைந்த வழிபாட்டு முறைகளுக்காகவும்,
5 இரக்கமின்றிக் குழந்தைகளை அவர்கள் கொன்றதாலும், மனித சதையையும் இரத்தத்தையும் விருந்தாக உண்டதாலும், மனமார அவர்களை நீர் வெறுத்தீர்@ அருவருப்பான சடங்குகளால் தீட்சை பெற்றவர்களையும்,
6 எதிர்க்க முடியாத குழந்தைகளைக் கொலை செய்த பெற்றோர்களையும், எங்கள் தந்தையரின் கைகளால் அழிக்கத் திருவுளங்கொண்டீர்@
7 உலகின் நாடுகளிலெல்லாம் உமக்கு மிகப்பிடித்தமான இந்நாடு கடவுளின் குழந்தைகளாகிய தகுதிவாய்ந்த குடியேற்ற மக்களை வரவேற்க வேண்டுமென்றே நீர் இவ்வாறு செய்தீர்.
8 ஆனால், இப்பாவிகளும் மனிதர்களே ஆதலால், அவர்களை அளவோடே தண்டித்து, உமது படையின் முன்னோடிகளாக மலைக்குளவிகளை அனுப்பி அவர்களைக் கொஞ்சங் கொஞ்சமாய் அழிக்கச் செய்தீர்.
9 எனினும், போர்க்களத்தில் பொல்லாதவர்களை நீதிமான்களின் கைகளில் விட்டுவிடவோ, அச்சத்திற்குரிய கொடிய விலங்குகளால் அல்லது உமது சொல்லால் ஒரே நொடியில் அழிக்கவோ உம்மால் முடியாமற் போய்விடாது.
10 அவர்கள் பிறவியிலேயே தீயவர்கள் என்றும், தீய பண்பு அவர்கள் இரத்தத்திலேயே ஊறிவிட்டது என்றும், அவர்களுடைய மனப்பான்மை ஒருபோதும் மாறாது என்றும் உமக்கு நன்றாகத் தெரிந்திருந்தும், படிப்படியாய் அவர்களைத் தண்டித்து அவர்கள் மனந்திரும்புவதற்கு வாய்ப்புக் கொடுத்தீர்.
11 ஏனெனில் அவர்கள் தொடக்கத்திலிருந்தே சாபனைக்குட்பட்ட மக்களாய் இருந்து வந்தனர். யாருக்கும் அஞ்சிக்கொண்டு நீர் அவர்களை அவர்கள் பாவங்களுக்காகத் தண்டிக்காமல் விடவில்லை.
12 என்ன செய்தீர்?" என்று உம்மைக் கேட்கக்கூடியவன் யார்? அல்லது உமது தீர்ப்பை எதிர்ப்பவன் எவன்? நீர் உண்டாக்கிய மக்களினங்களை நீரே அழித்தால் அதற்காக உம்மேல் குற்றம் சுமத்துகிறவன் யார்? அக்கிரமிகளின் சார்பாக உமக்கெதிராய்க் எழுந்து உம்மைப் பழிவாங்கும் துணிவு யாருக்கிருக்கிறது?
13 ஏனெனில் அனைவரையும் அக்கறையாய்க் காப்பாற்றுவதற்கு உம்மைத் தவிர வேறு கடவுளில்லை@ நீதியான தீர்ப்பளித்தீர் என்பதை நீர் எவருக்கும் விளக்கிக் காட்ட உமக்குக் கடமை இல்லை.
14 நீர் தண்டித்தவர்களைக் குறித்து உம்முன் வந்து உம்மைக் கேட்க எந்த அரசனாலும் மன்னனாலும் முடியாது.
15 நீர் நீதியுள்ளவர், அனைத்தையும் நீதியோடு ஆளுகிறீர்@ குற்றமற்றவனைத் தண்டிப்பது உம் வல்லமைக்குத் தகாதென நீர் அறிந்திருக்கிறீர்.
16 ஏனெனில் உமது ஆற்றல் தான் நீதியின் ஊற்று@ அனைத்தின் மீதும் உமக்கிருக்கும் அரசுரிமை அனைத்தையும் நீர் இரக்கத்தோடு நடத்தச் செய்கிறது.
17 உமது வல்லமையின் நிறைவை நம்பாதவர்களுக்கு நீர் உம்முடைய ஆற்றலைக் காட்டுகிறீர்@ உம்மை அறியாதவர்களின் ஆணவத்தை அடக்குகிறீர்.
