சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 21
2 பாம்பை விட்டு விலகுவது போலப் பாவத்தை விட்டு விலகு. அவைகளின் அண்மையில் போனாயானால், அவைகள் உன்னைத் தம் வயப்படுத்தும்.
3 சிங்கத்தின் பற்களைப் போல் அவற்றின் பற்கள் மனிதருடைய ஆன்மாவைக் கொலைப்படுத்தும்.
4 எல்லா அக்கிரமங்களும் இரு புறமும் கூர்மையான கத்தி போல் இருக்கின்றன. அதன் காயங்கள் ஆறமாட்டா.
5 நிந்தனையும் அநியாயங்களும் செல்வத்தை அழிக்கின்றன. திரண்ட செல்வமுள்ள குடும்பம் அகந்தையால் கெடும். இவ்வண்ணமே அகந்தையுள்ளவனுடைய சொத்து அழிந்து போகும்.
6 வறியவனது வேண்டுதல் அவன் வாயினின்று கடவுளுடைய செவிகள் வரையிலும் சேரும்@ அவனுக்கு நியாயம் விரைவில் கிடைக்கும்.
7 கண்டனத்தைப் பகைக்கிறவன் பாவியினுடைய காலடியைப் பின்பற்றுகிறான். கடவுளுக்குப் பயந்து நடக்கிறவன் மனந்திரும்புகிறான்.
8 துணிவுள்ளவனுடைய வலுத்த நாவு தூரத்தினின்றே அறியப்படுகின்றது. அறிவாளி அதினின்று தப்பிக் கொள்ளும் வழி அறிவான்.
9 பிறருடைய செலவில் தன் வீட்டைக் கட்டுகிறவன் மாரிகாலத்தில் தன் கற்களை அடுக்குகிறவன் போல் இருக்கிறான்.
10 பாவிகளுடைய கூட்டம் சேர்த்து வைக்கப்பட்ட சிம்புகளைப் போலவும், அவர்களுடைய முடிவோ மூட்டப்பட்ட நெருப்பைப் போலவும் இருக்கின்றன.
11 பாவிகளின் வழி கற்கள் பரப்பப்பட்ட தரையாய் இருக்கின்றது. ஆனால் அவர்களுக்கு முடிவில் நரகம், இருள் ஆகிய தண்டனைகளே இருக்கின்றன.
12 நீதியைக் காப்பாற்றுகிறவன் அதன் நெறியைக் கடைப்பிடிப்பான்.
13 ஞானமும் அறிவும் தெய்வ பயத்தின் பலன்.
14 நன்மையான காரியங்களில் ஞானியாய் இராதவன் உயர்ந்தவனாக மாட்டான்.
15 தீமையிலும் ஒருவித ஞானம் மிகுந்திருக்கிறது. மனக்கசப்பு உள்ள இடத்தில் புரிந்து கொள்ளும் தன்மை இராது.
16 ஞானியினுடைய கலை வெள்ளத்தைப் போல மிகுந்திருக்கும். அவனுடைய யோசனை வாழ்வின் ஊற்றைப் போல நிலைத்திருக்கும்.
17 மூடனுடைய இதயம் உடைந்த பாத்திரத்தைப் போல் இருக்கின்றது. அவன் ஞானத்தை முழுவதும் அடக்கி வைத்திரான்.
18 அறிவுள்ளவன் எந்த ஞானமான வார்த்தையைக் கேட்கிறானோ அதைப் புகழ்ந்து, அதைத் தன்னிடம் சேர்த்துக் கொள்வான். தீநெறியாளன் அதைக் கேட்டால், அது அவனுக்கு விருப்பப்படாது. அவன் அதைத் தனக்குப் பின்னால் எறிந்து விடுவான்.
19 மூடனுடைய உரையாடல் வழியில் பாரமூட்டையைப் போல இருக்கின்றது. ஆனால், அறிவாளியின் பேச்சு விரும்பப்படுகின்றது.
20 விவேகியினுடைய வார்த்தை சபையில் தேடப்படுகின்றது. அவனுடைய வார்த்தைகளை அவர்கள் தங்கள் இதயங்களில் நினைப்பார்கள்.
21 ஞானம் மூடனுக்கு இடிந்து போன வீட்டைப் போல் இருக்கின்றது. அறிவிலியினுடைய கலை விபரீத வார்த்தைகளில் அடங்கியிருக்கின்றது.
22 கால்களில் தடைகளும், வலக் கையில் விலங்குகளும் போல மூடனுக்கு நற்போதனை இருக்கின்றது.
23 மூடன் சிரிக்கையில் உரத்த சத்தம் செய்கிறான். விவேகியோ ஓசைபடாமல் அரிதாய்ச் சிரிக்கிறான்.
24 நன்னெறி விவேகிக்குப் பொன் அணி போலவும், வலக்கையின் காப்புப் போலவும் இருக்கின்றது.
25 மூடனுடைய கால் அயலானுடைய மனையில் எளிதில் புகுகின்றது. ஆனால், பட்டறிவு உடைய மனிதன் பலவானைச் சந்திப்பதற்கு நாணம் கொள்கிறான்.
26 மூடன் சன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப் பார்ப்பான். அறிவுள்ளவனோ வெளியில் நிற்பான்.
27 கதவண்டை ஒற்றுக் கேட்பது மனிதனுடைய மூடத்தனம். விவேகியோ அதை மதிப்புக் குறைவென்று எண்ணுவான்.
28 விவேகமற்றவர்களுடைய உதடுகள் மூடத்தனமான காரியங்களைச் சொல்கின்றன. விவேகிகளுடைய வார்த்தைகளோ தராசில் நிறுக்கப்படுகின்றன.
29 மூடர்களுடைய இதயம் அவர்களுடைய வாயில் இருக்கின்றது. ஞானிகளுக்கோ அவர்களுடைய வாய் இதயத்தில் இருக்கின்றது.
30 பாவி பேயைச் சபிக்கும் போது தன் ஆன்மாவையே சபித்துக் கொள்கிறான்.
31 அவதூறு சொல்கிறவன் தன் ஆன்மாவை அசுத்தப்படுத்துகிறான். அவன் அனைவராலும் பகைக்கப்படுவான்@ அவனுடன் தங்குகிறவனும் பகைக்கு உகந்தவனாவான். ஆனால் மௌனமாய் இருப்பவனும் அறிவாளி என்று மதிக்கப்படுவான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, இருக்கின்றது, போல், ஏற்பாடு, பழைய, அவன், போலவும், அவர்களுடைய, சீராக், இருக்கின்றன, மூடனுடைய, ஆகமம், இதயம், கொள்கிறான், மூடன், மூடனுக்கு, அதைத், விவேகியோ, கொள்ளும், ஆன்மிகம், திருவிவிலியம், விட்டு, அவனுக்கு, ஞானம், அறிவாளி, அவனுடைய