சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 10
2 மக்களுடைய நீதிபதி எப்படியோ அப்படியே அவன் ஏவலர்களும். நகரத் தலைவன் எப்படியோ அப்படியே அந் நகரில் வாழ்கிறவர்களும்.
3 அறிவற்ற அரசன் தன் குடிகளுக்குக் கெடுதி செய்வான். தலைவர்களின் அறிவுக்கேற்ற அளவு நகர்களில் குடிகள் தொகை ஏறும்.
4 மண்ணுலக அரசாட்சி கடவுளின் கையில் இருக்கின்றது. அதை ஆள்வதற்குத் தகுதியான தலைவரை அவர் வேண்டிய போது எழுப்புவார்.
5 மனிதனுடைய பேறும் கடவுள் கையில் இருக்கின்றது. அவர் ஞானிக்கு வேண்டிய மரியாதையைச் செய்விப்பார்.
6 பிறரால் உனக்கு உண்டாகும் எவ்விதத் தீமையையும் நினைவு கூராதே. தீச் செயல்கள் எதையும் நீ செய்யாதே.
7 அகந்தை கடவுளாலும் மனிதராலும் அருவருக்கப்படத் தக்கதாய் இருக்கின்றது. மனிதருடைய எல்லா அக்கிரமமும் வெறுக்கப்படத்தக்கது.
8 அநீதிகள், அக்கிரமங்கள், நிந்தைகள், பலவித மோசங்கள் முதலியவைகளை முன்னிட்டு, அரசு ஒரு நாட்டினின்று வேறொரு நாட்டுக்கு மாற்றப்படுகின்றது.
9 பேராசைக்காரனைக் காட்டிலும் கெடுதியானவன் ஒருவனுமில்லை. மண்ணும் சாம்பலும் அகந்தை கொள்வது ஏன்?
10 பணத்தை நேசிப்பதை விடத் தீயது ஒன்றுமில்லை. அப்படிச் செய்பவன் தன் ஆன்மாவை விலைபேசுகிறவனாவான்@ ஏனென்றால், தன் ஆயுட் காலத்திலேயே தனக்கு மிகவும் சொந்தமானவைகளை எறிந்து விடுகிறான்.
11 எந்த அதிகாரமும் நெடுநாளாக நிலை கொள்ளாது. நீடித்த நோய் மருத்துவனுக்குச் சுமையாய் இருக்கின்றது.
12 நோயின் ஆரம்பத்திலேயே மருத்துவன் அதைத் தறித்து விடுகிறான். அதைப் போலவே, அரசன் இன்று இருக்கிறான்@ நாளை இறக்கிறான்.
13 மனிதன் சாகும் போது பாம்புகளும் மிருகங்களும் புழுக்களுமே அவன் உரிமையாகும்.
14 கடவுளை விட்டகன்று போவதே மனிதனுடைய அகந்தையின் தொடக்கம்.
15 ஏனெனில் தன்னைப் படைத்தவரிடத்தினின்று அவன் மனம் விலகிப் போகின்றது@ அகந்தை எல்லாப் பாவங்களின் அடிப்படையாகவும் இருக்கிறது. அகந்தையால் பீடிக்கப்பட்டவன் கொடிய சாபத்துக்கு உரியவனாவான்@ இறுதியில் அது அவனை அழிக்கும்.
16 ஆதலால் தான் ஆண்டவர் பாவிகளின் கூட்டத்தை அவமானப்படுத்தினார். எப்போதும் அவர்களை அழித்தார்.
17 அகந்தை கொண்ட அதிகாரிகளுடைய அரியணைகளைக் கடவுள் வீழ்த்துவார். அவர்களுக்குப் பதிலாய்ச் சாந்தமுள்ளவர்களை அரியணைகளில் இருத்துவார்.
18 அகந்தை கொண்ட மக்களுடைய வேர்களை ஆண்டவர் உலர வைத்தார்@ அவர்களினின்றே தாழ்ச்சியுள்ளவர்களை நட்டு வைத்தார்.
19 அகந்தை கொண்டவர்களுடைய நாடுகளை ஆண்டவர் ஒழித்தார். அடித்தளம் மட்டும் அவர்களை அழித்தார்.
