சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 42
2 முகத் துதியினால் தவற்றில் விழாதே. உன்னத கடவுளுடைய கட்டளையைப் பற்றியும் உடன்படிக்கையைப் பற்றியும் வெட்கப்படாதே. அக்கிரமியை நீதிமானாக்கும் தீர்மானத்திற்கு இடம் கொடாதே.
3 தோழர்களோடும் வழிப்போக்கரோடும் உரையாடுவதிலும், நண்பருக்குச் சேரவேண்டிய உரிமைகளிலும்,
4 தராசினுடையவும் நிறையினுடையவும் சமனைப் பற்றியும், அதிக, சொற்பச் சம்பாத்தியத்தைப் பற்றியும்,
5 கொள்வதிலும் கொடுப்பதிலும் நடக்கும் மோசடியைப் பற்றியும், மக்களைக் கண்டிப்பாய் நடத்துவதிலும், கெட்ட ஊழியனை இரத்தம் வர அடிப்பதிலும் நீதியாய் நடந்து கொள்வதற்கு அஞ்சாதே.
6 கெட்ட பெண்ணை அடைத்து வைத்திருப்பது நலம்.
7 எவ்விடம் பல கைகளுண்டோ அவ்விடம் பூட்டி வை. கொடுப்பதெல்லாவற்றையும் கணக்கிட்டு நிறுத்துக் கொடு. கொடுத்தது வாங்கினவற்றையெல்லாம் குறித்து வை.
8 மூடனுடையவும் பேதையினுடையவும் நெறியைப் பற்றியும், இளைஞரால் தீர்ப்பிடப்படுகிற முதியவரைப் பற்றியும் கவனி. எல்லாவற்றிலும் அறிவுடையவனாய் நடந்து கொள்வாய். அப்பொழுது எல்லாருக்கும் முன்பாக ஏற்றுக் கொள்ளப்படுவாய்.
9 மகள் தந்தையின் தனிக் கவலையாய் இருக்கிறாள். அவளைப் பற்றிய கவலை அவன் தூக்கத்தை நீக்கி விடுகின்றது. ஏனென்றால், இளம் பருவத்திலேயே அவளுக்குக் கன்னிப் பருவம் வந்து விடக் கூடும்@ அவள் ஆடவனோடு இருப்பதில் சிலவேளை வெறுக்கப்படுவாள்.
10 அவள் தன் கன்னிமையில் அசுத்தப்படாதபடிக்கும், தன் தந்தையின் வீட்டிலேயே கருவுற்றவளாய்க் காணப்படாதபடிக்கும், கணவனோடு வாழ்கையில் கட்டளையை மீறாதபடிக்கும், அல்லது மலடியாகவே ஆகாதபடிக்கும் கவனமாய் இரு.
11 காம வெறியுள்ள மகளின் மேல் கண்ணும் கருத்துமாய் இரு. உன் பகைவர் முன் உனக்கு நிந்தை வரும்படியாகவும், ஊரில் புறணியும் மக்களிடையே வெறுப்பும் வரும்படியாகவும் அவள் செய்யாதிருக்கக்கடவாள்@ மக்கட் கூட்டத்திற்கு முன்பாக உனக்கு வெட்கம் வருவியாதிருக்கக்கடவாள்.
12 எவரிடத்திலும் அழகைப் பாராதே. பெண்கள் நடுவில் தாமதித்து நில்லாதே.
13 ஆடையினின்று பூச்சி புறப்படுகின்றது. பெண்ணிடமிருந்து ஆண் பிள்ளையின் தீச்செயல் உண்டாகின்றது.
14 உனக்கு நன்மை செய்யும் பெண்ணை விடவும், உன்னை நிந்தைக்கு உள்ளாக்கி வெட்கப்படுத்தும் பெண்ணை விடவும் ஆண் மகனின் கெட்ட குணம் தாவிளை.
15 ஆதலால், ஆண்டவருடைய செயல்களை நினைத்துக் கொள். நான் பார்த்தவைகளை அறிவிப்பேன். ஆண்டவருடைய வார்த்தைப்படியே அவர் உண்டாக்கினவை செய்கின்றன.
16 கதிரவன் அனைத்தையும் ஒளிர்வித்துப் பார்த்தது. ஆண்டவருடைய செயல் அவர் மகிமையால் நிறைந்திருக்கின்றது.
17 தமது மகிமையில் நிறுத்தி நிலைப்படுத்தின தம் எல்லா அதிசயங்களையும் புண்ணியவான்கள் அறிவிக்கும்படி எல்லாம் வல்ல ஆண்டவர் செய்யவில்லையா?
18 அவர் பாதாளத்தையும் மனிதர் இதயத்தையும் பரிசோதித்தார்@ அவர்களுடைய சூழ்ச்சி நிறை எண்ணங்களை அறிந்து கொண்டார்.
19 ஏனென்றால், ஆண்டவர் எல்லாக் கலைகளையும் அறிந்தவர்@ யுகங்களின் அடையாளங்களைக் கண்டவர். அவர் கடந்தவைகளையும் வருங்காரியங்களையும் அறிவிக்கிறார்@ மறைக்கப் பட்டவைகளின் குறிப்புகளைத் தெரிவிக்கிறார்.
20 எவ்வித எண்ணமும் அவருக்குத் தெரியாமல் போவதில்லை@ எவ்வித வார்த்தையும் அவரிடத்தினின்று தன்னை மறைப்பதில்லை.
21 அவர் தமது ஞானத்தின் மகத்துவங்களை அலங்கரித்தார். அவரே யுகங்களுக்கு முன்னும் நித்திய காலத்திற்கும் இருக்கிறவர். யாதொன்றும் அவருக்குச் சேர்க்கப்படவில்லை@ குறைக்கப்படுவதில்லை.
22 மற்றவர்களுடைய அறிவுரையும் அவருக்குச் வேண்டுவதில்லை.
23 அவருடைய செயல்கள் யாவும் எவ்வளவோ விரும்பத்தக்கவை. ஆனால், அவைகளைப் பற்றி நாம் சிந்திப்பதோ ஒரு துளி அளவேயாம்.
24 இவை யாவும் வாழ்ந்திருக்கின்றன@ என்றும் நிலைத்திருக்கின்றன. தேவையான போது, எல்லாம் அவருக்குக் கீழ்ப்படிகின்றன.
25 எல்லாம் இரட்டையாயும் ஒன்றுக்கொன்று எதிரானவையாயும் இருக்கின்றன. அவர் யாதொன்றையும் குறைவாய்ச் செய்யவில்லை.
26 ஒவ்வொன்றின் நன்மையையும் அவர் நிலைப்படுத்தினார். அவருடைய மகிமையைக் கண்டு சலித்துப்போகிறவன் யார்?
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, பற்றியும், அவர், ஏற்பாடு, பழைய, சீராக், கெட்ட, அவள், ஆண்டவருடைய, எல்லாம், உனக்கு, பெண்ணை, முன்பாக, ஆகமம், தமது, திருவிவிலியம், ஆண்டவர், எவ்வித, யாவும், அவருடைய, அவருக்குச், ஆன்மிகம், விடவும், நான், நடந்து, பற்றி, தந்தையின், ஏனென்றால், வரும்படியாகவும், எல்லா, வெட்கப்படாதே