சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 43
2 கதிரவன் காலையில் தோன்றி நாளை அறிவிக்கின்றது@ உன்னத கடவுளின் அதிசய வேலையாகிய வியத்தகு கருவியாக இருக்கின்றது.
3 அது நண்பகலில் பூமியைச் சுட்டெரிக்கின்றது. அதன் வெப்பத்தின் முன்பாகச் சகித்து நிற்கக் கூடியவன் யார்? அது வெப்பத்தின் தன்மையில் சூளையைப் போல் இருக்கின்றது.
4 கதிரவன் மூவிதமாய் மலைகளை எரித்து, நெருப்புக் கதிர்களை வீசி, தன் கதிர்களால் கண்களைக் கூசச் செய்கின்றது.
5 அதைப் படைத்த கடவுள் மகத்தானவர். அவர் கட்டளையால் அது பிரயாணத்தைத் தீவிரித்தது.
6 வெண்ணிலாவும் எல்லாக் காரியங்களிலும் சமயத்திற்குத் தகுந்த வண்ணம் காலத்தைக் காண்பித்து, ஆண்டின் குறிப்புகளைக் காட்டுகின்றது.
7 அதனைக் கொண்டு தான் திருநாட்கள் குறிக்கப்படுகின்றன. அது முடிவில் குறைந்து போகும் விண்மீன்.
8 அதன் பெயரைக் கொண்டு தான் மாதம் ஏற்படுகிறது. அது வரவர அதிசயமான விதமாய் வளர்கின்றது@
9 வான மண்டலங்களில் படைக்கூடாரம் போலத் தோன்றி, வெகு மகிமையாய் வானத்தில் ஒளிர்கின்றது.
10 வானத்தின் அழகு விண்மீன்களுடைய மகிமை. ஆண்டவர் வானத்தினின்று மண்ணுலகை ஒளிர்விக்கிறார்.
11 அவை புனிதரின் கட்டளைகளை நிறைவேற்ற நிற்கின்றன@ தங்கள் எச்சரிக்கையில் குன்றிப்போவதில்லை.
12 வானவில்லைப் பார். அதை உண்டாக்கினவரை வாழ்த்து. அது தன் மாட்சிமையில் வெகு அழகுள்ளதாய் இருக்கின்றது.
13 தன் மகிமையின் சுற்றால் வானத்தைச் சுற்றினது. மேலான கடவுளுடைய கைகள் அதைத் திறந்தன.
14 அவர் தமது கட்டளையால் பனியைத் தீவிரித்து உண்டாக்கினார்@ தமது தீர்மானத்தை நிறைவேற்ற மின்னல்களைத் துரிதப்படுத்தினார்.
15 ஆதலால், கருவூலங்கள் திறக்கப்பட்டன. பறவைகளைப் போல மேகங்கள் பறந்தன.
16 அவர் தமது வல்லமையால் மேகங்களைச் சேர்த்தார்@ மலையின் கற்களை உடைத்தார்.
17 அவர் பார்வைக்கு முன்பாக மலைகள் அதிர்ந்தன. அவருடைய திருவுளத்தால் தென்றல் வீசும்@
18 இடியின் ஓசை பூமியை அதிரச் செய்யும்@ வாடைப் பெருங்காற்று அடிக்கும்@ நான்கு பக்கத்துக் காற்றும் உண்டாகும். உட்கார இறங்கும் பறவையைப் போலவும்,
19 தாழ இறங்கி வரும் வெட்டுக்கிளியைப் போலவும் அவர் உறைபனியைத் தெளிக்கிறார்.
20 அதன் வெண்மையின் அழகைக் கண்டு கண் வியப்படையும்@ அதன் மிகுதியைக் கண்டு இதயம் திகைக்கும்.
21 அவர் உறைந்த பனியை உப்பைப் போல மண்ணுலகின் மேல் சிந்துகிறார். அது உறைந்த போது கூர்மையுள்ள கற்களைப் போல் ஆகின்றது.
22 வாடை குளிர்ந்த காற்றாய் அடித்தது. தண்ணீர் மேலே பளிங்கு போல் உறைந்தது. அது நீரின் மேல் மிதக்கின்றது@ நீரின் மேல் கேடயத்தைப் போல் ஆகின்றது.
