சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 30
2 தன் மகனுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கிறவன் அவன் பொருட்டுப் புகழப்படுவான்@ உறவினருக்கு முன்பாக அவன் பொருட்டு மேன்மைப் படுத்தப்படுவான்.
3 தன் புதல்வனுக்குக் கல்வி அளிப்பவன் தன் பகையாளியைப் பொறாமைப்படச் செய்கிறான்@ நண்பர் சபையில் மேன்மைப் படுத்தப்படுவான்.
4 அவன் தந்தை இறந்தாலும் இறவாதவனைப் போல் இருக்கிறான். ஏனென்றால், தன்னையொத்தவனைத் தனக்குப் பின் விட்டு வைத்திருக்கிறான்.
5 அவன் தன் வாழ்நாளில் தன் மகனைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டான்@ தன் மரண நேரத்தில் துன்பப்படவுமில்லை@ பகைவர் முன்பாக வெட்கமடையவுமில்லை.
6 ஏனென்றால், பகையாளிகளுக்கு விரோதமாய் வீட்டைக் காக்கிறவனையும், நண்பருக்குப் பதில் நன்றி செய்கிறவனையும் விட்டு வைத்திருக்கிறான்.
7 அவன் தன் மக்களுடைய ஆன்மாக்களுக்காகத் தன் காயங்களைக் கட்டிக் கொண்டான். எல்லாச் செய்திகளிலும் அவன் குலை நடுங்கினது.
8 அடங்காத குதிரை மூர்க்கமாய்ப் போகின்றது. தன் விருப்பத்திற்கு விடப்பட்ட மகனும் துரிதமாய்ச் செல்வான்.
9 உன் மகனின் மனத்தின்படியே நீ விட்டு விட்டால் உன்னைத் தனக்கு அஞ்சும்படி செய்வான். அவனுடன் விளையாடினால் உனக்குத் துன்பம் வருவிப்பான்.
10 நீ துன்பம் அடையாதபடிக்கு அவனுடன் சேர்ந்து சிரிக்காதே@ ஏனென்றால், இறுதியில் உன் பற்களைக் கடிப்பாய்.
11 இள வயதில் அவனுக்கு அதிகாரம் கொடுக்காதே@ அவன் எண்ணங்களை அசட்டை செய்யாதே.
12 அவன் பிடிவாதக்காரன் ஆகாதபடிக்கும், உன்னை அசட்டை செய்யாதபடிக்கும், அதனால் நீ மனவருத்தம் அடையாதபடிக்கும் இள வயதிலேயே அவன் கழுத்தை வளைத்து, சிறுவனாயிருக்கும் போதே அவனை அடித்து வளர்ப்பாயாக.
13 உன் மகனின் ஒழுக்கக் கேட்டால் நீ அவமானம் அடையாதபடிக்கும், அவனுக்குக் கற்பித்துக் கொடுத்து நன்னெறியில் பழக்கு.
14 பலவீனனும் நோயில் அடிபடுகிறவனுமான செல்வனை விட, உடல் நலமும் பலமுமுள்ளவனுமான வறியவன் மேலானவன்.
15 ஆன்ம நலம் நீதியின் புனிதத் தன்மையில் அடங்கியிருக்கின்றது@ அது எல்லாப் பொன்னையும் வெள்ளியையும் விட உயர்ந்தது. திரண்ட செல்வத்தை விட வலுவுள்ள உடல் மேலானது.
16 உடல் நலமாகிய செல்வத்தை விட மேலான செல்வம் இல்லை@ இதய மகிழ்ச்சியை விட மேலான மகிழ்ச்சி இல்லை.
17 கசப்பான வாழ்வை விடச் சாவு தாவிளை. தீராத நோயை விட நித்திய இளைப்பாற்றி மேலானது.
18 மூடப்பட்ட வாயில் மறைக்கப்பட்ட பொருட்கள், கல்லறையைச் சுற்றிலும் வைக்கப்பட்ட விருந்துப் பண்டங்கள் போன்றவையாம்.
19 சிலைக்குக் காணிக்கையால் வரும் பயன் என்ன? அது உண்பதுமில்லை@ நுகர்வதுமில்லை.
20 தன் பாவத்திற்குத் தண்டனையைச் சுமந்து கொண்டு, ஆண்டவரை விட்டகன்று போகிறவனும் அத்தன்மை உள்ளவன்.
21 (இவன்), அண்ணகன் கன்னிப் பெண்ணைத் தழுவிப் பெருமூச்சு விடுவது போலக் கண்களால் பார்த்துத் தவிக்கிறான்.
22 உன் ஆன்மாவிற்கு வருத்தம் கொடாதே@ உன் யோசனையில் உன்னைத் தானே துன்பப்படுத்திக் கொள்ளாதே.
23 இதய மகிழ்ச்சியே மனிதனுக்கு வாழ்வு@ புனிதத் தன்மையின் நிலைமையே செல்வம். மனிதனுடைய மகிழ்ச்சியே நீடிய வாழ்வு.
24 கடவுளுக்கு விருப்பப்படுமாறு உன் ஆன்மாவின் மீது இரக்கமாய் இருந்து, உன்னைத் தானே அடக்கு@ அவருடைய புனிதத் தன்மையில் உன் இதயத்தைச் சேர்த்திடு@ வருத்தத்தை உன்னை விட்டுத் தூர அகற்றி விடு.
25 ஏனென்றால், வருத்தம் பலரைக் கொன்றது@ அதில் பயன் யாதொன்றும் இல்லை.
26 பொறாமையும் கோபமும் வாழ்நாட்களைக் குறைக்கின்றன@ கவலை காலத்துக்கு முந்தியே முதுமையைக் கூட்டி வரும்.
27 தூய்மையும் அமைதியும் உள்ள இதயம் விருந்தில் அமர்ந்திருக்கின்றது@ ஏனென்றால், பண்டங்கள் வெகு நேர்த்தியாய்ச் செய்யப்பட்டுள்ளன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, அவன், ஏனென்றால், ஏற்பாடு, பழைய, புனிதத், விட்டு, சீராக், உடல், உன்னைத், ஆகமம், மகிழ்ச்சி, மேலான, செல்வம், மேலானது, தன்மையில், இல்லை, செல்வத்தை, பண்டங்கள், தானே, மகிழ்ச்சியே, வருத்தம், பயன், வரும், திருவிவிலியம், உன்னை, இறுதியில், அதிகாரம், படுத்தப்படுவான், மேன்மைப், கல்வி, முன்பாக, வைத்திருக்கிறான், மகனின், அசட்டை, அவனை, துன்பம், அவனுடன், ஆன்மிகம், அடையாதபடிக்கும்