சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 31
2 வருங்காலத்தின் மீதுள்ள கவலை புத்தியை மாற்றுகின்றது@ கடும் நோய் ஆன்மாவை நிதானப்படுத்துகின்றது.
3 பொருட்களைச் சேர்ப்பதற்காகச் செல்வன் உழைப்பான்@ அவன் இளைப்பாற்றியில் பொருட்களால் இன்பம் அடைவான்.
4 வறியவன் உணவில்லாமையால் உழைப்பான்@ மேலும் அதிக வறுமையால் வருந்துவான்.
5 பொன்னை நேசிக்கிறவன் நீதிமான் ஆகான். அழிவைப் பின்செல்கிறவன் அதனாலேயே நிரப்பப்படுவான்.
6 பொன்னால் பல கேடுகள் உண்டாயின@ அதன் அழகால் பலருடைய அழிவு ஏற்பட்டது.
7 பொன்மீது அடாத பற்றுக் கொள்வது பாவத்திற்கு ஏதுவாய் இருக்கின்றது. அதைப் பின்செல்கிறவர்களுக்குக் கேடாம்! அவிவேகி எவனும் அதிலேயே மடிவான்.
8 குற்றமில்லாது காணப்படும் செல்வன் பேறு பெற்றோன்@ பொன்னை நாடிப் போகாதவனும், பணத்திலும் செல்வத்திலும் நம்பிக்கை வைக்காதவனும் பேறு பெற்றோன்.
9 அவன் யார்? அவனைப் புகழ்வோம்@ ஏனென்றால் தன் வாழ்நாளில் வியப்புக்குரியனவற்றைச் செய்தான்.
10 அதில் பரிசோதிக்கப்பட்டு உத்தமனானவன் எவனோ, அவனுக்கு நித்திய மகிமை கிடைக்கும். அவன் மீறி நடந்திருக்கக் கூடும்@ ஆனால், மீறினவன் அல்லன். தீமை செய்திருக்கக் கூடும்@ ஆனால், செய்யவில்லை.
11 ஆதலால், அவன் பொருட்கள் ஆண்டவரிடத்தில் நிலைமையாக்கப்பட்டன. புனிதருடைய சபை முழுவதும் அவன் நற்செயல்களை வெளிப்படுத்தும்.
12 நீ அறுசுவைப் பண்டங்களை வைத்த மேசையில் உட்கார்ந்தாயோ? முதற்கண் உன் வாயின் உண்டிப் பிரியத்திற்கு ஆளாகாதே.
13 பல பண்டங்கள் அதன் மேல் இருக்கின்றன என்று சொல்லாதே.
14 உதவாத பார்வை கெடுதியானதென்று நினைத்துக்கொள்.
15 கண்ணை விடக் கெடுதி வாய்ந்த படைப்பு யாது? ஆகையால், பார்க்கும் போது முகமெல்லாம் நனையக் கண்ணீர் சொரியும்.
16 முந்தி நீ கை நீட்டாதே@ நீட்டினால், பொறாமையால் குற்றம் சாட்டப்பட்டு வெட்கமடைவாய்.
17 பந்தியில் அவசரப்படாதே.
18 உன்னைக் கொண்டே அயலானுடைய குணத்தையும் அறிந்து கொள்.
19 உன்னிடம் கொண்டுவரப்பட்டவைகளை அளவுள்ள மனிதனைப் போல் பயன்படுத்து@ மிகுதியாய் உண்பதனால் பகைக்கு ஆளாகாதே.
20 மரியாதையை முன்னிட்டு, முந்தியே நிறுத்தி விடு@ உன் மதிப்பு குறையாதபடிக்கு, மிகுதியாய் உண்ணாதே.
21 பலருடைய சபையில் இருந்தால், முந்தி நீ கை நீட்டாதே@ குடிப்பதற்கும் கேளாதே.
22 அளவுள்ள மனிதனுக்குக் கொஞ்சம் மதுபானமே எவ்வளவோ போதுமானது@ தூங்குகையில் அதனால் தொல்லைப்பட மாட்டாய்@ நோக்காடும் அனுபவிக்கமாட்டாய்.
23 தூக்கக் கேடு, வயிற்று வலி, நோய் நோக்காடு- இவை மட்டுத்திட்டமில்லாதவனுக்கு உண்டாகின்றன.
