சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 37
2 அன்றியும், தோழனும் நண்பனும் பகைவர்களாக மாறுகிறார்கள்.
3 ஓ வீணான, வெறுக்கத்தக்க எண்ணமே! நிலத்தை உன் தீய குணத்தாலும் கபடத்தாலும் மூடுவதற்கு எவ்விடத்தினின்று நீ தோன்றினாய்?
4 தோழன் நண்பனோடு செல்வத்தில் மகிழ்கிறான். இக்கட்டுக் காலத்திலோ பகைவனாகிறான்.
5 வயிற்றைப் பற்றித் தோழன் நண்பனோடு அனுதாபம் கொள்கிறான்@ பகைவனுக்கு விரோதமாய்க் கேடயம் எடுக்கிறான்.
6 உன் மனத்தில் உன் நண்பனை மறவாதே@ உன் செல்வத்தில் அவனை நினையாதிராதே.
7 உனக்குத் தீங்கு செய்யத் தேடுகிறவனோடு ஆலோசனை செய்யாதே@ உன் மீது பொறாமையுள்ளவர்களிடத்தினின்று உன் கருத்தை மறைத்துக் கொள்.
8 அறிவுரையாளர் அனைவரும் அறிவுரை கொடுப்பார்கள்@
9 ஆனால், தனக்கே அறிவுரை கொடுத்துக் கொள்பவனிடத்தினின்று உன் ஆன்மாவைக் காத்துக் கொள்@ அவனுக்குத் தேவையானது என்னவென்று முன்பே அறிந்துகொள்@ ஏனென்றால், அவன் தன் நலத்தையே கருதுவான்.
10 சில வேளை பூமியில் முளையடித்து உனக்குச் சொல்வான்.
11 உன் வழி நல்ல வழி தான் என்று உனக்குச் சொல்லி, அதற்கு விரோதமாய் உனக்கு என்ன நேர்கிறதென்று பார்க்க நின்று கொண்டிருப்பான்.
12 மறைப்பற்று இல்லாதவனிடம் புனிதத் தன்மையைப் பற்றியும், அநீதனோடு நீதியைப் பற்றியும், பெண்ணிடம் அவள் பொறாமைப்படுகிறவளைப் பற்றியும், கோழையிடம் சண்டையைப் பற்றியும், வியாபாரியிடம் விலைகளைப் பற்றியும், கொள்கிறவனிடம் விற்பனையைப் பற்றியும், பொறாமையுள்ளவனிடம் நன்றியறிதலைப் பற்றியும்,
13 பக்தியில்லாதவனிடம் பக்தியைப் பற்றியும், அயோக்கியனிடம் யோக்கியத்தைப் பற்றியும், குடியானவனிடம் அவன் வேலைகளைப் பற்றியும்,
14 ஆண்டு வேலைக்காரனிடம் ஆண்டு முடிவைப் பற்றியும், சோம்பேறியான ஊழியனிடம் ஓயாத வேலையைப் பற்றியும் பேசு. எல்லா அறிவுரைகளையும் பின்பற்றத் தேவையில்லை.
15 ஆனால், தெய்வ பயத்தைக் கைக்கொண்டு நடக்கிறானென்று உனக்குத் தெரிந்திருக்கிற புண்ணியவானையும்,
16 உன் ஆன்மாவிற்குத் தகுந்த ஆன்மா உள்ளவனையும், நீ இருளில் தடுமாறும் போது உன்னுடன் அனுதாபப் படுகிறவனையும் அடிக்கடி கண்டுகொள்.
17 நல்லெண்ணமுடைய இதயத்தை உன்னிடத்தில் நிலைப்படுத்து@ ஏனென்றால், அதை விட வேறு யாதொன்றும் உனக்கு மிக்க பயனுள்ளதன்று.
18 பார்வையிடுவதற்கு உயர்ந்த இடத்தில் உட்கார்ந்திருக்கும் ஏழு கண்காணிகளை விடப் புண்ணியவானின் ஆன்மா உண்மையைத் தெளிவாய்த் தெரிவிக்கின்றது.
