சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 41
2 எல்லாவற்றிலும் தப்பின்றித் தன் வழிகளைச் செலுத்தும் அமைதியுள்ள மனிதனுக்கும், இன்னும் உணவு உட்கொள்ள வலுவுள்ள மனிதனுக்கும் எவ்வளவோ கசப்பானது!
3 ஆனால், ஓ சாவே, வறுமையுள்ள மனிதனுக்கும், வலிமை குன்றியவனுக்கும் உன் தீர்மானம் நலமாய் இருக்கின்றது.
4 வயதால் தளர்ந்தவனுக்கும், எல்லாவற்றிலும் கவலையுள்ளவனுக்கும், நம்பிக்கையற்றவனுக்கும், பொறுமையை இழந்தவனுக்கும் நலமாய் இருக்கின்றது.
5 சாவின் தீர்மானத்திற்கு அஞ்சாதே. உனக்கு முன் இருந்தவர்களையும், உனக்குப் பிறகு வரப்போகிறவர்களையும் நினைத்துக் கொள். இந்தத் தீர்மானம் எல்லா மனிதருக்குமே ஆண்டவரால் விதிக்கப்பட்டது.
6 உன்னத கடவுளின் திருவுளத்தின் முன் உன்னால் நடக்கப்போவது என்ன? பத்து அல்லது நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் என்ன?
7 மறுவுலகத்தில் வாழ்க்கையைப் பற்றிக் குற்றம் சாட்ட முடியாது.
8 பாவிகளின் சந்ததியாரும் அக்கிரமிகளின் வீடுகளில் வாழ்கிறவர்களும் வெறுப்புக்குரிய மக்களாவர்.
9 பாவிகளுடைய மக்களின் உரிமை அழிந்து போகும். அவர்களுடைய சந்ததியில் தீராத நிந்தையே இருக்கும்.
10 தீய நெறியுடைய தந்தையைப் பற்றிப் பிள்ளைகள் முறையிடுகிறார்கள்@ ஏனென்றால், அவனால் இவர்கள் நிந்தைக்கு ஆளானார்கள்.
11 உன்னத ஆண்டவருடைய கட்டளையை விட்டு விட்ட அக்கிரமிகளான மனிதரே, உங்களுக்குக் கேடாம்.
12 நீங்கள் பிறக்கையில் சாபத்தில் பிறக்கிறீர்கள்@ நீங்கள் சாகும் போது சாபத்தை உரிமையாக்கிக் கொள்வீர்கள்.
13 மண்ணினின்று உண்டாகிறதெல்லாம் மண்ணுக்கே திரும்பும். அவ்வாறே அநீதரும் சாபத்தினின்று அழிவுக்கு உள்ளாவார்கள்.
14 மனிதருடைய துக்கம் அவர்கள் உடலில் உள்ளது. ஆனால், அக்கிரமிகளுடைய பெயர் அழிக்கப்படும்.
15 நல்ல பெயரைப் பற்றிக் கவலைப்படு. ஏனென்றால், ஆயிரம் பெரிய விலையுயர்ந்த செல்வங்களை விட அது உனக்கு அதிகம் நிலைத்திருக்கும்.
16 இன்பம் அனுபவிக்கும் வாழ்நாட்கள் கொஞ்சமானவை. நல்ல பெயரோ நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.
17 மக்களே, நன்னெறியை அமைதியுடன் காப்பாற்றுங்கள். ஏனென்றால், காணப்படா ஞானமும் புதைக்கப்பட்ட செல்வமும் பயனற்றவை.
18 தன் ஞானத்தை மறைக்கும் மனிதனை விடத் தன் மூடத்தனத்தை மறைக்கிறவன் சிறந்தவன்.
19 ஆதலால், என் வாயினின்று புறப்படுகிறவைகளைக் கேட்டு நாணம் அடையுங்கள்.
20 ஏனென்றால், எல்லாவற்றிலும் நாணத்தை ஏற்றுக்கொள்வது நன்றன்று. உண்மையாகவே எல்லாருக்குமே எல்லாம் விரும்பப்படுவன அல்ல.
21 தாய் தந்தையருக்கு முன்பாக விபசாரத்தைப் பற்றியும், வல்லவனிடத்திலும் தலைவரிடத்திலும் பொய்யைப் பற்றியும் வெட்கப்படுங்கள்.
22 பிரபு இடத்திலும் நீதிபதி இடத்திலும் குற்றத்தைப் பற்றியும், செபக்கூடத்திலும் மக்களிடத்திலும் அநீதியைப் பற்றியும்,
23 தோழனிடத்திலும் நண்பனிடத்திலும் அநியாயத்தைப் பற்றியும்,
24 நீ வாழும் இடத்திலே, திருட்டைப் பற்றியும், பொய்யாணை, பொய் உடன்படிக்கையைப் பற்றியும், சாப்பாட்டு மேசையில் சாய்வதைப் பற்றியும், கொடுக்கல் வாங்கலில் மோசடியைப் பற்றியும்,
25 வணக்கம் செய்பவர்களுக்கு மௌனத்தைப் பற்றியும், விபசாரப் பெண்ணை நோக்குவது பற்றியும், உறவினனுக்கு முகத்தைத் திருப்பிக் கொள்வதைப் பற்றியும் வெட்கப்படுங்கள்.
26 அயலானிடத்தினின்று உன் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே@ அவனுக்குச் சொந்தமானதை அபகரித்த பிறகு ஈடு செய்யாமல் இராதே.
27 அயலானுடைய மனைவியை நோக்காதே@ அவன் ஊழியக்காரியுடன் தகாத பழக்கம் வைத்துக் கொள்ளாதே@ அவள் கட்டிலின் கிட்ட நிற்காதே.
28 நண்பரிடம் நிந்தைக்குரிய வார்த்தைகளைச் சொல்ல வெட்கப்படு. நீ அவர்களுக்குக் கொடுத்ததைப் பற்றி அவர்களை நிந்தியாதே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, பற்றியும், ஏற்பாடு, பழைய, ஏனென்றால், சீராக், மனிதனுக்கும், எல்லாவற்றிலும், ஆகமம், நீங்கள், கொள்ளாதே@, நல்ல, பற்றிக், நிலைத்திருக்கும், ஆயிரம், முகத்தைத், வெட்கப்படுங்கள், திருப்பிக், இடத்திலும், பிறகு, எவ்வளவோ, தீர்மானம், சாவே, ஆன்மிகம், திருவிவிலியம், நலமாய், இருக்கின்றது, என்ன, உன்னத, முன், உனக்கு, அல்லது