சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 39
2 பேர்போன மனிதருடைய உரைகளைக் காப்பாற்றுவான்@ உவமைகளை நுட்பமாகப் பரிசோதிப்பான்.
3 பழமொழிகளின் இரகசியங்களை ஆராய்வான்@ உவமைகளின் மறை பொருட்களின் பயிற்சி செய்வான்.
4 பெரியோர் நடுவே வேலையில் அமர்வான்@ அதிகாரிகள் முன்னிலையில் தோன்றுவான்.
5 புற இனத்தாருடைய நாட்டில் பயணம் செய்வான்@ மனிதரிடத்தில் நன்மையும் தீமையும் சோதித்துப் பார்ப்பான்.
6 தன்னைப் படைத்த கடவுள்பால் விழித்திருப்பதற்குத் தன் இதயத்தைக் கையளிப்பான்@ உன்னத ஆண்டவருடைய முன்னிலையில் மன்றாடுவான்.
7 செபத்தில் தன் வாயைத் திறப்பான்@ தன் குற்றங்களுக்காக மன்றாடுவான்.
8 ஏனென்றால், மகத்தான ஆண்டவர் மனம் வைப்பாராயின், அறிவுடைமையால் அவனை நிரப்புவார்.
9 தமது ஞானத்தின் போதகங்களை மழையைப் போல வரவிடுவார். அவனும் தன் செபத்தில் ஆண்டவரைப் போற்றுவான்.
10 அவர் அவனுடைய எண்ணத்தையும் நெறியையும் நடத்துவார். அவன் மறை பொருட்களை சிந்தித்துப் பார்ப்பான்.
11 அவர் தமது போதகத்தின் நெறியை வெளிப்படுத்துவார். அவன் ஆண்டவர் உடன்படிக்கையின் கட்டளையில் மகிமை கொள்வான்.
12 பலர் அவனுடைய ஞானத்தைப் புகழ்வார்கள். அவன் எக்காலத்திற்கும் அழிவடைய மாட்டான்.
13 அவன் நினைவு போய்விடாது. தலைமுறை தலைமுறைக்கும் அவன் பெயர் கொண்டாடப்படும்.
14 அவன் ஞானத்தைக் குடிகளும் சொல்லிக் காட்டுவார்கள்@ சபையும் அவன் புகழ்ச்சியைக் கொண்டாடும்.
15 அவன் நெடுங்காலம் வாழ்ந்தால் ஆயிரம் பேரைவிடப் புகழ் அடைவான்@ இறந்தாலும் அவனுக்கு மகிமை உண்டு.
16 இன்னும் பேசுவதற்கு நான் ஆர்வம் நிறைந்தவனாய் இருக்கிறபடியால் சிந்தித்துப் பார்ப்பேன்.
17 எனக்குக் கேட்கப்படும் குரலாவது: கடவுளின் கனிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள். தண்ணீர்க் கரைகளில் நடப்பட்ட ரோசாவைப் போலக் கனிகளைக் கொடுங்கள்.
18 லீபானைப் போல இனிய மணத்தைக் கொடுங்கள்.
19 லீலியைப் போல மலர்களைக் கொடுங்கள்@ மணத்தைக் கொடுங்கள்@ அழகை அணிந்து கொள்ளுங்கள்@ இன்னிசை பாடுங்கள்@ ஆண்டவரை அவருடைய செயல்களில் போற்றுங்கள்.
20 அவருடைய பெயருக்கு மகிமை கொடுங்கள்@ உங்கள் உதடுகளின் ஓசையால் அவருக்குத் துதி பாடுங்கள். உதடுகளின் இன்னிசைகளிலும் வீணைகளிலும் போற்றிப் புகழுங்கள்.
21 ஆண்டவரின் எல்லாச் செயல்களும் மிகச் சிறந்தவை.
22 அவர் வார்த்தையால் தண்ணீர் மேடை போல் நின்றது@ அவரது கட்டளையால் நீர்த்திரள் குளங்களைப் போல் ஆயிற்று.
23 ஏனென்றால், அவர் ஆணையால் அனைத்தும் நலம் பெறுகின்றன@ அவருடைய செயலில் குறை எதுவும் இல்லை.
24 எல்லா மனிதருடைய செயல்களும் அவருக்கு முன்பாக இருக்கின்றன. அவருடைய கண்களுக்கு மறைவானது யாதொன்றும் இல்லை.