20 அவர்களில் சிலரைப் பட்டுப்போகும்படி செய்து அவர்களைச் சிதறடித்தார்@ அவர்களுடைய நினைவும் மண்ணுலகினின்று அற்றுப்போகும்படி செய்தார்.
21 அகந்தை கொண்டவர்களுடைய நினைவை ஆண்டவர் அழித்தார். மனத்தாழ்ச்சி உடையவர்களுடைய நினைவு நிலைத்திருக்கும்படி செய்தார்.
22 அகந்தை மனிதனுக்கு ஆகாது. பெண்களிடத்தில் பிறந்தவர்களுக்குக் கோபம் தகாது.
23 கடவுளுக்குப் பயந்து நடக்கும் மனித இனம் உயர்த்தப்படும்@ ஆண்டவருடைய கட்டளைகளை அசட்டை செய்யும் இனமோ அவமதிக்கப்படும்.
24 சகோதரரைச் சரியாய் நடத்துகிறவன் அவர்களால் மதிக்கப்படுவான். ஆண்டவருக்குப் பயந்து நடக்கிறவர்களை அவர் கண்ணோக்குவார்.
25 செல்வமுடையவனாய் இருந்தாலும் சரி, உயர் குடிப் பிறந்தவனாய் இருந்தாலும் சரி, எளியவனாய் இருந்தாலும் சரி -கடவுளுக்குப் பயப்படுவது எல்லாருக்கும் மகிமை.
26 எளியவனாய் இருப்பதால் ஞானியை நிந்தியாதே@ செல்வனாய் இருப்பதனால் பாவியைப் புகழாதே.
27 பெரியவனும் நீதிபதியும் வல்லமையுள்ளவனும் மரியாதை அடைகிறார்கள். ஆனால், கடவுளுக்குப் பயந்து நடப்பவனை விடப் பெரியவன் எவனும் இல்லை.
28 உரிமையுள்ளவர்கள் தங்கள் அறிவாளியான அடிமையின் கருத்துக்கு இணங்குவார்கள். விவேகமும் நல்லொழுக்கமும் உள்ள மனிதன் கண்டிக்கப்பட்டால் முறையிடான். விவேகமில்லாதவனோ அவமதிக்கப்படுவான்.
29 உன் வேலையை நன்றாய்ச் செய்ததால் உன்னை நீயே உயர்த்திக் கொள்ளாதே. இக்கட்டு நேரத்தில் சோம்பலாய் இராதே.
30 மகிமையுடன் இருந்தும் உண்ண ஒன்றுமில்லாதிருப்பவனை விட, உழைத்து மிகுதியாய்ச் சம்பாதிப்பவன் சிறந்தவன்.
31 மகனே, உன் ஆன்மாவைச் சாந்தத்தில் நிலைநிறுத்து@ அதைத் தக்கபடி மதித்து நட.
32 தன் ஆன்மாவைக் கெடுக்கும் குற்றவாளி நீதிமானாக மதிக்கப்படுவானோ? (இல்லை) தன் ஆன்மாவைக் கறைப்படுத்தினவன் மகிமைப் படுத்தப்படுவானோ? (கண்டிப்பாய் இல்லை)
33 எளியவன் தன் நன்னெறியாலும் பயத்தினாலும் மகிமை அடைகிறான். மற்றும் சிலர் தங்கள் செல்வத்தின் பொருட்டு (வீணில்) மகிமை அடைகிறார்கள்.
34 வறுமையிலேயே மகிமை அடைகிறவன் செல்வமுடையவனானால் எவ்வளவோ மகிமை அடைவான்! ஆனால், செல்வத்தால் பெருமை பாராட்டுகிறவன் வறுமைக்குப் பயப்படுவான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, அகந்தை, மகிமை, ஏற்பாடு, ஆண்டவர், பழைய, இருக்கின்றது, பயந்து, சீராக், அழித்தார், கடவுளுக்குப், அவர், இருந்தாலும், அவன், இல்லை, ஆகமம், அவர்களை, ஆன்மாவைக், தங்கள், கொண்டவர்களுடைய, எளியவனாய், அடைகிறார்கள், செய்தார், கொண்ட, நினைவு, எப்படியோ, அப்படியே, மக்களுடைய, நீதிபதி, திருவிவிலியம், ஆன்மிகம், அரசன், கையில், விடுகிறான், அதைத், கடவுள், மனிதனுடைய, வேண்டிய, போது, மனிதன்