சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 33
2 ஞானமுள்ளவன் கட்டளைகளையும் நீதி மொழிகளையும் பகைக்க மாட்டான்@ புயலில் கப்பலைப் போல் உடைபட மாட்டான்.
3 அறிவுள்ள மனிதன் கடவுளுடைய கட்டளைக்குப் பிரமாணிக்கமாய் நடக்கிறான். கட்டளையும் அவனுக்குப் பிரமாணிக்கத்துடன் இருக்கின்றது.
4 கேள்விக்குத் தெளிவான மறுமொழி சொல்கிறவன் மறுமொழியைத் தயார் செய்வான்@ இப்படி மன்றாடின பிறகு கேட்கப்படுவான்@ போதகத்தைக் காப்பாற்றுவான்@ அப்போது மறுமொழி சொல்வான்.
5 மூடனுடைய மனம் வண்டியின் சக்கரத்தைப் போல் இருக்கின்றது@ அவன் எண்ணம் சுழலும் அச்சுப் போல் இருக்கின்றது.
6 கேலி செய்யும் நண்பன், தன் மேல் யார் ஏறி உட்கார்ந்தாலும் கனைக்கும் அடங்காக் குதிரைக்கு ஒத்தவனாவான்.
7 ஒரு நாள் மற்றொரு நாளை விடவும், ஒரு நேரம் மற்றொரு நேரத்தை விடவும், ஓர் ஆண்டு மற்றோர் ஆண்டை விடவும் நல்லது என்பதற்குக் காரணம் என்ன?
8 கதிரவன் படைக்கப்பட்டுக் கடவுளுடைய ஏற்பாட்டை நிறைவேற்றும் போது, அவருடைய கட்டளையால் அவை சிறப்படைந்தன.
9 அவரே காலங்களையும், அவைகளின் திருநாட்களையும் நியமித்தார். குறிக்கப்பட்ட நேரத்தில் அந்தந்த நாட்களில் மக்கள் திருநாட்களைக் கொண்டாடினார்கள்.
10 அந்நாட்களில் சிலவற்றைக் கடவுள் உயர்த்தி மகிமைப்படுத்தினார்@ சிலவற்றைச் சாதாரண நாட்களின் கணக்கில் வைத்தார். ஆதாம் உண்டாக்கப்பட்ட சேற்றிலும் மண்ணிலுமிருந்து, உண்டான மனிதர் யாவரும் அவ்வண்ணமே.
11 பலவித ஒழுங்குகளால் ஆண்டவர் அவர்களைப் பிரித்தார்@ அவர்கள் வழிகளை மாற்றினார்.
12 அவர் சிலரை ஆசீர்வதித்து உயர்த்தினார்@ சிலரைப் புனிதமாக்கித் தம்முடன் சேர்த்துக் கொண்டார்@ சிலரைச் சபித்துத் தாழ்த்தி, அவர்களே பிரிந்து போன பிறகு அவர்களை விட்டு விட்டார்.
13 குயவன் கையில் களிமண் மிருதுவாகி உருவாகிறது போல,
14 மனிதன் வழிகளெல்லாம் கடவுள் விருப்பப்படியே அமைகின்றன. ஏனெனில் மனிதனை உண்டாக்கித் தமது தீர்மானத்தின்படியே நடத்துகிறவருடைய கையில் அவன் இருக்கிறான்.
15 தீமைக்கு எதிரானது நன்மை@ சாவுக்கு எதிரானது வாழ்வு. அது போலவே, நீதிமானுக்கு எதிராகப் பாவி இருக்கிறான். இவ்வண்ணமே உன்னதமானவரின் எல்லாச் செயல்களிலும் இரண்டு இரண்டாகவும், அவை ஒன்றுக்கொன்று எதிரானவையுமாய் இருக்கக் காண்பாய்.
16 நானும் கடைசியாக விழித்தேன்@ அறுத்தவர்கள் பின்னால் தப்பிய கொடி முந்திரிப் பழங்களைச் சேகரிக்கிறவன் போல் ஆனேன்.