24 அளவோடு உண்கிற மனிதனுக்கு நல்ல தூக்கம் வருகின்றது. அவன் காலை வரையிலும் தூங்குவான்@ அவன் ஆன்மாவும் அவனோடு மகிழும்.
25 அதிகமாய் உண்ணக் கட்டாயப் படுத்தப்பட்டால், இடையே எழுந்து போய் வாந்தி செய்து விடு. அது உனக்கு நலம் பயக்கும்@ உன் உடலுக்கும் நோயுண்டாக்க மாட்டாய்.
26 மகனே, நான் சொல்வதைக் கேள்@ என்னை நிந்தியாதே. கடைசியில் என் வார்த்தைகளைக் கண்டுபிடிப்பாய்.
27 உன் எல்லாச் செயல்களிலும் சுறுசுறுப்பாய் இரு@ நோய் ஒன்றும் உன்னை அண்டாது.
28 விருந்தளிப்பவனின் தாராளத் தன்மையையும், அவனது நம்பத் தகுந்த உண்மையின் சாட்சியத்தையும் பலர் ஆசீர்வதிப்பர்.
29 கஞ்சத்தனமாய் விருந்து செய்கிறவன் மீது ஊர் முறையிடும்@ அவனுடைய கஞ்சத்தனத்தின் சாட்சியம் மெய்யானது.
30 மதுபானப் பிரியர்களைத் தூண்டிவிடாதே. ஏனென்றால், மதுபானம் பலரைக் கெடுத்தது.
31 நெருப்பு இரும்பின் உறுதியைப் பரிசோதிக்கின்றது@ மிதமிஞ்சிக் குடித்த மதுவும் அகந்தையுள்ளவர்களுடைய இதயங்களை வெளியாக்குகின்றது.
32 அளவோடு குடிக்கப்பட்ட மது மனிதருக்குத் தகுந்த வாழ்வு. திட்டமாய் அதைக் குடிப்பாயானால், மட்டாய் இருப்பாய்.
33 மதுவினால் வலுக் குறைந்தவனுடைய வாழ்க்கை எதற்கு உதவும்?
34 உயிரைப் போக்கடிப்பது என்ன? சாவு.
35 ஆதியில் மகிழ்ச்சிக்காக மது உண்டாக்கப்பட்டதே தவிர, மயக்கத்திற்காக அன்று.
36 அளவோடு அருந்தப்பட்ட மது ஆன்மாவிற்கும் இதயத்திற்கும் மகிழ்ச்சி தரும்.
37 மட்டான பானம் ஆன்மாவிற்கும் உடலுக்கும் நலம் தரும்.
38 மிதமிஞ்சி அருந்தப்பட்ட மது கோபம், ஆத்திரம் முதலிய பல நட்டங்களுக்குக் காரணமாய் இருக்கின்றது.
39 மிதமிஞ்சி அருந்திய மது ஆன்மாவிற்குத் துயரத்தையே தருகிறது.
40 அது ஆத்திரத்தை உண்டாக்குகின்றது@ அவிவேகியைக் குற்றத்திற்கு உள்ளாக்குகின்றது@ பலத்தைக் குறைக்கின்றது@ பலரைக் காயப்படுத்துகின்றது.
41 மதுபானம் அருந்தும் பந்தியில் அயலானிடம் குற்றம் கண்டுபிடிக்காதே@ அவன் மகிழ்ச்சியில் அவனை நிந்தியாதே.
42 பழிச் சொற்களை அவனுக்குச் சொல்லாதே@ திரும்பக் கேட்டு, அவனை நெருக்காதே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, அவன், ஏற்பாடு, பழைய, நோய், அளவோடு, சீராக், ஆகமம், நிந்தியாதே, உடலுக்கும், நலம், மிகுதியாய், அளவுள்ள, தகுந்த, பலரைக், மிதமிஞ்சி, அவனை, தரும், ஆன்மாவிற்கும், பந்தியில், அருந்தப்பட்ட, மதுபானம், ஆளாகாதே, செல்வன், உழைப்பான்@, கவலை, மீதுள்ள, திருவிவிலியம், ஆன்மிகம், பொன்னை, பலருடைய, முந்தி, நீட்டாதே@, கூடும்@, ஏனென்றால், இருக்கின்றது, பேறு, குற்றம்