19 இவைகளிலெல்லாம் உன்னத கடவுள் உன் வழியை உண்மையில் நடத்தும்படி அவரை மன்றாடு.
20 எல்லாச் செயல்களுக்கும் முன் உண்மையான வார்த்தையையும் உறுதியான எண்ணத்தையும் கொண்டிரு.
21 செருக்குள்ள வார்த்தை இதயத்தை மாற்றும். வார்த்தையினின்று நான்கு காரியங்கள் புறப்படுகின்றன: நன்மையும் தீமையும், வாழ்வும் சாவும். இவைகளை எப்போதும் நடத்துவது நாவு தான். ஒருவன் திறமையுள்ளவனாய் இருந்து பலருக்குக் கற்றுக்கொடுக்கிறான்@ தன் ஆன்மாவிற்கோ பயனற்றவனாய் இருக்கிறான்.
22 தேர்ந்தவன் ஒருவன் பலரைக் கற்பித்து வைக்கிறான்@ தன் ஆன்மாவிற்கு இன்பமாய் இருக்கிறான்.
23 நியாயப் புரட்டாய்ப் பேசுகிறவன் பகைக்கு உரியவன்@ அவன் எந்தக் காரியத்திலும் கைவிடப்படுவான்.
24 ஆண்டவரிடமிருந்து அவனுக்கு வரம் அளிக்கப்படவில்லை. ஏனென்றால், ஞானம் என்பதே அவனிடம் இல்லை.
25 தன் ஆன்மாவிற்கு ஞானமுள்ளவனே உண்மையான ஞானி. அவன் அறிவின் கனி புகழத் தக்கது.
26 ஞானமுள்ளவன் தன் மக்களுக்குப் போதிக்கிறான். அவன் அறிவின் கனிகள் நிலையானவை.
27 ஞானமுள்ளவன் ஆசியால் நிரப்பப்படுவான். பார்க்கிறவர்கள் அவனைப் புகழ்வார்கள்.
28 மனிதன் வாழ்க்கை நாட்களின் எண்ணிக்கையில் அமைந்துள்ளது. இஸ்ராயேலின் நாட்களோ கணக்கில்லாதவை.
29 ஞானமுள்ளவன் குடிகளுக்குள் புகழை உரிமை கொள்வான். அவன் பெயர் நித்தியத்திற்கும் நிலைக்கும்.
30 மகனே, உன் வாழ்நாளில் உன் ஆன்மாவைப் பரிசோதித்துப் பார். தீய குணமுள்ளதாய் இருந்தால், அதற்கு அதிகாரம் கொடாதே.
31 ஏனென்றால், அனைத்தும் அனைவர்க்கும் தகுந்தவை அல்ல. எல்லா ஆன்மாக்களுக்கும் எல்லா விதமும் விருப்பப்படா.
32 எல்லா விருந்திலும் ஆவல் கொள்ளாதே. எவ்விதப் பண்டத்தையும் ஆவலாய் உண்ணாதே.
33 ஏனென்றால், பல பண்டங்களில் நோய் உண்டு. ஆவலோடு உண்பது வயிற்று நோக்காடு வருவிக்கும்.
34 உண்டிப் பிரியத்தால் பலர் மாண்டார்கள். மட்டுணவு கொள்பவனோ வாழ்நாளை அதிகரிப்பான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, பற்றியும், அவன், ஏற்பாடு, ஏனென்றால், எல்லா, பழைய, இருக்கிறான், ஆகமம், ஞானமுள்ளவன், சீராக், ஆண்டு, ஆன்மா, உண்மையான, அறிவின், ஆன்மாவிற்கு, ஒருவன், உனக்கு, இதயத்தை, உனக்குச், தோழன், நண்பனும், அதிகாரம், ஆன்மிகம், நண்பனோடு, செல்வத்தில், தான், திருவிவிலியம், அறிவுரை, உனக்குத், அதற்கு