சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 45
2 கடவுள் புனிதருடைய சபையில் அவரை நிறுத்தினார்@ பகைவருடைய அச்சத்தில் அவரை மகிமைப்படுத்தினார்@ தம் வார்த்தைகளால் கொடுமையான காரியங்களை அடக்கினார்.
3 அரசர் முன்பாக அவரை மகிமைப்படுத்தினார்@ தம் மக்களுக்கு முன்பாக அவருக்குக் கற்பித்தார்@ அவருக்குத் தமது மகிமையைக் காண்பித்தார்.
4 விசுவாசத்திலும் சாந்தத்திலும் அவரைப் புனிதராக்கினார்@ மனிதர் அனைவரிடமிருந்தும் அவரைத் தேர்ந்துகொண்டார்@
5 அவருக்குச் செவி கொடுத்தார்@ அவர் வேண்டுதலைக் கேட்டார்@ அவரை மேகத்திற்குள் கூட்டிப்போனார்@
6 நேருக்கு நேராக அவருக்குக் கட்டளைகளைக் கொடுத்தார்@ வாழ்க்கையினுடையவும் நடத்தையினுடையவும் சட்டத்தையும் தந்து, தம் உடன்படிக்கையை யாக்கோபுக்கும், தம் தீர்மானங்களை இஸ்ராயேலுக்கும் போதிக்கும்படி (நியமித்தார்)
7 அவருடைய சகோதரரான ஆரோனையும் உயர்த்தி, லேவி கோத்திரத்தில் அவருக்குச் சரியொத்தவர் ஆக்கினார்@
8 நித்திய உடன்படிக்கையை அவருக்கு நியமித்தார்@ மக்களின் குருத்துவத்தை அவருக்குக் கொடுத்தார்@ மகிமையில் அவரைப் பேறுபெற்றவராக ஆக்கினார்@
9 மகிமையின் கச்சையால் அவரைக் கட்டினார்@ மகிமையின் ஆடையால் அவரை உடுத்தினார்@ புண்ணிய அணிகலன்களால் அவருக்கு முடி சூட்டினார்@
10 பாதம் வரையிலும் தொங்கும் திருவுடையும் போர்வையும் அவருக்குக் கொடுத்தார்@ அவருடைய இடுப்பைச் சுற்றிலும் பொன்மணிகளைக் கட்டினார்@
11 அவர் நடந்து போகையில் சத்தம் செய்யவும், கடவுளின் ஆலயத்தில் சத்தம் கேட்கும்படி செய்யவும், அவருடைய கோத்திரத்தின் மக்களுக்கு நினைவாகவும் அவற்றைக் கட்டினார்@
12 யோசனையும் உண்மையுமுள்ள ஞானியான மனிதனால் பொன்னாலும் பதுமராகத்தாலும், கருஞ்சிவப்பு நூலாலும் நெய்த அர்ச்சிக்கப்பட்ட மேலாடையைக் கொடுத்தார்.
13 இந்த ஆடை இஸ்ராயேல் கோத்திரங்களின் எண்ணிக்கையினுடைய நினைவாக மிக வியப்பான முறையில் செய்யப்பட்டு, பொன் கட்டுகளில் விலையுயர்ந்த இரத்தினங்கள் சேர்க்கப்பட்டு, கல் இழைக்கிறவனால் சித்திரிக்கப்பட்டிருந்தது.
14 புனிதத்துவத்தின் அடையாளமாகவும், உத்தியோகத்தின் மகிமையாகவும் அவருடைய தலையின் மேல் பொன் முடி இருந்தது. அது மிகப் பளுவானதாகவும் கண்ணைக் கவர்வதாகவும் இருந்தது.
15 அதற்கு முன் உலகத் தொடக்க முதல் அவ்வளவு அழகானது யாதொன்றும் இருந்ததில்லை.
16 அதை அன்னியன் ஒருவனும் அணிந்ததில்லை. ஆனால், அவர் மக்களும் பேரப்பிள்ளைகளும் மட்டுமே எக்காலத்திலும் அதை அணிந்திருந்தார்கள்.
17 அவருடைய பலிகள் நாள்தோறும் நெருப்பினால் பொசுக்கப்பட்டன.
18 மோயீசன் அவருடைய கைகளை அர்ச்சித்துப் புனித தைலத்தால் அவரைப் பூசினார்.
19 குருத்துவப் பணியை நிறைவேற்றவும் புகழ் பெறவும், அவர் பெயரால் தம் மக்களை மகிமைப்படுத்தவும், அவருடனும் அவர் சந்ததியுடனும் வானத்தின் நாட்களைப் போல நித்திய உடன்படிக்கை செய்யப்பட்டது.