25 காலா காலமும் அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருடைய முன்னிலையில் அற்புதமானது ஒன்றும் இல்லை.
26 இதென்ன, அதென்ன என்று சொல்லத்தகாது. ஏனென்றால், அனைத்தும் தத்தம் காலத்தில் தேடப்படும்.
27 அவருடைய ஆசி ஆறு போலப் பெருகும்.
28 வெள்ளப் பெருக்கு எப்படிப் பூமியைக் கவர்ந்து கொண்டதோ, அப்படியே அவரைத் தேடாத மக்களை அவருடைய கோபமும் கைப்பற்றிக் கொள்ளும்.
29 நீர்த்திரளை மாற்றி, பூமியை உலர்த்தி, தம் மக்களுக்குப் பாதையாக ஏற்படுத்தினார். அதுவே பாவிகளுக்கு அவரது கோபத்தின் தண்டனைகளாகவும் அமைந்தது.
30 ஏனென்றால், நல்லவர்களுக்கு நன்மையான காரியங்கள் தொடக்கத்தில் உண்டாக்கப்பட்டன. அவ்வாறே தீயோருக்கு நன்மையும் தீமையும் உண்டாக்கப்பட்டன.
31 மனிதருடைய வாழ்க்கைக்கு இன்றியமையாதவைகளாவன: தண்ணீர், நெருப்பு, இரும்பு, உப்பு, பால், கோதுமை, உரொட்டி, தேன், கொடிமுந்திரிக்குலை,
32 எண்ணெய், உடை- இவையெல்லாம் புண்ணியவான்களுக்கு நன்மையாக இருப்பது போல, அக்கிரமிகளுக்கும் பாவிகளுக்கும் தீமையாக மாற்றப்படுகின்றன.
33 பழிக்காக உண்டாக்கப்பட்ட படைப்புகளும் உண்டு. அவை தங்கள் அக்கிரமத்தில் தங்கள் வாதைகளை நிலைப்படுத்தின.
34 முடிவு காலத்தில் அகோரத்தைப் பொழிந்து, தங்களை உண்டாக்கினவருடைய கோபத்தை அவை நிறைவு செய்யும்.
35 நெருப்பு, கல்மழை, பஞ்சம், சாவு- இவையெல்லாம் பழிக்காக உண்டாக்கப்பட்டன.
36 மிருகங்களுடைய பற்களும் தேள்களும் பாம்புகளும் அக்கிரமிகளை வேரறுக்கப் பழிவாங்கும் வாளைப் போல் இருக்கின்றன.
37 அவருடைய கட்டளைகளில் உண்டு இன்புற்றிருக்கின்றன@ தேவையிருப்பின் பூமியில் தயாராக்கப்படுகின்றன. காலம் வரும் போது அவை கட்டளையை மீறா.
38 ஆதலால், தொடக்கத்திலேயே நான் உறுதிப்படுத்தப்பட்டேன்@ ஆலோசித்தேன்@ நினைத்தேன்@ எழுதி வைத்தேன்.
39 ஆண்டவருடைய செயல்களெல்லாம் சிறந்தவை. அவர் அததன் காலத்தில் ஒவ்வொன்றையும் கொடுத்தருள்கிறார்.
40 இது அதை விடக் கெடுதியானது என்று சொல்லலாகாது. ஏனென்றால், காலம் வரும் போது அனைத்தும் வெளிப்படுத்தப்படும்.
41 இப்போதோ முழு இதயத்தோடும் வாக்கினாலும் ஆண்டவருடைய பெயரைப் போற்றித் துதியுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, அவருடைய, அவன், அவர், ஏனென்றால், ஏற்பாடு, பழைய, மகிமை, நான், சீராக், போல், உண்டாக்கப்பட்டன, காலத்தில், இல்லை, அனைத்தும், கொடுங்கள்@, உண்டு, ஆண்டவருடைய, ஆகமம், மனிதருடைய, முன்னிலையில், திருவிவிலியம், ஆன்மிகம், அவரது, இருக்கின்றன, இவையெல்லாம், வரும், போது, காலம், தங்கள், பழிக்காக, நெருப்பு, சிறந்தவை, மன்றாடுவான், பார்ப்பான், சிந்தித்துப், செபத்தில், ஆண்டவர், அவனுடைய, கொடுங்கள், மணத்தைக், செயல்களும், தமது, உதடுகளின், நன்மையும், தீமையும், தண்ணீர்