சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 8
2 செல்வமுள்ளவனோடு வழக்குத் தொடுக்காதே@ ஏனென்றால், சில வேளை அவன் உன் மீது வழக்குத் தொடுப்பான்.
3 ஏனென்றால், பொன்னும் வெள்ளியும் பலரை அழித்தொழித்தன@ அரசரையும் தம் வசமாக்கித் தம் விருப்பப்படி நடத்தின.
4 வாயாடியோடு வழக்கிடாதே. அவனிடம் எரிகிற நெருப்பில் இன்னும் எண்ணெய் வார்க்காதே.
5 அறிவீனன் உன் கோத்திரத்தை இழிவாய்ப் பேசாதபடிக்கு அவனோடு உறவு கொள்ளாதே.
6 பாவத்தை விட்டு வெறுத்து நடக்கும் மனிதனை நீ நிந்தியாதே@ அவனைக் கண்டிக்காதே. ஏனென்றால், நாம் எல்லோருமே தண்டனைக்கு உரியவர்கள் என்று நினைத்துக் கொள்.
7 எந்த மனிதனையும் அவன் முதுமையில் புறக்கணிக்காதே@ ஏனென்றால், நம்மைப் போல் இருந்தல்லவோ அவன் முதியவனானான்!
8 உன் பகையாளியின் மரணத்தைப்பற்றி மகிழ்ச்சி கொள்ளாதே@ ஏனென்றால், நாம் எல்லோரும் சாவோமென்றும், நமது சாவைப் பற்றிப் பிறர் மகிழ்ச்சி கொள்ள நமக்கு மனம் இராதென்றும் அறிந்து கொள்.
9 பெரியோரான ஞானிகள் சொல்லும் காரியங்களை அசட்டை செய்யாதே@ அவர்கள் நீதி மொழிகளின்படியே நடந்துகொள்.
10 ஏனென்றால், அவர்களிடமிருந்து ஞானத்தையும், அறிவின் நெறியையும், பெரியோருக்கு முறைப்பாடு இல்லாமல் ஊழியம் செய்யும் விதத்தையும் கற்றறிந்து கொள்வாய்.
11 பெரியோர் சொல்வதை அசட்டை செய்யாதே@ ஏனென்றால், அவர்கள் தங்கள் தந்தையரிடம் கற்றறிந்திருக்கின்றார்கள்.
12 ஆதலால், அவர்களால் நீ அறிவுக் கூர்மை அடைவாய்@ வேண்டும் போது மறுமொழி சொல்லவும் அறிவாய்.
13 (அடுப்பில் எரியும் கரிபோலப்) பாவிகளுடைய கோபத்தை எழுப்பாதே@ ஏனென்றால், அவர்கள் பாவத்தின் அக்கிரமம் உன்னைச் சுட்டெரித்து விடும்.
14 அகந்தையுள்ளவனுடன் பிடிவாதம் கொள்ளாதே@ ஏனென்றால், அவன் உன் வார்த்தைகளைக் கொண்டு உன்மீது குற்றம் சாட்டுவான்.
15 உன்னிலும் வலியவனுக்குக் கடன்கொடாதே@ கொடுத்திருந்தால், இழந்து போனதென்று எண்ணிக்கொள்.
16 உன் வலிமைக்கு மிஞ்சி உத்தரவாதி ஆகாதே@ உத்தரவாதியானாலோ நீயே ஈடு செய்ய வேண்டியதென்று எண்ணிக்கொள்.
17 நீதிபதிக்கு விரோதமாகத் தீர்ப்புச் செய்யாதே@ ஏனென்றால், அவன் நீதிப்படியே தீர்ப்பிடுகின்றான்.
18 துடுக்குள்ளவனோடு சேர்ந்திராதே@ ஏனென்றால் சில வேளை தன்னால் விளைந்த தீமைகளை உன் மீது சுமத்துவான். ஏனென்றால், அவன் தன் விருப்பப்படி நடக்கிறான்@ நீயும் அவனுடைய மூடத்தனத்தினால் கெடுவாய்.
19 கோபியோடு சண்டையிடாதே. துடுக்கனோடு தனியிடம் போகாதே. ஏனென்றால், அவனுக்கு முன்பாக இரத்தம் ஒன்றுமல்ல. உனக்கு உதவியில்லாத இடத்தில் உன்னை நசுக்குவான்.
20 பேதைகளிடம் உன் காரியங்களைப் பற்றி யோசனை கேட்காதே@ ஏனென்றால், தங்களுக்கு விருப்பமானதை மட்டும் அவர்கள் விரும்பக் கூடும்.
21 அன்னியனுக்கு முன்பாக உன் இரகசியங்களைப் பேசாதே@ ஏனென்றால், அவன் பிறகு என்ன செய்யத் தொடங்குவான் என்று நீ அறியாய்.
22 எல்லாவித மனிதருக்குமே உன் உள்ளத்தை வெளிப்படுத்தாதே@ ஏனென்றால், சில வேளை பொய்யான செயலை உன் மீது சாட்டுவார்கள்@ உன்னைப் பற்றிப் புறணி சொல்வார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏனென்றால், அவன், ஏற்பாடு, பழைய, செய்யாதே@, மீது, சீராக், வேளை, ஆகமம், பற்றிப், கொள்ளாதே@, அசட்டை, மகிழ்ச்சி, எண்ணிக்கொள், முன்பாக, கொள், ஆன்மிகம், வழக்குத், திருவிவிலியம், விருப்பப்படி, நாம், கொள்வாய்