20 கடவுளுக்குப் பலியும் தூபமும் நல்ல நறுமணமும் ஒப்புக் கொடுக்கவும், தம்முடைய மக்களைச் சமாதானப்படுத்த நினைத்துக் கொள்ளவும் எல்லா மனிதரிலும் அவரைத் தேர்ந்து கொண்டார்@
21 தம் கட்டளைகளிலும் தீர்மானங்களின் உடன்படிக்கைகளிலும் அதிகாரத்தையும், யாக்கோபுக்குத் தம் சட்டங்களைப் போதித்தலும் இஸ்ராயேலுக்குத் தம் கட்டளைகளை விளக்கம் செய்தலுமாகிய அலுவல்களையும் கொடுத்தார்.
22 ஏனென்றால், அன்னியர் அவருக்கு விரோதமாய் நின்றார்கள். பொறாமையால் பாலைவனத்தில் மனிதர் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். அம்மனிதர் தாத்தான், அபிரோன் என்பவர்களோடு இருந்தார்கள்@ கோபத்தினால் கோரே என்பவனோடு சேர்ந்திருந்தார்கள்@
23 அதைப் பார்த்த ஆண்டவராகிய கடவுள் அதை விரும்பவில்லை. கோப உக்கிரத்தில் அவர்களை அழித்தார்.
24 புதிய தண்டனைகளை உண்டாக்கி, நெருப்புச் சுவாலையில் அவர்களை அழித்தொழித்தார்.
25 அவர் ஆரோனுக்கு மகிமையை அதிகப்படுத்தினார்@ அவருக்கு உரிமையைக் கொடுத்து, நிலத்தின் கனிகளின் முதற் பலன்களை அவருக்குப் பகிர்ந்து கொடுத்தார்@
26 முதற் பலன்களைக் கொண்டு அவர்களுக்கு வேண்டுமான உணவு அளித்தார். ஏனென்றால், அவருக்கும் அவர் சந்ததிக்கும் ஆண்டவரால் கொடுக்கப்பட்டிருந்த பலிகளையே அவர்கள் உண்பார்கள்.
27 ஆனால், மண்ணுலகின் மற்ற இனத்தார் அவருடைய உரிமை ஆகார். மற்ற இனத்தாரிடத்தில் அவருக்குப் பங்கு இல்லை. அவரே அவருடைய பங்கும் உரிமையுமாய் இருக்கிறார்.
28 எலேயாசார் மகன் பினேயஸ் என்பவர் தெய்வ பயத்தில் ஆரோனைக் கண்டொழுகினமையால், மகிமையில் மூன்றாவதாக உயர்ந்திருக்கிறார்.
29 அவர் மக்களின் மரியாதையில் நின்றார்@ இஸ்ராயேலுக்காக அவர் காண்பித்த ஆன்மீக நற்குணத்தாலும் சுறுசுறுப்பாலும் கடவுளுக்கு விருப்பமானார்.
30 ஆதலால் கடவுள் அவருடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார்@ குருத்துவத்தின் பெருமை அவருக்கும் அவர் சந்ததியாருக்கும் எப்போதும் இருக்கும்படி, குருக்களுடையவும் மக்களுடையவும் தலைவராக அவரை நிறுவினார்.
31 யூதா கோத்திரத்தில் யெஸ்ஸே மகனான தாவீது அரசரோடு கடவுள் உடன்படிக்கை செய்தார்@ அவருக்கும் அவர் சந்ததிக்கும் உரிமை கொடுத்தார்@ நமது இதயத்தில் ஞானத்தை வைக்கவும், நீதியாய் மக்களுக்கு நீதி வழங்கவும் அவர்களுடைய பொருள் அழியாதபடி பாதுகாக்கவும் பதவியைத் தந்து, அவருடைய மகிமையை மக்களிடத்தில் நிலை நிறுத்தினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, அவர், அவருடைய, கொடுத்தார்@, அவரை, ஏற்பாடு, கடவுள், அவருக்குக், அவருக்கு, பழைய, சீராக், அவரைப், உடன்படிக்கை, கட்டினார்@, மக்களுக்கு, அவருக்கும், ஆகமம், கொடுத்தார், மற்ற, செய்யவும், சத்தம், முடி, உரிமை, பொன், சந்ததிக்கும், மகிமையை, மகிமையின், முதற், ஏனென்றால், அவருக்குப், கொண்டார்@, அவர்களை, உடன்படிக்கையை, மோயீசன், என்பவர், மகிமைப்படுத்தினார்@, ஆன்மீக, ஆன்மிகம், திருவிவிலியம், புனித, முன்பாக, மனிதர், ஆக்கினார்@, நித்திய, மக்களின், கோத்திரத்தில், தந்து, அவரைத், அவருக்குச், மகிமையில்