சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 28
2 உனக்குத் தீமை செய்யும் அயலானுக்கு மன்னிப்புக் கொடு@ அப்போது தான் நீ மன்றாடும் போது உனக்கும் பாவங்கள் மன்னிக்கப்படும்.
3 மனிதன் மற்றொருவனை மன்னிக்காது இருக்கிறான். ஆனால், தன்னை மன்னிக்கும்படி கடவுளைக் கேட்கிறான்.
4 தன்னைப் போன்ற மனிதன் மீது அவனுக்கு இரக்கம் இல்லை@ ஆனால் தன் பாவங்களுக்காக மன்றாடுகிறான்.
5 அழிவுள்ள மனிதனான அவன் கோபம் பாராட்டுகிறான்@ கடவுளிடமோ மன்னிப்புக் கேட்கிறான். அவன் குற்றங்களுக்காக மன்றாடுகிறவன் யார்?
6 உன் முடிவுகளை நினைத்துப் பகைமையை விட்டு விடு.
7 கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதவர் மேல் அழிவும் சாவும் அடுத்திருக்கின்றன.
8 தெய்வ பயத்தோடு நட. அயலான் மேல் கோபம் கொள்ளாதே.
9 உன்னத கடவுளின் உடன்படிக்கையை நினைத்துக்கொள். அயலானுடைய அறியாமையைப் பொருட்படுத்தாதே.
10 வழக்காடாதே. அதனால், உன் பாவங்களைக் குறைப்பாய்.
11 ஏனென்றால், கோபமுள்ள மனிதன் தன் வழக்கை மூட்டுகிறான். பாவி நண்பரைக் கலைப்பான்@ சமாதானமுள்ளவர்கள் நடுவில் பகையை விளைவிக்கிறான்.
12 ஏனென்றால், காட்டு மரங்களைப் போல் நெருப்பு பற்றி எரியும்@ மனிதனுடைய வலிமை எத்தன்மையோ அத்தன்மையே அவன் கோபமும். அவன் தன் செல்வத்துக்குத் தகுந்தவண்ணம் தன் கோபத்தைப் பெருகச் செய்வான்.
13 தீடீர்ச் சண்டை நெருப்பை மூட்டுகின்றது. திடீர் வழக்கு இரத்தத்தைச் சிந்துவிக்கின்றது. சான்று பகரும் நாவு சாவைக் கூட்டி வருகின்றது.
14 நெருப்புப் பொறியை ஊதுவாயாகில், அது நெருப்பாகப் பற்றிக்கொள்ளும்@ அதன் மீது துப்பினால் அவிக்கப்படும். இரண்டும் வாயினின்றே புறப்படுகின்றன.
15 புறணி சொல்கிறவனும், இரட்டை நாவுள்ளவனும் சபிக்கப்பட்டவர்கள். ஏனென்றால், அவர்கள் சமாதானமுள்ள பலரைக் கலகப்படுத்துவார்கள்.
16 மூன்றாவது நாவு பலரைக் கெடுத்தது@ அவர்களை நாடு நாடாய்ச் சிதறடித்தது.
17 செல்வருடைய பலமான நகரங்களை அழித்தது@ பிரபுக்களுடைய வீடுகளை விழத்தாட்டியது.
18 மக்களுடைய பலமான சேனைகளை ஒழித்தது@ தைரியமுள்ள இனத்தாரை வேரறுத்தது.
19 மூன்றாவது நாவு பலமுள்ள பெண்களை ஓட்டி விட்டது@ அவர்கள் உழைப்புகளின் பலன்களை இழக்கச் செய்தது.
20 அதைப் பார்க்கிறவன் இளைப்பாற்றி அடைய மாட்டான்@ சமாதானம் சொல்லும் நண்பனையும் அடைய மாட்டான்.
21 கசையின் அடி தழும்பை உண்டாக்குகின்றது. நாவின் அடியோ எலும்புகளை ஒடித்து விடுகின்றது.
22 வாள் முனையில் பலர் இறந்தார்கள். தங்கள் நாவினால் மாண்டவர்களோ இன்னும் பலர்.
23 தீய நாவினின்று காக்கப்பட்டவனும், அதன் கோபத்திற்குள் அகப்படாதவனும், அதன் நுகத்தடியை இழுக்காதவனும், அதன் சங்கிலிகளால் கட்டப்படாதவனும் பேறு பெற்றோர்.
24 ஏனென்றால், அதன் நுகத்தடி இரும்பாலானது. அதன் சங்கிலி பித்தளையால் ஆனது.
25 அதனால் வரும் சாவு அவலமானது. இச்சாவை விட நரகம் தாவிளை.
26 அது (தீய நாவு) நீண்ட நாள் நீடிக்காது. அநீதருடைய வழிகளை அடையும். நீதிமான்களைத் தன் நெருப்பால் எரிக்காது.
27 கடவுளை விட்டு விட்டவர்கள் அதில் விழுவார்கள். அவர்களிடம் அது எரியும்@ அவிக்கப்படாது. அது சிங்கத்தைப் போல் அவர்கள் மேல் அனுப்பப்படும்@ வேங்கையைப் போல் அவர்களைக் காயப்படுத்தும்.
28 உன் செவிகளை முட்களால் அடைத்து விடு. தீய நாவைக் கேளாதே. உன் வாய்க்குக் கதவும் பூட்டும் போடு.
29 உன் பொன்னையும் வெள்ளியையும் உருக்கி, உன் வார்த்தைகளுக்கு ஒரு தராசும், உன் வாய்க்குத் தகுந்த கடிவாளங்களும் செய்து கொள்.
30 நாவினால் கெடுத்து உனக்குத் தீங்கு புரியத் தேடும் பகைவர் முன்பாக நீ விழாதபடிக்கும், உன் தாழ்வு தீராமலேயே சாவுக்கு உள்ளாகாதபடிக்கும், அதிக எச்சரிக்கையாய் இரு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, அவன், ஏற்பாடு, நாவு, பழைய, ஏனென்றால், சீராக், மனிதன், மேல், ஆகமம், போல், எரியும்@, பலமான, நாவினால், பலர், அடைய, மூன்றாவது, பலரைக், விட்டு, உனக்குத், ஆன்மிகம், திருவிவிலியம், மன்னிப்புக், கேட்கிறான், விடு, கோபம், மீது, அதனால்