சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 44
2 தொடக்கத்திலிருந்து ஆண்டவர் தமது வல்லமையினால் மிகுந்த மகிமையை வெளிப்படுத்தினார்.
3 அவர்கள் தங்களுடைய நாடுகளில் அதிகாரம் செலுத்தினார்கள்@ வலியோரும் விவேகிகளுமாய் இருந்தார்கள். இறைவாக்குகளால் இறைவாக்கினர்களுடைய உயர்ந்த நிலையை அறிவித்தார்கள்.
4 தங்கள் காலத்து மக்களை நடத்தி வந்தார்கள்@ ஞானத்தின் வலிமையைக் கொண்டு மக்களுக்குப் புனித போதனைகளைப் போதித்தார்கள்.
5 தங்கள் அறிவுடைமையால் பல சங்கீதங்களை ஆராய்ந்து, மறைநூல்களின் பாட்டுகளைப் பாடினார்கள்.
6 அவர்கள் புண்ணியத்தில் செல்வர்@ அழகாகிய படிப்பைக் கொண்டவர்கள்@ தங்கள் குடும்பங்களில் சமாதானம் செய்தவர்கள்.
7 அவர்கள் எல்லாரும் தங்கள் கோத்திரத்தின் சந்ததிகளில் மகிமை பெற்றார்கள்@ தங்கள் நாட்களில் புகழ்ச்சிக்கு உகந்தவர்களாக மதிக்கப்பட்டார்கள்.
8 தங்களிடமிருந்து பிறந்தவர்கள், தங்கள் புகழ்ச்சிகளைச் சொல்லுமாறு தங்கள் பெயரை விட்டுச் சென்றார்கள்.
9 நினைவுகூரப்படாத சிலர் உண்டு. அவர்கள் இராதவர்களைப் போல் ஒழிந்தார்கள். அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் பிறவாதவர்களைப் போலப் பிறந்தார்கள்.
10 ஆனால், இரக்கத்தின் செயல்கள் குன்றாதவர்களோ இரக்கமுள்ள மனிதராய் இருக்கிறார்கள்.
11 அவர்கள் சந்ததியில் நன்மை நிலைத்திருக்கின்றது.
12 அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகள் புனித உரிமையைக் கொண்டவர்கள். உடன்படிக்கைகளிலும் அவர்களுடைய சந்ததி நிலை கொண்டது.
13 அவர்களின் பொருட்டு அவர்கள் பிள்ளைகளும் நித்திய காலத்திற்கும் நிலைத்திருப்பார்கள். அவர்கள் சந்ததியும் அவர்கள் மகிமையும் கைவிடப்படா.
14 அவர்கள் பிணங்கள் சமாதானத்தில் அடக்கம் செய்யப்பட்டன. அவர்களுடைய பெயர் தலைமுறை தலைமுறையாய் வாழ்த்தப் பெறும்.
15 குடிகள் அவர்களுடைய ஞானத்தை வெளிப்படுத்துவார்கள். சங்கத்தார் அவர்களுடைய புகழ்ச்சியைச் சொல்வார்கள்.
16 ஏனோக் கடவுளுக்கு விருப்பமானார்@ அஞ்ஞானிகளுக்குத் தவம் போதிக்க வானத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்.
17 நோவே உத்தமராகவும் நீதிமானாகவும் காணப்பட்டார்@ கோபக்காலத்தில் சமாதானம் செய்பவரானார்.
18 ஆதலால், வெள்ளப்பெருக்கு உண்டான போது சிலர்மட்டும் மீதியாக்கப்பட்டார்கள்.
19 மனிதர் வெள்ளப் பெருக்கால் அழிக்கப்படுவதில்லை என்ற யுகங்களின் உடன்படிக்கைகள் அவரிடத்தில் வைக்கப்பட்டன.
20 ஆபிரகாம் திரளான மக்களின் மூதாதையராக இருந்தார். மகிமையில் அவருக்குச் சரியொத்தவர் ஒருவரையும் கண்டதில்லை. அவர் உன்னத கடவுளின் கட்டளையைக் காப்பாற்றினார்@ அவருடைய உடன்படிக்கையில் இருந்தார்.
21 தம்முடைய உடலில் உடன்படிக்கை நிலைக்கும்படி செய்தார்@ சோதனையில் பிரமாணிக்கம் உள்ளவராய்க் காணப்பட்டார்.
22 ஆதலால், கடவுள் ஆணையிட்டு, அவருடைய கோத்திரத்தில் அவருக்கு மகிமை தந்து, பூமியின் மணலைப் போல் அவரை அதிகரிக்கச் செய்வதாகவும்,
23 விண்மீன்களைப் போல் அவர் சந்ததியை உயர்த்துவதாகவும், ஒரு கடலினின்று மற்றொரு கடல் வரைக்கும், நதியினின்று பூமியின் எல்லைகள் வரைக்கும் அவர்களுக்கு உரிமை அளிப்பதாகவும் வாக்குறுதி கொடுத்தார்.
24 ஈசாக்கிடத்திலும் அவருடைய தந்தை ஆபிரகாமை முன்னிட்டு அவ்வாறே செய்தார்.
25 எல்லா இனத்தாருடைய ஆசியையும் ஆண்டவர் அவருக்குக் கொடுத்தார்@ யாக்கோபின் தலை மீது உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார்@
26 தம்முடைய ஆசி கொண்டு அவரை ஏற்றுக் கொண்டார்@ அவருக்கு உரிமையைக் கொடுத்தார்@ பன்னிரண்டு கோத்திரங்களுக்காக அவருக்குப் பாகத்தைப் பிரித்தார்@
27 எல்லாருடைய கண்களுக்கும் விருப்பமுள்ள இரக்கமான மனிதரை அவருக்குக் காப்பாற்றினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, தங்கள், அவர்களுடைய, ஏற்பாடு, பழைய, மகிமை, போல், சீராக், புனித, ஆகமம், அவருடைய, தம்முடைய, அவர், அவருக்கு, அவரை, கொடுத்தார்@, அவருக்குக், வரைக்கும், இருந்தார், பூமியின், சமாதானம், அதிகாரம், ஆன்மிகம், திருவிவிலியம், சந்ததியில், ஆண்டவர், உரிமையைக், பிள்ளைகளும், கொண்டு, ஆதலால்