சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 32
2 அவர்களைப் பற்றிய கவலை உனக்கு இருக்கட்டும்@ அதன் பிறகு உட்கார்@ உன் வேலையெல்லாம் முடிந்த பிறகு நீயும் பந்தியில் அமர்.
3 அவர்களைப்பற்றி நீ மகிழவும், மகுடம் போலிருக்கும் நன்றியறிதலின் அணிகலனை அடையவும், விருந்தினர் உன்னைப் புகழும் பேறு பெறவும் தகுந்த விதமாய் நடந்து கொள்.
4 எல்லாருக்கும் மூத்தவனே, நீ பேசு@ ஏனென்றால், அது உனக்குத் தகும்.
5 அது தேர்ந்த ஞானமுள்ள பேச்சாய் இருக்கட்டும். இன்னிசைக் கருவிகளைத் தடை செய்யாதே.
6 கேட்க விருப்பமில்லாவிட்டால், வார்த்தைகளைக் கொட்டாதே. தகாத சமயத்தில் வீணாய் உன் ஞானத்தைப் பாராட்டாதே.
7 பொன்னணிகலனில் மாணிக்கம் பதித்திருப்பது போல, மதுபானம் செய்யும் விருந்தில் இன்னிசைக் கருவி அமைகிறது.
8 பொன்னணிகலனில் இரத்தினக் கல்லின் முத்திரையைப் போல, மகிழ்ச்சியும் மட்டானதுமான மதுவில் இசைக் கருவியாளருடைய பங்கு அமைகின்றது.
9 மௌனமாய்க் கேள்@ உன் மரியாதைக்காக உன் மீது விருப்பம் கொள்வார்கள்.
10 இளைஞனே, உன்னைப் பற்றிய காரியங்களிலே முதலாய் அரிதாய்ப் பேசு.
11 இரு முறை உன்னைக் கேள்வி கேட்டால், உன் மறுமொழி சுருக்கமாய் இருக்கட்டும்.
12 பல காரியங்களில் அறியாதவனைப் போல் இரு@ மௌனமாய் இருந்து, சொல்வதற்குச் செவி கொடுத்து, அவசியமான போது கேள்வி கேள்.
13 பெரியோர் சபையில் மிஞ்சாதே@ முதியோர் கூட்டத்தில் அதிகமாய்ப் பேசாதே.
14 இடிக்கு முன் மின்னல்@ அடக்கவொடுக்கத்திற்கு முன் கூச்சம். இந்த மரியாதைக்காக உனக்கு எல்லாருடைய அன்பும் கிடைக்கும்.
15 எழுந்திருக்கும் நேரம் ஆன போது மயங்காதே. ஆனால், உடனே உன் வீட்டிற்கு விரைந்து போய், அவ்விடத்தில் உல்லாசமாய் இரு@ அவ்விடத்தில் விளையாடு.
16 உன் மன விருப்பத்தை நிறைவேற்று. ஆனால், குற்றமானதையல்ல@ அகந்தையானதையுமல்ல.
17 இவை யாவையும் பற்றி, உன்னை உண்டாக்கித் தம் நன்மைகளால் உன்னை நிரப்பின ஆண்டவரைப் புகழ்வாய்.
18 ஆண்டவருக்கு அஞ்சுகிறவன் அவர் போதனையை ஏற்றுக் கொள்கிறான். அவருக்காக விழித்திருந்தவர்கள் அவரது ஆசி பெறுவர்.
19 கட்டளையைத் தேடுகிறவன் அதனால் நிரப்பப்படுவான். கள்ளத்தனமாய்ச் செய்கிறவன் அதிலேயே இடையூறடைவான்.
20 ஆண்டவருக்கு அஞ்சுகிறவர்கள் நீதியான தீர்வையைக் காண்பார்கள்@ ஒளியைப் போல் நீதியைக் கொளுத்துவார்கள்.
21 பாவியான மனிதன் கண்டனையை விலக்குவான்@ தன் விருப்பம் போல் சாக்குப் போக்குகளைக் காண்பான்.
22 யோசனையுள்ள மனிதன் அறிவைச் சிதறவிடான். அன்னியனும் அகந்தையுள்ளவனும் அஞ்சவே மாட்டார்கள்.
23 பாவி யோசனையில்லாமல் செய்திருந்த போதிலும் அஞ்சமாட்டான்@ ஆனால், தன் சொந்தச் செயல்களாலேயே குற்றம் சாட்டப்படுவான்.
24 மகனே, எதையும் சிந்திக்காமல் செய்யாதே. அப்படியானால், செய்த பிறகு மன வருத்தப்படமாட்டாய்.
25 கெடுதியின் வழி போகமாட்டாய்@ கற்களிலே மோதிக்கொள்ளமாட்டாய்@ உன் ஆன்மாவிற்குத் தீமை செய்யாதபடி வருத்தமான வழிக்கு உன்னைக் கையளிக்கமாட்டாய்.
26 உன் பிள்ளைகளிடமிருந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்@ உன் ஊழியக்காரர்களிடமிருந்து உன்னைக் காத்துக் கொள்.
27 எல்லாச் செயல்களிலும் உன் ஆன்ம உறுதியை நம்பு@ ஏனென்றால், அதுவே கட்டளைகளைக் கடைப்பிடித்தலாம்.
28 கடவுளை விசுவசிக்கிறவன் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறான்@ அவர் மீது தன் நம்பிக்கையை வைக்கிறவன் கெடுதிக்கு உள்ளாக மாட்டான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, உன்னைக், சீராக், பிறகு, ஆகமம், போல், போது, கேள்வி, முன், இரு@, உன்னை, மனிதன், கட்டளைகளைக், அவர், ஆண்டவருக்கு, விருப்பம், அவ்விடத்தில், செய்யாதே, பற்றிய, உனக்கு, நீயும், ஆன்மிகம், திருவிவிலியம், உன்னைப், கொள், பொன்னணிகலனில், மரியாதைக்காக, இன்னிசைக், இருக்கட்டும், ஏனென்றால், மீது