சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 40
2 அவர்களுடைய எண்ணங்களும், இதயத்தின் பயங்கரமும், வருங்காரியங்களின் கவலையும், முடிவு நாளும் பாரச்சுமை போல் ஆகும்.
3 மகிமையின் அரியணையில் அமர்ந்திருப்பவன் முதல் தூசியிலும் சாம்பலிலும் தாழ்த்தப்பட்டவன் வரையில் எல்லாரும் இவ்வித ஏக்கமுள்ளவராகவே இருக்கிறார்கள்.
4 பட்டுடுத்தி முடி தரிப்பவன் முதல் முரட்டுத் துணியால் மூடப்பட்டவன் வரையில் எல்லாரும் கோபம், பொறாமை, கலகம், கலக்கம், சாவின் பயம், தீராத கோபம், சச்சரவு ஆகியவைகளுக்கு உள்ளாகிறார்கள்.
5 படுக்கையில், இளைப்பாற்றி நேரத்தில் இரவுத் தூக்கம் அவன் எண்ணத்தை மாற்றுகின்றது.
6 இளைப்பாற்றியில் சிறிதும் இளைப்பாற்றி இல்லை. தூக்கத்திலும் பகலிற் போலவே கவலை கொண்டிருக்கிறான்.
7 சண்டை நாளில் தப்பியோடினவனைப் போலத் தன் இதயப் பார்வையில் கவலை கொண்டிருக்கிறான்@ அவன் தன் மீட்புக் காலத்தில் எழுந்திருந்தான்@ பயமின்மையைப்பற்றி ஆச்சரியப்படுகிறான்.
8 இவ்வித ஏக்கம் எல்லாப் படைப்புகளிலும்- மனிதன் முதல் மிருகங்கள் வரையிலும்- உண்டு. ஆனால், பாவிகளிடத்திலோ அது ஏழு மடங்கு அதிகமாக இருக்கிறது.
9 மேலும் சாவு, இரத்தம், சண்டை, வாள், கொடுமைகள், பஞ்சம், அழிவு, கொள்ளைநோய்-
10 இவை யாவும் அக்கிரமிகளின் பொருட்டு உண்டாக்கப்பட்டன. அவர்களின் பொருட்டே வெள்ளப் பெருக்கும் உண்டானது.
11 மண்ணினின்று தோன்றின யாவும் மண்ணாக மாற்றப்படும். நீர்த்திரளெல்லாம் கடலுக்குத் திரும்பி விடும்.
12 எல்லா அநீத ஈகையும் அக்கிரமமும் அழித்தொழிக்கப்படும்@ விசுவாசமோ நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.
13 அநீதருடைய செல்வம் ஆற்றைப் போல் வற்றிப் போகும்@ மழையில் பெரிய இடியைப் போலக் காணப்படும்.
14 மனிதன் தன் கைகளைத் திறப்பதனால் மகிழ்ச்சி அடைவான். ஆனால், கட்டளைகளை மீறி நடக்கிறவர்கள் முடிவில் வேரறுக்கப்படுவார்கள்.
15 அக்கிரமிகளுடைய சந்ததியார் கிளைகளை அதிகரிக்கச் செய்யார்கள். அசுத்த வேர்கள் கற்பாறையின் உச்சியில் உலர்ந்து போகும்.
16 தண்ணீர் மேலும் ஆற்றங்கரையிலுமுள்ள எல்லாப் பசுஞ் செடிகளும் மற்றப் பயிர்ச் செடிகளுக்கு முன்பே பிடுங்கி எறியப்படும்.
17 தயாள குணம் ஆசியால் சிங்காரவனத்தைப் போல் இருக்கின்றது. இரக்கம் நித்தியத்திற்கும் நிலை நிற்கும்.
18 தனக்குப் போதுமான மட்டும் சம்பாதிக்கும் தொழிலாளியின் வாழ்க்கை இன்பமுள்ளதாய் இருக்கின்றது. அவன் அதில் செல்வத்தைக் காண்பான்.
19 ஒருவன் தன் பிள்ளைகள் மூலமும், நகரத்தைக் கட்டுவதன் மூலமும் பேரெடுப்பான். மாசற்ற மனைவியோ இவைகளுக்கு மேலாக மதிக்கப்படுவாள்.
20 மதுவும் இன்னிசையும் இதயத்தை மகிழ்விக்கின்றன. ஞானத்தின் நேசமோ இவ்விரண்டுக்கும் மேலானது.
21 புல்லாங்குழல்களும் வீணையும் இனிய இசையை எழுப்புகின்றன. ஆனால், இனிய நாவு இவ்விரண்டுக்கும் மேலாக இருக்கின்றது.
22 அழகையும் எழிலையும் உன்னுடைய கண் நாடுகின்றது. இவைகளுக்கு மேலானது பசுமையான விளைச்சல்.
23 நண்பனும் தோழனும் தக்க நேரத்தில் உதவுகிறார்கள். ஆனால், இவ்விருவருக்கும் மேலாவாள் கணவனோடு இருக்கிற மனைவி.
24 துன்ப காலத்தில் சகோதரர் உதவி புரிகிறார்கள். இரக்கமோ அவர்களை விட அதிகமாய்க் காப்பாற்றும்.
25 பொன்னும் வெள்ளியும் கால்களின் உறுதி. ஆனால், இவ்விரண்டையும் விட மேலானது பயனுள்ள அறிவுரை.
26 செல்வமும் ஆற்றலும் இதயத்தை உயர்த்துகின்றன. தெய்வ பயமோ இவைகளை விட மேலானது.
27 தெய்வ பயத்தில் குறை ஒன்றும் இல்லை. அதில் உதவி தேட வேண்டியதன் தேவை இல்லை.
28 தெய்வ பயம் ஆசி நிறைந்த சிங்காரவனத்தைப் போல் இருக்கின்றது. எல்லா மகிமையையும் விடப் பெரிய மகிமையால் அவனை மூடினது.
29 மகனே, உன் வாழ்நாளில் பிச்சை எடுக்காதே. ஏனென்றால், பிச்சை எடுப்பதை விடச் சாவது நல்லது.
30 பிறரின் உணவை நாடுகின்றவனுடைய வாழ்க்கை வாழ்க்கையன்று. ஏனென்றால், அவன் பிறனுடைய உணவுப் பொருட்களால் தன் ஆன்மாவைப் பேணுகிறான்.
31 நன்னெறியும் கல்வியுமுள்ள மனிதன் தன்னைத் தானே காத்துக் கொள்கிறான்.
32 அவிவேகியின் வாயில் பிச்சையெடுத்தல் போற்றப்படும். அவனுடைய வயிற்றில் நெருப்பு பற்றி எரியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, போல், அவன், இருக்கின்றது, பழைய, மேலானது, இல்லை, சீராக், தெய்வ, ஆகமம், எல்லா, மனிதன், அதில், பெரிய, வாழ்க்கை, சிங்காரவனத்தைப், இவ்விரண்டுக்கும், உதவி, பிச்சை, ஏனென்றால், இனிய, நித்தியத்திற்கும், இவைகளுக்கு, மேலாக, இதயத்தை, மூலமும், சண்டை, பாரச்சுமை, வரையில், எல்லாரும், வரையிலும், நாள், திருவிவிலியம், ஆன்மிகம், இவ்வித, கோபம், காலத்தில், எல்லாப், மேலும், கவலை, நேரத்தில், பயம், இளைப்பாற்றி, யாவும்