18 நீர் ஆற்றலில் இணையற்றவராயிருப்பதால், கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்@ மிகுந்த பொறுமையோடு எங்களை நடத்துகிறீர்@ ஏனெனில் விருப்பமான போது செயலாற்ற உமக்கு வல்லமை இருக்கிறது.
19 நீதிமான் ஈர நெஞ்சத்தினனாய் இருக்க வேண்டும் என்று இவற்றால் உம் மக்களுக்கு அறிவுறுத்தினீர். உம்முடைய மக்களை நன்னம்பிக்கையால் நிரப்பினீர்@ ஏனெனில், பாவங்களுக்குத் தவஞ் செய்யக் காலங் கொடுக்கிறீர்.
20 உம் ஊழியர்களின் பகைவர்களுக்கும், அதுவும் அவர்கள் கொலைத் தண்டனைக்குரியவர்களாய் இருந்தும், தங்கள் தீய நெறியை விட்டு விடக் காலமும் வாய்ப்பும் தந்து, இத்துணைக் கனிவோடும் இரக்கத்தோடும் அவர்களைத் தண்டித்திருக்க,
21 உம்முடைய புதல்வர்கள் மேல் மட்டும் எத்துணைக் கவனத்தோடும், அளவோடும் தீர்ப்புச் செலுத்தினீர்! இவர்களின் தந்தையர்க்குத் தான் நல்ல வாக்குறுதிகள் நிறைந்த ஆணைகளையும் ஒப்பந்தங்களையும் செய்தீரன்றோ?
22 ஆதலால் நீர் எங்களைத் தண்டித்துத் திருத்தும் போது எங்கள் பகைவர்களைப் பத்தாயிரம் மடங்கு கடுமையாய்த் தண்டிக்கிறீர்@ நாங்கள் தீர்ப்பு வழங்கும் போது உம்முடைய நன்மைத் தனத்தைச் சிந்தித்துப் பார்க்கவும், நாங்கள் தீர்ப்பிடப்படும் போது இரக்கத்தை எதிர்பார்க்கவுமே நீர் இவ்வாறு செய்கிறீர்.
23 ஆதலால் மடமையிலும் அக்கிரமத்திலும் வாழ்க்கை நடத்தியவர்களை அவர்கள் வணங்கிய அருவருப்புக்குரிய பொருட்களாலேயே வதைத்துத் துன்புறுத்தினீர்.
24 ஏனெனில், தவறான வழிகளில் அவர்கள் நெடுந் தொலைவு சென்று, நிந்தைக்குரிய மிருகங்களைத் தெய்வங்களாக ஏற்றுக்கொண்டனர்@ அறிவில்லாத குழந்தைகளைப் போல் அவர்கள் ஏமாந்து போயினர்.
25 ஆகவே, அறிவில்லாக் குழந்தைகளை ஏளனஞ் செய்வது போல், அவர்களையும் ஏளனம் செய்ய உம் தீர்ப்பை அனுப்பினீர்.
26 ஆனால், ஏளனத்துக்குரிய தண்டனைகளால் திருந்தாதவர்கள், தக்க வகையில் கடவுளின் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக வேண்டியிருந்தது.
27 எவ்வாறெனில், தாங்கள் தெய்வங்களாய் எண்ணின மிருகங்களே அவர்களை வதைத்தன@ அவற்றாலேயே துன்புற்று எரிச்சலுற்றனர்@ இதைப் பார்த்து முன்பு தாங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தவரையே இப்பொழுது உண்மையான கடவுள் என அறிந்து கொண்டனர். ஆதலால் தான், மிகவும் கொடிய தொருதண்டனை அவர்களுக்கு விதிக்கப் பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு, நீர், ஏனெனில், உமது, உம்முடைய, ஏற்பாடு, போது, அவர்களை, ஆதலால், பழைய, செய்தீர், தான், ஆகமம், இவ்வாறு, உமக்கு, என்றும், அவர்களைத், உம்மைக், தீர்ப்பு, போல், தாங்கள், நாங்கள், அனைத்தையும், தீர்ப்பை, யார், கடவுளின், செய்கிறீர், அவர்களுடைய, தங்கள், ஆன்மிகம், திருவிவிலியம், அருவருப்புக்குரிய, நிறைந்த, தண்டித்து, கொடிய, மக்களை, எங்கள், குழந்தைகளை, அல்லது