சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 29
2 உன் அயலானுக்கு அவனது தேவையில் கடன் கொடு. நீயும் குறித்த காலத்தில் அயலானுக்குத் திருப்பிக் கொடுத்து விடு.
3 வார்த்தையைக் காப்பாற்றி அவனுடன் நம்பிக்கையாய் நடந்துகொள்@ உனக்குத் தேவையானதை எப்போதும் நீ கண்டடைவாய்.
4 வாங்கின கடனைக் கண்டெடுத்த பொருள் போல் பலர் எண்ணினார்கள்@ தங்களுக்கு உதவினவர்களுக்குத் தொல்லை வருவித்தார்கள்.
5 வாங்குகிற வரையிலும் கொடுக்கிறவனுடைய கைகளை முத்தமிடுகிறார்கள்@ பணிவான வார்த்தைகளைக் கொண்டு வாக்குக் கொடுக்கிறார்கள்.
6 திருப்பிக் கொடுக்க வேண்டிய காலத்திலோ தவணை கேட்பார்கள். சலிப்பும் முறைப்பாடுமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள்.
7 காலத்தைக் குற்றம் சாட்டுவார்கள். திருப்பித் தரக் கூடுமானாலோ தகராறு செய்வார்கள்@ வருத்தப்பட்டுக் கொண்டு தொகையில் பாதி கொடுப்பார்கள். அதையும் கண்டெடுத்த பொருளென்று எண்ணிக் கொள்வார்கள்.
8 திருப்பித் தரக் கூடாமற் போனால், பணம் கொடாமல் அவனை மோசம் செய்வார்கள். வலிய அவனைத் தம் பகைவனாக்கிக் கொள்வார்கள்.
9 மேலும் நிந்தையையும் சாபத்தையுமே அவனுக்குக் கொடுப்பார்கள். மரியாதைக்கும் நன்மைக்கும் பதிலாக அவனை நிந்திப்பார்கள்.
10 பலர் கடன் கொடாதிருப்பது கெட்ட மனத்தினால் அன்று@ மாறாக, வலிய மோசம் போக அஞ்சுவதனாலேயே.
11 ஆனாலும், கேடுற்றவன் மேல் மன இரக்கம் வைத்து, அவன் பிச்சையெடுத்து வருத்தமடையும்படி விடாதே.
12 கட்டளையின் பொருட்டு வறியவனை ஆதரி@ வறுமையின் பொருட்டு அவனை வெறுமனே அனுப்பி விடாதே.
13 சகோதரனையும் நண்பனையும் முன்னிட்டுப் பணத்தை இழந்து போ. நீ தண்டனை அடையாதபடி கல்லின் கீழ் அதை ஒளிக்காதே.
14 உன் செல்வத்தை உன்னத கடவுளின் கட்டளைகளில் வை@ பொன்னை விட அது உனக்கு அதிகப் பயன் தரும்.
15 உன் பிச்சையை வறியவனுடைய இதயத்திற்கு இடு. எல்லாத் தீமையினின்றும் அது உனக்காக மன்றாடும்.
16 வலியவனுடைய கேடயத்தையும் ஈட்டியையும் விட
17 உன் பகைவனுக்கு விரோதமாய்
18 அது சண்டை செய்யும்.
19 நல்ல மனிதன் தன் அயலானுக்காகப் பிணையாகிறான். வெட்கம் கெட்டவன் அவனைக் கைவிட்டு விடுவான்.
20 பிணையாளியினுடைய உதவியை மறந்து விடாதே. ஏனென்றால், அவன் தன் ஆன்மாவை உனக்காகக் கொடுத்தான்.
21 பாவியும் தூய்மையற்றவனும் தன் பிணையாளியை விட்டகல்வான்.
22 பாவி பிணையாளியின் பொருட்கள் தனக்கே உரியன என்பான். நன்றி கெட்ட மனத்தை உடையவன் தன்னைக் காக்கிறவனைக் கைவிட்டு விடுவான்.
23 தன் அயலானுக்காக மனிதன் பிணையாளியாகிறான். அவன் மரியாதை கெட்டவனாய் இருந்தால், அவனால் கைவிடப்படுவான்.
24 நீதியற்ற பிணையாளி திறமையுள்ள பலரைப் போக்கடித்திருக்கின்றான். கடலின் அலைகளைப் போல் அவர்களை அலைக்கழித்தான்.
25 வலிமையுள்ளவர்களை ஊர் ஊராய்ச் சுற்றி அலையும்படி செய்தான். அவர்கள் புற இனத்தாரிடத்தில் அலைந்தார்கள்.
26 ஆண்டவருடைய கட்டளையை மீறி நடக்கும் பாவி நீதியற்ற பிணையாளியுடன் சேர்வான். பல காரியங்களைச் செய்ய முயல்கிறவன் மற்றவரின் தீர்ப்புக்கு உள்ளாவான்.
27 உன் ஆற்றலுக்குத் தக்கபடி அயலானுக்கு உதவி செய். நீயே அகப்பட்டுக் கொள்ளாதபடிக்குக் கவனமாய் இரு.
28 மனிதனுடைய வாழ்க்கைக்கு வேண்டிய தலையான காரியங்களாவன: தண்ணீர், அப்பம், உடை, மானத்தைக் காப்பாற்றும் வீடு.
29 சொந்த வீடில்லாமல் பிறர் வீட்டில் உண்ணும் சிறந்த விருந்தை விடப் பலகைகள் மறைவில் உண்ணப்படும் வறியவனுடைய உணவு மேலானது.
30 சொற்பத்தையும் பெரிது என மகிழ்வுடன் ஏற்றுக்கொள்@ அப்போது அன்னிய குடியிருப்பின் நிந்தையைக் கேட்க மாட்டாய்.
31 வீடு வீடாய்க் குடியிருக்கிறவன் வாழ்க்கை கேடானது. ஒருவன் எவ்விடம் விருந்தாடியாய்ப் போகிறானோ அவ்விடம் துணிவுடன் எதுவும் செய்யான்@ வாயையும் திறவான்.
32 நன்றி கெட்டவர்களைத் தன் வீட்டில் ஏற்றுக் கொண்டு, உணவும் பானமும் கொடுப்பான்@ இதைப் பற்றிப் பழிக்குரிய வார்த்தைகளையும் கேட்பான்.
33 விருந்தாடியே, போய் மேசையைத் தயார் செய்@ உன் கையிலுள்ளதைக் கொண்டே மற்றவர்களுக்குச் சாப்பாடு போடு.
34 மாட்சி நிறை என் நண்பரை விட்டுப் போய் விடு@ அவன் என் சகோதரனானபடியால், அவனை ஏற்றுக் கொள்ள என் வீடு வேண்டியதாயிருக்கின்றது என்று சொல்லப்படுவான்.
35 அறிவுள்ள மனிதனுக்கு வீட்டுத் தலைவன் கண்டிப்பும், கடன் கொடுத்தவனுடைய நிந்தையும் பெரும் காரியங்களே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, அவனை, அவன், கடன், பழைய, வீடு, சீராக், விடாதே, கொண்டு, ஆகமம், மனிதன், பொருட்டு, வறியவனுடைய, நன்றி, வீட்டில், ஏற்றுக், போய், நீதியற்ற, கெட்ட, விடுவான், பாவி, கைவிட்டு, கொடுப்பார்கள், அயலானுக்கு, திருப்பிக், பணம், இரக்கம், திருவிவிலியம், ஆன்மிகம், கண்டெடுத்த, போல், கொள்வார்கள், மோசம், தரக், திருப்பித், பலர், வேண்டிய, வலிய