ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 11
2 மனிதர் வாழாத பாழ்வெளியின் வழியாய்ப் பயணம் செய்தனர், மக்கள் நடமாட்டமற்ற இடங்களில் கூடாரமடித்தனர்.
3 அவர்களுடைய பகைவர்களை எதிர்த்து நின்றனர்@ அவர்களை எதிர்த்து வந்தவர்களை வென்று புறங்கண்டனர்.
4 தாகம் எடுத்த போது, அவர்கள் உம்மைக் கூவியழைத்தனர்@ செங்குத்தான கற்பாறையிலிருந்து அவர்கள் நீர் பெற்றனர், கெட்டியான கல்லிலிருந்து அவர்கள் தாகம் தணித்துக் கொண்டனர்.
5 பகைவர்கள் எவற்றால் தண்டிக்கப்பட்டார்களோ அவற்றாலேயே இஸ்ராயேல் மக்கள் துன்ப வேளையில் நன்மையடைந்தனர்.
6 நீரில்லாமல் தாகத்தால் வருந்தியிருந்த அம்மக்களுக்குக் கடவுள் தயவுகூர்ந்தார்.
7 குழந்தைகளைக் கொல்ல வேண்டும் என்னும் ஆணையைக் கண்டிக்கும்படி இரத்தம் போல் குழம்பிய செந்தண்ணீர் ஓடுகின்ற வற்றாத ஆற்று நீரைப் பகைவர்களுக்குத் தந்து,
8 நம்பிக்கையே இல்லாத போது உம் மக்களுக்கு மிகுதியான தண்ணீர் கொடுத்தீர்.
9 அவர்களுடைய பகைவரை எவ்வாறு தண்டித்தீரென்பதை அவ்வேளையில் அவர்களுக்கு எடுத்த தாகத்தால் காட்டினீர்.
10 அவர்கள் உட்படுத்தப்பட்ட சோதனையெல்லாம் உண்மையில் இரக்கத்தினால் அவர்களுக்குத் தரப்பட்ட கண்டிப்புதான்@ ஆயினும் கடவுள் சினங்கொண்டு தீர்ப்பிடும் போது பொல்லாதவர்கள் எவ்வளவு வதைக்கப் படுகிறார்கள் என்பதை அச்சோதனைகளால் அறிந்து கொண்டார்கள்
11 ஏனெனில் தந்தை எச்சரிக்கை செய்வது போல், உம்மவர்களை நீர் சோதித்தீர்@ ஆனால், தண்டனை விதிக்கும் கண்டிப்பு மிக்க அரசனைப் போல், மற்றவர்களை நீர் பரிசோதித்தீர்.
12 இஸ்ராயேல் மக்கள் புறப்படு முன்பும் புறப்பட்ட பின்பும் எதிரிகள் ஒரே வகையில் மனம் புழுங்கினர்.
13 இரு மடங்கான துயரம் அவர்களை வாதித்தது@ நிகழ்ந்ததை நினைத்து நினைத்து வேதனைக் குரல் எழுப்பினர்.
14 எவ்வாறெனில், தங்களுக்குக் கிடைத்த தண்டனைகளால், பிறருக்கு நன்மை விளைந்தது என்று கேட்ட போது, ஆண்டவரின் செயலை அதில் கண்டனர்.
15 முன்னொரு நாள் மோயீசன் வெளியில் எறியப்படச் செய்தார்கள், பின்னர் அவரையே நகைத்துப் புறக்கணித்துத் தள்ளினார்கள்@ ஆனால் இவையெல்லாம் நிகழ்ந்த பின்னர்- நீதிமான்களின் தாகத்தினும் கொடிய தாகத்தை அனுபவித்த பின்னர்- அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.
16 அவர்களுடைய பொல்லாத அறிவுகெட்ட எண்ணங்களால் அவர்கள் நெறிதவறிப் பகுத்தறிவில்லாப் பாம்புகளையும், பயனற்ற மிருகங்களையும் வணங்கியதால், அவர்களைத் தண்டித்துப் பழிவாங்கும்படி அறிவில்லா உயிரினங்களின் கூட்டத்தையே அவர்கள் மேல் நீர் ஏவி விட்டீர்@
17 எதைக் கொண்டு ஒருவன் பாவஞ் செய்கிறானே அதைக் கொண்டே அவன் தண்டிக்கப்படுவான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டே அவ்வாறு செய்தீர்.
