சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 38
2 கடவுளிடமிருந்து எல்லா மருந்தும் உண்டாகின்றன. மருத்துவன் அரசனிடமிருந்து வெகுமதி பெறுவான்.
3 மருத்துவனுடைய கலை அவன் தலையை உயர்த்துகின்றது. அவன் பெரியோர் முன்பாகக் கொண்டாடப்படுவான்.
4 பூமியினின்று கடவுள் மருந்து வகைகளைப் படைத்தார். விவேகமுள்ள மனிதன் அவைகளை வெறுக்கமாட்டான்.
5 கசப்பான தண்ணீர் மரத்துண்டால் இனிமையாக்கப் பட்டதில்லையா?
6 அவைகளுடைய குணம் மனிதனுடைய அறிவுக்கு வெளிப்பட்டது. தம் அற்புதச் செயல்களில் மகிமைப் படுத்தப்படும்படி கடவுள் அவைகளின் கலையை மனிதருக்குக் கொடுத்தார்.
7 அவைகளைக் கொண்டு மருத்துவம் செய்கிறவன் வேதனையைத் தணிப்பான். மருந்து கூட்டுகிறவன் இன்பமான மருந்தைச் செய்வான்@ நலம் தரும் தைலங்களைக் கூட்டுவான்@ அவனுடைய வேலைகள் முடிவு பெறா.
8 ஏனென்றால், பூமியின் முகத்தே கடவுளின் தயவு இருக்கின்றது.
9 மகனே, உன் நோயில் உன்னைத் தானே அசட்டை செய்யாதே. ஆனால், ஆண்டவரை மன்றாடு@ அவரும் உன்னைக் குணமாக்குவார்.
10 பாவத்தை அகற்று@ கைகளை மாசுபடுத்தாதே@ உன் இதயத்தை எல்லாக் குற்றத்தினின்றும் தூய்மைப்படுத்து.
11 மாவினுடைய இனிப்பையும் நினைவையும் ஒப்புக்கொடு@ உன் காணிக்கையை அதிகரி@ மருத்துவனுக்கும் இடம் கொடு.
12 ஏனென்றால், ஆண்டவர் அவனைப் படைத்தார். அவனுடைய வேலைகள் தேவையாய் இருக்கிறபடியால், உன்னை விட்டு அவன் போகாதிருக்கட்டும்.
13 ஏனென்றால், மருத்துவர்களுடைய கைகளில் விழ வேண்டிய காலம் உண்டு.
14 இவர்களும் அவர்கள் வாழ்நாளைக் கழிக்க வேண்டி, ஓய்வும் நலமும் அவர்களுக்குத் தந்தருள ஆண்டவரை மன்றாடுவார்கள்.
15 தன்னைப் படைத்தவர் முன்னிலையில் குற்றம் கட்டிக் கொள்கிறவன் மருத்துவனுடைய கையில் விழுவான்.
16 மகனே, இறந்தவனுக்காகக் கண்ணீர் விடு@ கொடுமைகளை அனுபவித்தவன் போல் அழத்தொடங்கு@ வழக்கப்படி அவனுடைய பிணத்தை மூடி, அவனுடைய அடக்கத்தை அசட்டை செய்யாதே.
17 ஆனால், புறணியைத் தவிர்க்க ஒருநாள் முழுவதும் கடுந் துக்கம் கொண்டாடு. துன்பத்தைப்பற்றி ஆறுதல் அடை.
18 புறணியைத் தவிர்க்க, அவனுடைய நிலைக்குத் தக்கபடி ஒரு நாளோ இரண்டு நாளோ துக்கம் கொண்டாடு.
19 ஏனென்றால், துன்பத்தினால் சாவு தீவிரிக்கின்றது@ பலத்தை மூடுகின்றது. இதய வருத்தம் தலை குனியச் செய்கின்றது.
20 இரகசியத்தில் துன்பம் நிலைக்கும். வறியவனுடைய பொருள் அவனுடைய இதயத்திற்குத் தக்கதாய் இருக்கும்.
21 உன் இதயத்தை வருத்தத்திற்குக் கையளிக்காதே@ அதை உன்னை விட்டு அகற்றி விடு@ மேலும் முடிவுகளை நினைத்துக் கொள்.
22 மறந்துவிடாதே@ ஏனென்றால், திரும்புவதில்லை@ அவனுக்கு உன்னால் யாதொரு பயனும் இல்லை@ உனக்குத் தானே நட்டம் வருவித்துக் கொள்வாய்.
23 என் தீர்மானத்தை நினைத்துக் கொள்@ உன்னுடையதும் இவ்வண்ணம் தான் இருக்கும்: நேற்று எனக்கு@ இன்று உனக்கு.
24 இறந்தவனுடைய இளைப்பாற்றியில் அவனுடைய ஞாபகத்தை இளைப்பாற வை. அவன் உயிர் பிரிந்து போகையில் அவனுக்கு ஆறுதல் கொடு.
