சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 34
2 நிழலைப் பிடிக்கிறவன் போலும், காற்றைத் தொடர்ந்து ஓடுகிறவனைப் போலும் பொய்யான காட்சிகளைக் கவனிக்கிறவன் நடந்து கொள்கிறான்.
3 கனவின் தோற்றமும் அதைப் போன்றது. அது மனிதன் முகத்திற்கு முன்பாக அவனது சாயலாக இருக்கின்றது.
4 அசுத்தத்தால் எது சுத்தமாக்கப்படும்? பொய்யினின்று என்ன உண்மை வெளிப்படும்?
5 தவறுள்ள சகுனங்களும் பொய்யான குறிகளும் தீயோருடைய கனவுகளும் வீணாய் இருக்கின்றன.
6 கருவுற்றவளுடைய கனவுகளைப் போல் உன் நினைவிலும் வீண் தோற்றங்கள் உண்டாகின்றன. உன்னத கடவுளிடமிருந்து காட்சி உண்டானாலொழிய, உன் மனத்தை அவைகளில் வைக்காதே.
7 கனவுகள் பலரை மோசம் போகச் செய்தன. அவைகளில் நம்பிக்கை வைத்தவர்கள் ஏமாந்தார்கள்.
8 பொய்யில்லாமலே கட்டளையின் வார்த்தை நிறைவேறும். பிரமாணிக்கமுள்ள வாயில் ஞானம் தெளிவாக்கப்படும்.
9 பரிசோதிக்கப்படாதவன் என்ன அறிவான்? பலவற்றில் பட்டறிந்தவன் பலவற்றை யோசிப்பான். பல கற்றவன் அறிவுச் செறிவாய்ப் பேசுவான்.
10 பட்டறியாதவன் சொற்பமானவைகளை அறிந்திருக்கிறான். பலவற்றைப் பயின்றவனோ அறிவைப் பெருகச் செய்கிறான்.
11 பட்டறியாதவன் எவ்வித காரியங்களை அறிவான்? மோசம் செய்யப்பட்டவன் உபாயம் நிறைந்திருப்பான்.
12 பல இடம் போனதால் நான் பல காரியங்களைக் கண்டேன்@ வார்த்தைகளில் பல வழக்கங்களை அறிந்தேன்.
13 சில சமயங்களில் இவைகளைப்பற்றி உயிரிழக்க முதலாய் இருந்தேன்@ ஆனால், கடவுள் அருளால் காப்பாற்றப்பட்டேன்.
14 கடவுளுக்கு அஞ்சுகிறவர்களுடைய இதயம் தேடப்படுகின்றது. அவர் பார்வையிலும் அது ஆசீர்வதிக்கப்படும்.
15 அவர்களுடைய நம்பிக்கை தங்களைக் காப்பாற்றுகிறவர் மேல் இருக்கிறது. கடவுளுடைய கண்களும் தம்மை நேசிக்கிறவர்கள் மேல் இருக்கின்றன.
16 ஆண்டவருக்கு அஞ்சுகிறவன் ஒன்றுக்கும் அசையான்@ அஞ்சான். ஏனென்றால், அவரே அவன் நம்பிக்கையாய் இருக்கிறார்.
17 ஆண்டவருக்கு அஞ்சுகிறவனுடைய ஆன்மா பேறு பெற்றது.
18 அவன் யாரைப் பார்க்கிறான்? அவனுக்குப் பலமாய் இருக்கிறவர் யார்?
19 ஆண்டவருடைய கண்கள் தமக்குப் பயப்படுகிறவர்கள் மேல் இருக்கின்றன. அவரே வல்லமையுள்ள பாதுகாவலர்@ பலத்தின் உறுதி@ வெப்பத்தின் போர்வை@ நண்பகல் வெயிலின் நிழல்.
20 அவரே தாழ்வில் ஆறுதல்@ இழிவில் உதவி@ ஆன்மாவை உயர்த்துகிறார்@ கண்களை ஒளிர்விக்கிறார்@ நலமும் உயிரும் ஆசியும் கொடுக்கிறார்.
21 அநியாயச் சம்பாத்தியத்தைக் கொண்டு பலி கொடுக்கிறவனுடைய காணிக்கை வெறுப்புக்குரியது. அநீதருடைய நிந்தனைகள் அவருக்கு விருப்பமானவை அல்ல.
22 உண்மையினுடையவும் நீதியினுடையவும் வழிகளில் தங்களை நிலை நிறுத்துகிறவர்களுக்கு மட்டுமே கடவுள்.
23 அநீதருடைய ஈகைகளைக் கடவுள் ஏற்றுக் கொள்கிறதில்லை. அக்கிரமிகளுடைய காணிக்கைகளை அவர் பார்க்கிறதில்லை. அவர்களுடைய பலவிதப் பலிகளிலும் அவர்களுக்குப் பாவ மன்னிப்புக் கொடுக்க மாட்டார்.
24 வறியவருடைய பொருட்களைக் கொண்டு பலி ஒப்புக்கொடுக்கிறவன், தந்தை கண் முன்பாக மகனைக் கொலை செய்கிறவன் போல் இருக்கிறான்.
25 வறியோருடைய உணவு அவர்களுடைய உயிர். அவர்களிடமிருந்து அதைப் பறிக்கிறவன் இரத்தத்தின் மனிதனாய் இருக்கிறான்.
26 வேர்வையின் உணவை அபகரிக்கிறவன் தன் அயலானைக் கொல்கிறவன் போல் ஆகிறான்.
27 இரத்தத்தைச் சிந்துகிறவனும், கூலிக்காரனை மோசம் செய்கிறவனும் சகோதரராய் இருக்கிறார்கள்.
28 ஒருவன் கட்டுகிறான்@ மற்றொருவன் இடிக்கிறான். வீண் உழைப்பே தவிர அவர்களுக்கு இலாபம் என்ன?
29 ஒருவன் மன்றாடுகிறான்@ ஒருவன் சபிக்கிறான். எவன் வார்த்தையைக் கடவுள் கேட்பார்?
30 இறந்தவனைத் தொட்டுக் குளித்துக் கொண்டவன் திரும்பவும் அவனைத் தொடுவானேயாகில், அவன் குளித்ததால் பயன் என்ன?
31 அப்படியே, தன் பாவங்களுக்காக நோன்பு பிடிக்கிறவன் திரும்பவும் அவைகளையே செய்தால், தன்னைத் தாழ்த்திக்கொள்வதனால் என்ன பயன்? அவன் மன்றாட்டைக் கேட்பவர் யார்?
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, என்ன, ஏற்பாடு, பழைய, அவன், கடவுள், சீராக், இருக்கின்றன, போல், அவரே, ஒருவன், மேல், அவர்களுடைய, மோசம், ஆகமம், திருவிவிலியம், யார், ஆன்மிகம், ஆண்டவருக்கு, கொண்டு, அநீதருடைய, பயன், திரும்பவும், இருக்கிறான், கனவுகளைப், பிடிக்கிறவன், பொய்யான, அவைகளில், வீண், அதைப், நம்பிக்கை, அறிவான், அவர், போலும், பட்டறியாதவன், முன்பாக