18 ஏனெனில் உருவமற்ற பருப்பொருளைக் கொண்டு உலகைப் படைத்த உமது எல்லாம் வல்ல கைவன்மைக்கு, கரடிகளின் கூட்டத்தையோ, கொடிய சிங்கங்களையோ,
19 புதிதாய் உண்டாக்கப்பட்டவையும், முன் பின் பார்த்திராத சீற்றம் நிறைந்தவையுமான விலங்குகளையோ, தீயின் வெம்மையை மூச்சாக விடும் மிருகங்களையோ, அடர்ந்த புகைப் படலத்தை ஏப்பமாக விடும் விலங்குகளையோ, கண்களிலிருந்து தீப்பொறிகளைத் தெறிக்கச் செய்யும் மிருகங்களையோ அவர்கள் மேல் ஏவி விடுவது கடினமாய் இருந்ததில்லை.
20 அவற்றால் மனிதர் அழிக்கப்படுவது மட்டுமன்று@ அவற்றைப் பார்த்தாலே திகிலுற்றுச் செத்துப் போவார்கள்.
21 ஆனால் அவையும் உமக்குத் தேவையாயிருந்தனவல்ல@ அவர்களை வீழ்த்த ஒரே ஒரு மூச்சு போதுமாயிருந்தது@ நீதியால் விரட்டியடிக்கப்பட்டு, உமது வல்லமையின் மூச்சினால் சிதறடிக்கப்பட்டிருப்பார்கள்@ ஆயினும் நீர் அனைத்தையும் அளவோடும் கணக்கோடும் நிறையோடும் ஏற்பாடு செய்தீர்.
22 மிகுந்த ஆற்றலைக் காட்ட உம்மால் எப்போதும் இயலும்@ உமது கைவன்மையை எதிர்த்து நிற்க வல்லவன் யார்?
23 உள்ளபடியே, தராசுத் தட்டில் நுண்ணிய எடை வேறுபாடு காட்டும் மிகச் சிறிய துரும்பு போலும், நிலத்தில் விழும் காலைப்பனி நீர்த்துளியைப் போலும் உம் முன்னிலையில் இந்த உலக முழுவதும் இருக்கிறது.
24 அனைவர்க்கும் நீர் இரக்கம் காட்டுகிறீர்@ ஏனெனில் உம்மால் எல்லாம் செய்ய இயலும்@ மனிதர்கள் மனம் வருந்துவதற்கு வாய்ப்பளிக்கவே அவர்கள் பாவங்களைப் பார்த்தும் பாராமல் இருக்கிறீர்.
25 ஆம் நீர் உண்டாக்கிய அனைத்தின்மீதும் அன்பு கூருகிறீர்@ படைத்தவற்றுள் எதையும் நீர் அருவருத்துத் தள்ளுகிறதில்லை@ எனெனில் நீர் எதையேனும் வெறுத்துப் பகைத்திருந்தால், அதை உண்டாக்கியிருக்கவே மாட்டீர்.
26 உமக்குத் திருவுளமில்லாமல் இருந்திருந்தால், எது தான் அழியாமல் நிலைத்திருக்கக்கூடும்? உம்மால் அழைக்கப் படாதிருந்தால், எதுதான் காப்பாற்றப்படக் கூடும்?
27 உயிரினங்கள் மேல் அன்புள்ளவரே, நீர் எல்லாவற்றையும் காத்து வருகிறீர்@ ஏனெனில் யாவும் உம்முடையவையே!
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு, நீர், ஏற்பாடு, ஏனெனில், அவர்களுடைய, போது, பழைய, மேல், உமது, ஆகமம், போல், பின்னர், உம்மால், மக்கள், எதிர்த்து, அவர்களை, கொண்டு, செய்தீர், விடும், மிருகங்களையோ, உமக்குத், கொடிய, போலும், விலங்குகளையோ, இயலும்@, எல்லாம், ஆயினும், தாகம், எடுத்த, மனிதர், ஆன்மிகம், திருவிவிலியம், இஸ்ராயேல், தாகத்தால், மனம், அறிந்து, என்பதை, கடவுள், நினைத்து