25 படித்தவனுடைய ஞானத்தை ஓய்வு காலத்தில் அறியலாம். செயலை மட்டுப்படுத்துகிறவன் ஞானத்தை அடைவான்@ அந்த ஞானத்தால் நிரப்பப்படுவான்.
26 ஆனால், ஏர் பிடிக்கிறவனும், கழியில் பெருமை கொள்கிறவனும், தாறு போட்டு எருதுகளை ஓட்டுகிறவனும் தன் தன் வேலைகளில் காலம் கழிக்கிறான்@ தன் மக்களிடத்திலும் எருதுகளைப் பற்றிப் பேசுகிறான்.
27 படைச்சால் ஓட்டுவதில் தன் இதயத்தைச் செலுத்துகிறான்@ பசுக்களைக் கொழுக்க வைப்பதில் அவனுக்குக் கவனம் உண்டு.
28 இப்படியே தச்சனும் சிற்பியும். அவன் இரவைப் பகலைப் போலக் கழிக்கிறான்@ சித்திர அடையாளங்களைச் சித்தரிக்கிறான். அவனுடைய கவனமான வேலை உருவத்தை மாற்றுகிறது. அவன் உருவத்தின் சாயலில் தன் இதயத்தைச் செலுத்துகிறான். அவன் கவனிப்பு வேலையை நிறைவாக்குகின்றது.
29 பட்டடை அண்டை உட்கார்ந்து இரும்பு வேலையைக் கவனிக்கும் கொல்லனும் அப்படியே. நெருப்பின் வெப்பம் அவன் தசையைச் சுடுகின்றது. உலையின் வெப்பத்தில் அவன் போராடுகிறான்.
30 சம்மட்டியின் சத்தம் அவன் காதைக் கிழிக்கிறது. கருவியின் உருவத்தின் மீது அவன் கண் இருக்கின்றது.
31 வேலைகளின் முடிவின் மீது அவன் தன் இதயத்தை வைப்பான். அவன் விழிப்பு வேலையை நிறைவாய் அலங்கரிக்கும்.
32 தன் வேலையில் உட்கார்ந்து தன் கால்களால் சக்கரத்தைச் சுற்றும் குயவனும் அப்படியே. தன் வேலையின் நிமித்தம் எப்போதும் அவன் கவலை கொள்கிறான். அவன் வேலையெல்லாம் அளவு முறையில் இருக்கின்றது.
33 தன் கையில் களிமண்ணை உருவாக்குகிறான்@ தன் கால்களால் அதனைப் பதமாக்குகிறான்.
34 பூச்சுப் பூசுதலில் தன் கவனத்தைச் செலுத்துகிறான். அவன் விழிப்பு சூளையைச் சுத்தப்படுத்துகின்றது.
35 இவர்கள் எல்லாரும் தங்கள் கைகளை நம்பினார்கள். ஒவ்வொருவனும் தன் தொழிலில் ஞானியாய் இருக்கிறான்.
36 இவர்கள் இல்லாது நகரங்கள் கட்டப்படுவதில்லை.
37 ஆனால், அவர்கள் அங்கு வாழ்வதில்லை@ உலாவுவதில்லை சங்கத்திலும் புகுவதில்லை.
38 நீதிபதியின் இருக்கையில் அவர்கள் அமர மாட்டார்கள்@ தீர்மானத்தின் தீர்ப்பை அவர்கள் கண்டுபிடிக்கமாட்டார்கள்@ போதகத்தையும் நன்னெறியையும் வெளிப்படையாய் அறிவிக்க மாட்டார்கள்@ உவமைகளிலும் அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
39 ஆனால், காலத்துக்கும் நிற்கும் பொருட்கள் அவர்களால் உறுதியடைகின்றன. அந்தத் தொழிலில் அவர்களுடைய மன்றாட்டு கேட்கப்படும். தன் ஆன்மாவை அதில் செலுத்துகிறவனும் ஆண்டவருடைய கட்டளைகளைத் தேடுகிறவனும் அப்படியே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, அவன், அவனுடைய, ஏனென்றால், ஏற்பாடு, பழைய, இதயத்தை, சீராக், படைத்தார், அப்படியே, இருக்கின்றது, கடவுள், ஆகமம், அவனுக்கு, ஞானத்தை, கழிக்கிறான்@, நினைத்துக், இருக்கும், கொண்டாடு, ஆறுதல், நாளோ, மாட்டார்கள்@, உருவத்தின், துக்கம், மீது, விழிப்பு, இவர்கள், தொழிலில், உட்கார்ந்து, கால்களால், செலுத்துகிறான், வேலையை, இதயத்தைச், காலம், வேலைகள், மகனே, தானே, அசட்டை, மருந்து, மருத்துவனுடைய, திருவிவிலியம், ஆன்மிகம், அவனைப், செய்யாதே, ஆண்டவரை, கையில், விடு@, புறணியைத், உண்டு, விட்டு, கைகளை, கொடு, உன்னை, தவிர்க்க