23 (கதிரவன்) நெருப்பைப் போல மலைகளை விழுங்கும்@ பாலைவனத்தைச் சுட்டெரிக்கும்@ பசுமையை ஒழித்து விடும்.
24 இவைகள் எல்லாம் ஏற்படாதிருக்க மேகங்கள் தீவிரித்து வர வேண்டும். வெப்பத்தைத் தணிக்கும் பனியும் எதிர்த்து வர வேண்டும்.
25 அவர் கட்டளையால் காற்று அமர்ந்தது. அவர் தமது எண்ணத்தால் பாதாளத்தை அமர்த்தினார். ஆண்டவர் அதில் தீவுகளை ஏற்படுத்தினார்.
26 கடல் பயணம் செய்கிறவர்கள் அதன் ஆபத்துக்களைச் சொல்லக் கடவார்கள். நாம் நம்முடைய காதுகளால் கேட்டு வியப்படைவோம்.
27 அவ்விடத்தில் உள்ள மகத்தானவையும் ஆச்சரியத்திற்குரியவையுமான பொருட்களாவன: மிருகங்களின் பல இனங்களும், எல்லாவித மீன்களும், பென்னம் பெரிய மிருகப் படைப்புகளும் உண்டு.
28 அவருடைய கட்டளையால் அவைகளின் முடிவு தீர்மானிக்கப்பட்டது. அவருடைய வார்த்தையால் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டது.
29 நாம் எவ்வளவு சொன்னாலும் வார்த்தைகளில் குறைவுபடும். முடிவான வார்த்தை என்னவென்றால், அவர் அனைத்திலும் இருக்கிறார்.
30 அவர் மகிமையை உயர்த்த நம்மால் ஆகுமோ? ஏனென்றால், அவர் தம் படைப்புகளுக்கெல்லாம் மேலாக எல்லா வல்லமையும் உள்ளவராய் இருக்கிறார்.
31 பயங்கரத்திற்குரிய ஆண்டவர் மிக மேன்மையுள்ளவர்@ வல்லமையில் அதிசயிக்கத் தக்கவர்.
32 உங்களால் கூடுமான மட்டும் ஆண்டவரை வாழ்த்திய போதிலும், அவர் உங்கள் வாழ்த்துகளுக்கெல்லாம் மேலானவர்@ தமது மகிமையில் ஆச்சரியப்படத் தக்கவர்.
33 ஆண்டவரை வாழ்த்தி, உங்களால் கூடுமான மட்டும் அவரை உயர்த்துங்கள். அவர் எல்லாப் புகழ்ச்சிக்கும் மேலானவர்.
34 அவரை உயர்த்தி முழுத் திடம்கொள்ளுங்கள்@ சலிக்க வேண்டாம். ஏனென்றால், நீங்கள் அவரைக் கண்டுபிடிக்கப் போவதில்லை.
35 அவரைப் பார்ப்பவன் யார்? அவரது இயல்பை எடுத்துரைப்பவன் யார்? ஆதியில் இருந்தது போல் அவரை மகிமைப்படுத்துபவன் யார்?
36 இவைகளை விடப் பெரிதான இன்னும் பல காரியங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. ஏனென்றால், அவருடைய படைப்புகளில் சிலவற்றை மட்டுமே பார்த்தோம்.
37 அனைத்தையும் ஆண்டவரே படைத்தார். நன்னெறியில் நடக்கிறவர்களுக்கு ஞானத்தைத் தந்தருளினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, அவர், தமது, போல், இருக்கின்றது, ஏற்பாடு, யார், கட்டளையால், பழைய, அவருடைய, மேல், அவரை, ஏனென்றால், சீராக், ஆண்டவர், ஆகமம், கதிரவன், நாம், இருக்கிறார், வேண்டும், நீரின், ஆகின்றது, திருவிவிலியம், தக்கவர், மட்டும், கூடுமான, உங்களால், ஆன்மிகம், ஆண்டவரை, கண்டு, தான், வெகு, கொண்டு, தோன்றி, வெப்பத்தின், நிறைவேற்ற, வானத்தின், போலவும், மலைகளை, மகிமையின், மேகங்கள், தீவிரித்து, உறைந்த