சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 27
2 கற்சுவர் மத்தியில் அடிக்கப்பட்ட முளை போல, விற்றல் வாங்குதல் மத்தியில் பாவம் நிற்கும்.
3 குற்றவாளியோடு குற்றம் தண்டிக்கப்படும்.
4 தெய்வ பயத்தில் நீ உறுதியாய் நிலைத்திராவிட்டால், வெகு சீக்கிரத்தில் உன் வீடு இடிந்து விழும்.
5 சல்லடையில் சலிக்கும்போது உமி நின்று போவது போல, மனிதனுடைய எண்ணத்தில் சஞ்சலம் நின்று போகும்.
6 குயவனின் பாண்டங்களைச் சூளை பரிசோதிக்கின்றது. துன்ப சோதனைகள் நீதிமான்களைப் பரிசோதிக்கின்றன.
7 மரத்தின் கண்காணிப்பை அதன் கனி காண்பிப்பது போல, மனிதன் வாயினின்று புறப்படும் வார்த்தைகள் அவன் மனத்திலுள்ள எண்ணத்தைக் காண்பிக்கும்.
8 பேசுவதற்கு முன்னரே மனிதனைப் புகழாதே. ஏனென்றால், வார்த்தைகளைக் கொண்டு தான் அவனை அறிய வேண்டும்.
9 நீதியைப் பின்பற்றி நடந்தால் அதைக் கைக்கொள்வாய். அது உன்னைப் பரந்த ஆடை போல் போர்த்திக் கொள்ளும். நீ அதனுடன் வாழ்வாய். அது என்றென்றைக்கும் உன்னைக் காக்கும். எல்லாம் வெளியாகும் நாளில் அதை உன் உற்ற துணையாகக் காண்பாய்.
10 பறவைகள் தங்களைப் போன்றவைகளோடு சேர்கின்றன. உண்மையும் தன்னைப் பேணுகிறவர்களிடம் திரும்புகிறது.
11 சிங்கம் இரைக்காக எப்போதும் பதுங்கியிருக்கின்றது. அது போல், பாவங்களும் அக்கிரமங்களைச் செய்பவர்களுக்காகக் காத்திருக்கின்றன.
12 புனிதனான மனிதன் சூரியனைப் போல மாறாமல் ஞானத்தில் நிலைக்கிறான். மூடனோ சந்திரனைப் போல மாறுபடுகிறான்.
13 மூடர் மத்தியில் இருக்கும் போது மௌனம் சாதித்து, காலம் அறிந்து பேசும் அறிவாளிகள் மத்தியில் இருக்க அடிக்கடி நாடு.
14 பாவிகளுடைய பேச்சு பகைக்கத் தக்கது. பாவத்தின் இன்பங்களில் அவர்களுக்கு அக்களிப்பு.
15 அடிக்கடி ஆணையிடுகிறவனின் பேச்சு தலைமயிர் சிலிர்க்கச் செய்கின்றது@ அவனுடைய அவமரியாதை காதுகளை மூடிக் கொள்ளும்படி செய்கின்றது.
16 அகந்தையுள்ளவர்களுடைய சண்டையில் இரத்தம் சிந்தப்படும்@ அவர்களுடைய சாபமோ கேட்பதற்கு அவமானம்.
17 நண்பனுடைய இரகசியங்களை வெளிப்படுத்துகிறவன் நம்பிக்கையை இழக்கிறான். அவன் மனத்துக்கொத்த நண்பனைக் காணமாட்டான்.
18 அயலானை நேசி@ அவனுடன் பிரமாணிக்கமாய் ஒன்றித்திரு.
19 அவன் இரகசியங்களை நீ வெளியாக்கியிருப்பாயானால், அவன் பின் செல்லாதே.
20 ஏனென்றால், தன் நண்பனை இழந்தவன் போலவே தன் அயலானுடைய நட்பை இழந்தவனும் ஆவான்.
21 தன் கையிலிருந்த பறவையைப் பறக்க விட்டவன் போல, நீ உன் அயலானையும் விட்டு விட்டாய்@ அவனை நீ பிடிக்க மாட்டாய்.
22 அவனைப் பின்தொடராதே. ஏனென்றால், அவன் வெகுதூரம் போய் விட்டான்@ கண்ணியினின்று தப்பியோடும் காட்டாடு போல் ஓடிவிட்டான். ஏனென்றால், அவன் ஆன்மா காயப்பட்டது.
23 இனி மேல் அவனை நீ உன் வயப்படுத்துதல் இயலாது. சாபத்திற்குச் சமாதானம் உண்டு.
24 ஆனால், நண்பனுடைய இரகசியங்களை வெளிப்படுத்துவதோ, நற்பேறற்ற ஆன்மாவின் நம்பிக்கைக் கேடு.
25 கண்ணால் சாடை காண்பிக்கிறவன் அநியாயங்களைத் தோற்றுவிப்பான். ஆனால், அவன் மோசக் கருத்திற்குத் தப்பிக் கொள்வார் இல்லை.
26 உன் கண்கள் முன்பாக அவன் வாய் அமுதம் பொழியும்@ உன் பேச்சுகளைப் பற்றி ஆச்சரியப்படுவான். முடிவிலோ அவன் நாக்கு புரளும்@ உன் வார்த்தைகளில் குற்றம் காண்பான்.
27 பலவற்றை நான் பகைத்தேன்@ ஆனால், இதற்கு அவை இணையல்ல. ஆண்டவரும் அவனைப் பகைப்பார்.
28 யாரேனும் ஒருவன் உயரத்தில் கல்லை எறிவானேயானால் அது அவன் தலை மேல் விழுமாப்போல, வஞ்சக துரோகமும் வஞ்சகனைக் காயப்படுத்தும்.
29 படுகுழி தோண்டுகிறவன் அதிலேயே விழுவான். அயலானுக்குப் போட்ட கல்லில் தானே மோதிக் கொள்வான். பிறருக்குக் கண்ணி வைக்கிறவன் தானே அதில் பிடிப்படுவான்.
30 தீய யோசனை செய்கிறவனுக்கு அவன் மீது தானே அந்தத் தீங்கு வரும். அது எவ்விடமிருந்து தனக்கு வருகிறதென்று அவன் அறியான்.
31 செருக்குற்றோரின் வஞ்சகமும் அகந்தையும் அவர்களைப் பழிவாங்கச் சிங்கத்தைப் போலப் பதுங்கியிருக்கும்.
32 நீதிமான்களுடைய தாழ்வைப்பற்றி மகிழ்கிறவர்கள் கண்ணியில் மடிவார்கள். ஏனென்றால், அவர்கள் சாகிறதற்கு முன்பே வருத்தம் அவர்களை விழுங்கி விடும்.
33 கோபம், வெறி இவை இரண்டும் வெறுப்புக்குரியவை. ஆனால், பாவிகளிடம் இவை இரண்டும் உண்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, அவன், ஏற்பாடு, ஏனென்றால், பழைய, மத்தியில், சீராக், தானே, போல், ஆகமம், இரகசியங்களை, அவனை, மேல், அவனைப், உண்டு, திருவிவிலியம், இரண்டும், ஆன்மிகம், நண்பனுடைய, நின்று, குற்றம், அடிக்கடி, பேச்சு, மனிதன்