17 ஆண்டவர் அருளை நான் நம்பினேன்@ அறுக்கிறவன் போலத் தொட்டியை நிரப்பினேன்.
18 எனக்காக மட்டுமல்ல- ஆனால், நன்னெறியைத் தேடும் எல்லாருக்காகவும் உழைத்தேனென்று கண்டு கொள்ளுங்கள்.
19 பெரியோரே, அனைத்து மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். சபையின் தலைவர்களே, எனக்குச் செவிகொடுங்கள்.
20 புதல்வனுக்கும் மனைவிக்கும் சகோதரனுக்கும் நண்பனுக்கும் உன் வாழ்நாளில் உன் மேல் அதிகாரம் கொடாதே. பிறகு நீ மன வருத்தப்படாதபடிக்கும், உனக்குத் தேவையானவைகளைக் கெஞ்சாதபடிக்கும் உன் செல்வத்தை மற்றொருவனுக்குக் கொடுத்து விடாதே.
21 நீ உயிரோடிருந்து ஆவியை விடும் வரையிலும் எவனும் உன்னை மாற்றாதிருக்கட்டும்.
22 உன் மக்களுடைய கைகளை எதிர்பார்ப்பதை விட உன் மக்கள் உன்னைக் கேட்பது நலம்.
23 உன் எல்லாச் செயல்களிலும் முதன்மையாய் இரு.
24 உன் மகிமைக்குப் பழுது வருவிக்காதே. உன் வாழ்க்கையின் முடிவு நாளில், நீ சாகிற நேரத்தில் உன் செல்வத்தைப் பங்கு பிரித்து விடு.
25 வைக்கோலும் அடியும் சுமையும் கழுதைக்கு@ உணவும் கண்டிப்பும் வேலையும் அடிமைக்கு.
26 அவன் கண்டிப்பில் வேலை செய்கிறான்@ ஓய்வு தேடுகிறான். அவனைக் கைசோரவிடு@ அப்பொழுது தன் விருப்பத்தைத் தேடுவான்.
27 நுகத்தடியும் வடமும் முரட்டுக் கழுத்தை வளைக்கின்றன. ஓயாத வேலைகள் அடிமையை அடக்குகின்றன.
28 கெட்ட மனமுள்ள அடிமைக்கு வேதனையும் விலங்குகளும். சோம்பேறியாய் இராதபடி அவனுக்கு வேலை ஏவு.
29 சோம்பல் மிகுந்த கெடுதிக்குக் காரணமாயிற்று.
30 வேலைகளில் அவனை நிறுத்து@ அதுதான் அவனுக்குத் தகுதி. கேளாவிட்டால், விலங்குகளினால் அவனை வளைத்துப்போடு. ஆனால், எவன் மீதும் மிதமிஞ்சி நடவாதே. உண்மையாகவே முக்கியமான யாதொன்றையும் யோசனையில்லாமல் செய்யாதே.
31 உன் அடிமை உனக்குப் பிரமாணிக்கமுள்ளவனானால், அவன் உன் ஆன்மாவைப் போல் உனக்கு இருக்கக் கடவான்@ சகோதரனைப் போல் அவனை நடத்து. ஏனென்றால், உன் ஆன்ம இரத்தத்தினால் அவனைக் கண்டடைந்தாய்.
32 அவனை நீ அநியாயமாய் நோகச் செய்தால் ஓடி விடுவான்.
33 ஆத்திரப்பட்டு ஓடிப்போவானேயாகில், நீ தேடுகிறவனை எவ்விடத்தில் தேடுகிறதென்று நீ அறியாய்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, போல், ஏற்பாடு, அவனை, அவன், பழைய, விடவும், பிறகு, ஆகமம், சீராக், அவனைக், கடவுள், கையில், எல்லாச், எதிரானது, இருக்கிறான், இருக்கக், வேலை, அடிமைக்கு, நான், ஆண்டவர், செயல்களிலும், மற்றொரு, கடவுளுடைய, மனிதன், அதிகாரம், ஆன்மிகம், இருக்கின்றது, மறுமொழி, நேரத்தில், திருவிவிலியம், மேல், மக்கள்