சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 9
2 உன் அதிகாரத்தைப் பெண் அபகரித்துக் கொள்வதால் நீ வெட்கம் அடையாதபடிக்கு உன் மன அதிகாரத்தை அவளுக்குக் கொடுத்து விடாதே.
3 பல காரியங்களை ஆசிக்கும் பெண்ணின் வலைகளில் நீ சிக்கிக் கொள்ளாதபடிக்கு அவளை ஏறெடுத்துப் பார்க்காதே.
4 நடன மாதோடு தொடர்பு கொள்ளாதே. அவள் மாய்கையினால் கெடாதபடி அவளுக்குச் செவி கொடாதே.
5 இளமங்கையின் அழகினால் நீ கெட்டுப் போகாதபடி அவளைக் கண்ணோக்காதே.
6 எக்காரியத்திலும் விலைமாதருக்கு உன் மனத்தைப் பறிகொடாதே. ஏனென்றால், உன்னையும் உன் சொத்துக்களையும் இழந்து போவாய்.
7 நகரின் தெருக்களில் சுற்றிப்பார்க்காதே@ அதன் மைதானங்களில் திரியாதே.
8 தன்னைத் தானே அழகுபடுத்தித் திரியும் பெண்ணினின்று உன் முகத்தைத் திருப்பிக் கொள். அழகுள்ள அன்னிய பெண்ணை நோக்காதே.
9 பெண்ணின் அழகினால் பலர் கெட்டழிந்துள்ளார்கள்@ அதனால் ஆசையுணர்வு நெருப்பைப் போல் பற்றி எரிகின்றது.
10 வேசியாய்த் திரியும் எவளும் பாதையிலுள்ள சகதியைப் போல் மிதிக்கப்படுவாள்.
11 பிறன் மனைவியின் அழகைக் கண்டு அதிசயித்தவர்கள் பலர் தள்ளுண்டு போனார்கள். ஏனென்றால், அவள் உரையாடல் நெருப்பைப் போல் எரிகின்றது.
12 பிறன் மனைவியோடு ஒரு போதும் உட்கார்ந்திராதே. முழங்கையூன்றிச் சாய்ந்து அவளுடன் மேசையில் அமராதே.
13 உன் மனம் அவள் மீது ஆசை கொள்ளாதபடிக்கும், அதனால் நீ இரத்தம் சிந்தி உயிர் இழக்காதபடிக்கும் அவளுடன் மது குடித்து உல்லாசமாய் உரையாடாதே.
14 பழைய நண்பனைக் கைவிடாதே. ஏனென்றால், புதியவன் அவனைப் போல் ஆகமாட்டான்.
15 புதிய மதுவைப் போலவே புதிய நண்பனும். மது பழமைப்பட்டால் அதை இன்பத்தோடு அருந்துவாய்.
16 பாவியினுடைய மகிமையையும் செல்வத்தையும் பற்றிப் பொறாமை கொள்ளாதே. ஏனென்றால், அவனுக்குப் பின்வரும் கேட்டை நீ அறியாய்.
17 தீயவன் மறுவுலகம் வரையிலும் விரும்பப்படுவதில்லை என்று நீ அறிந்திருக்கிறபடியால், நீதியற்றவனுடைய அநீதியை விரும்பாதே.
18 கொலை செய்யும் வலிமையுள்ள மனிதனை விட்டகன்று வெகு தூரத்தில் இரு. அப்போது மரணத்தின் பயங்கரம் உன்னை அணுகாது.
19 அவனிடம் நீ போவாயேயாகில், அவன் உன் உயிரை வாங்காதபடிக்கு யாதொன்றும் செய்யாதே.
20 மரண நேரம் கிட்டியிருக்கிறதென்று அறிந்திரு. ஏனென்றால், கண்ணிகளின் நடுவே புகுகிறாய்@ கோபவெறி கொண்டவர்களுடைய ஆயுதங்களின் மேல் உலாவுகிறாய்.
21 உன் வலிமைக்குத் தக்க வண்ணம் பிறனோடு எச்சரிக்கையாய் இரு. ஞானிகளுடையவும் விவேகிகளுடையவும் யோசனையைக் கேள்.
22 நீதிமான்கள் உன்னுடன் பந்தியமரக் கடவார்கள். உன் மகிமை தெய்வ பயத்தில் அடங்கியிருக்கக்கடவது.
23 உன் உள்ளத்தில் கடவுளைப் பற்றிய எண்ணம் இருக்கக்கடவது. உன் உரையாடலெல்லாம் உன்னத கடவுளின் கட்டளைகளைப் பற்றியதாய் இருக்கக்கடவது.
24 தொழிலாளரின் கையினால் செய்யப்பட்ட வேலைகள் மதிப்படைகின்றன. மக்கள் தலைவன் தன் வார்த்தைகளின் ஞானத்தாலும், முதியோர் தம் மொழிகளின் கருத்தினாலும் புகழப்படுவார்கள்.
25 வாயாடி தன் ஊரில் அஞ்சப்படத்தக்கவன். யோசனையில்லாமல் பேசுகிறவன் பகைக்கப்பட வேண்டியவன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏனென்றால், பழைய, ஏற்பாடு, போல், அவள், ஆகமம், சீராக், மீது, பெண்ணின், நெருப்பைப், எரிகின்றது, அவளுடன், இருக்கக்கடவது, அதனால், பிறன், திரியும், திருவிவிலியம், உன்னுடன், கொள்ளாதே, அழகினால், ஆன்மிகம், பலர்