சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 36
2 உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லையென்று அறியவும், உம் மகத்துவங்களை வெளிப்படுத்தவும் தேடாத அஞ்ஞானிகள் மீது உமது பயத்தை வரவிடும்.
3 உமது வல்லமையைக் காணும்படி புற இனத்தவர் மேல் உமது கையை நீட்டும்.
4 அவர்களுக்கு முன்பாக எங்களிடையே நீர் கொண்டாடப்பட்டது போல, எங்களுக்கு முன்பாக அவர்களிடையே நீர் மகிமைப்படுத்தப்படுவீர்.
5 உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லையென்று, ஆண்டவரே, நாங்கள் அறிந்திருப்பது போல, அவர்களும் உம்மை அறியக்கடவார்கள்.
6 நீர் புதுமைகளைப் புதுப்பியும்@ புதிய அற்புதங்களைச் செய்யும்.
7 உமது கையையும், வலக்கையையும் மகிமைப்படுத்தும்.
8 உக்கிரத்தைத் தூண்டிக் கோபத்தைப் பொழியும்.
9 விரோதியை ஒழித்துப் பகைவனைத் துன்பத்திற்குள்ளாக்கும்.
10 உம் மகத்துவங்களை அவர்கள் வெளிப்படுத்தும்படியாய், முடிவை நினைத்துக் காலத்தை தீவிரியும்.
11 தப்பினவன் கோப நெருப்பால் விழுங்கப்படக்கடவான். உம் மக்களுக்குத் தீங்கு செய்கிறவர்கள் அழிவைக் காணக்கடவார்கள்.
12 எங்களை மிஞ்சிய வேறொருவரும் இல்லை என்று சொல்லும் பகைவர்களுடைய தலைவரின் தலையை நசுக்கும்.
13 உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லையென்று அறியவும், உம் மகத்துவங்களை வெளிப்படுத்தவும் யாக்கோபின் கோத்திரத்தையெல்லாம் ஒன்றாய்ச் சேரும்@ தொடக்கத்தில் இருந்தது போல் அவர்களை உரிமையாய் ஏற்றுக் கொள்வீர்.
14 உமது பெயரால் அழைக்கப்பட்ட மக்கள் மீதும், உம்முடைய மூத்த பிள்ளைக்கு ஒத்த இஸ்ராயேல் மீதும் நீர் இரக்கமாயிரும்.
15 நீர் புனிதப்படுத்திய நகரமும், இளைப்பாறும் நகரமுமாகிய யெருசலேமின் மீது இரக்கமாயிரும்.
16 உம் அற்புத வார்த்தைகளால் சீயோனையும், உமது மகிமையால் உம் மக்களையும் நிரப்பும்.
17 உமது படைப்பின் தொடக்க முதல் இருக்கிறவைகளுக்குச் சான்று கொடும். முன்னிருந்த இறைவாக்கினர்கள் உமது பெயரால் உரைத்த இறைவாக்குகளை மெய்யாக்கும்.
18 உம் இறைவாக்கினர்கள் உண்மையுள்ளவர்களென்று நிரூபிக்க உம் ஊழியருக்குச் சம்பாவனை அளியும்@ உம் ஊழியர்களின் மன்றாட்டைக் கேட்டருளும்.
19 உம் மக்களின் மேல் ஆரோனின் ஆசிக்குத் தகுந்தாற் போல, எங்களை நீதியின் வழியில் நடத்தும். இம்மண்ணிலுள்ள யாவரும், நீரே எக்காலத்தையும் காணும் கடவுள் என்று அறியக்கடவார்கள்.
20 வயிறு எல்லா உணவையும் உண்கின்றது@ ஆனால், ஓர் உணவு மற்றொன்றை விட மேலானது.
21 தொண்டை காட்டு மிருகத்தின் இறைச்சியை அறிகிறது@ அது போலவே, பக்தியுள்ள இதயமும் பொய்யான வார்த்தைகளை அறிகின்றது.
22 கெட்ட இதயம் வருத்தம் கொடுக்கும்.
23 துணிவுள்ளவன் அதை எதிர்ப்பான். பெண் எவ்வித மனிதனையும் ஏற்றுக் கொள்வாள். ஆனால், ஓர் இளம் பெண் மற்றொருத்தியை விட நல்லவள்.
24 பெண்ணின் அழகு அவள் கணவன் முகத்தை மகிழ்விக்கும். மனிதனுடைய எல்லா ஆசையுணர்விலும் ஆசையே முந்தினது.
25 நலப்படுத்தும் நாவானால், சாந்தமும் இரக்கமும் காண்பிக்கும்@ அவளுடைய கணவன் மனிதர் மக்களைப் போலல்லன்.
26 நல்ல மனைவியை அடைந்தவன் பொருள் சேர்க்கத் தொடங்குகிறான்@ அவளுக்குத் தகுந்த துணையாய் இருக்கிறான்@ இளைப்பாறும் தூணாய் இருக்கிறான்.
27 வேலியில்லாத இடத்தில் பொருள் பறிமுதலாகும். பெண் இல்லாத இடத்தில் மனிதன் வறுமையுற்றுப் பெருமூச்சு விடுவான்.
28 ஊரூராய் ஓடி ஒளிந்து தீவிரிக்கும் திருடனைப் போலத் தங்கும் இடம் இல்லாதவனையும், இரவிலே கண்ட இடமெல்லாம் தங்குகிறவனையும் நம்புவார் யார்?
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, உமது, நீர், ஏற்பாடு, கடவுள், பழைய, இல்லையென்று, மகத்துவங்களை, சீராக், ஆகமம், பெண், வேறு, மீது, எங்களை, உம்மைத், தவிர, இரக்கமாயிரும், இறைவாக்கினர்கள், இளைப்பாறும், கணவன், பொருள், மீதும், இடத்தில், எல்லா, வெளிப்படுத்தவும், அறியவும், ஆன்மிகம், திருவிவிலியம், மேல், முன்பாக, ஏற்றுக், அறியக்கடவார்கள், பெயரால்