சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 22
2 சோம்பேறி எருதுகளின் சாணத்தால் அடிபட்டவன். அவனைத் தொட்டவன் எவனும் தன் கைகளை உதறுவான்.
3 நெறிகெட்ட மகனால் தந்தைக்கு வெட்கமுண்டாகும். அத்தகைய மகளோ அவமதிப்பிற்கு உள்ளாவாள்.
4 விவேகமுள்ள பெண் கணவனுடைய செல்வம். ஆனால், வெட்கம் கெட்டவளோ தன் தந்தைக்கு அவமானம் வருவிக்கிறாள்.
5 துடுக்குள்ளவள் தந்தையையும் கணவனையும் வெட்கத்திற்கு உள்ளாக்குகிறாள்@ அவள் அக்கிரமிகள் முன்பாகத் தோற்றவள் அல்லள்@ ஆனால், இரு திறத்தாராலும் அவமதிக்கப்படுவாள்.
6 சமயத்திற்குப் பொருந்தாத உரையாடல் துக்க வீட்டில் பாடுவது போலாகும். ஆனால், ஞானமோ எப்போதும் தண்டனையையும் போதனையையும் பயன்படுத்துகின்றது.
7 மூடனுக்கு அறிவுரை கூறுபவன் உடைந்து போன ஓடுகளை ஒட்டுகிறவன் போலாம்.
8 செவிகொடாதவனிடம் பேசுகிறவன் ஆழ்ந்த தூக்கத்தில் அயர்ந்து கிடப்பவனை எழுப்புகிறவன் போலாம்.
9 மூடனுக்கு ஞானத்தைப் போதிக்கிறவன் உறங்குகிறவனோடு பேசுகிறான். பேச்சு முடிவில் அவன் உன்னை நோக்கி: இவன் யார் என்பான்.
10 இறந்தவனைப் பற்றிக் கண்ணீர் விடு@ ஏனென்றால் அவனுடைய ஒளி அவிந்து போனது. மூடனைப் பற்றி அழு@ ஏனென்றால், அவன் அறிவு அற்றுப் போனது.
11 இறந்தவனைப்பற்றிக் கொஞ்சமாய் வருத்தப்படு@ ஏனென்றால், அவன் இளைப்பாற்றி அடைந்தான்.
12 ஆனால், நெறிகெட்ட மூடனுடைய வாழ்க்கையோ மரணத்தை விட மிகக் கெடுதியாய் இருக்கின்றது.
13 இறந்தவனுடைய துக்கம் ஏழு நாள் வரைக்குமே@ மூடனுடையவும் அக்கிரமியினுடையவும் துக்கமோ அவர்கள் வாழ்நாட்களெல்லாம்.
14 மூடனோடு அதிகமாய்ப் பேசாதே. அறிவற்றவனோடு சேராதே.
15 உனக்கு இடையூறு உண்டாகாதபடி அவனிடமிருந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்@ அவன் பாவத்தால் நீ அழுக்கடையமாட்டாய்.
16 அவனை விட்டு அகன்று போனால், நீ கலக்கமற்றவனாய் இருப்பாய்@ அவன் மூடத்தனத்தால் நீ துன்பம் அடையமாட்டாய்.
17 ஈயத்தை விட அதிகக் கனமானது என்ன? மூடன் என்பதை விட அவனுக்கு வேறு பெயர் என்ன?
18 விவேகமற்ற மனிதனையும் மூடனையும் அக்கிரமியையும் சகிப்பதை விட, மணலையும் உப்பையும் இரும்புத் துண்டையும் அதிக எளிதாய்ச் சுமக்கலாம்.
19 ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் ஒன்றாய்க் கட்டிப் போடப்பட்ட மரக்கட்டு அவிழ்ந்து போவதில்லை. அவ்வண்ணமே, நல்ல யோசனையின் எண்ணத்தில் உறுதிப்பட்ட இதயமும் தளர்ந்து போகாது.
20 அறிவாளியின் மனவுறுதி எக்காலத்திலும் அச்சத்தினால் அசைக்கப்படாது.
21 ஆனால், உயரமான இடத்தில் கட்டப்பட்ட பலகையும், வேகாத செங்கல்லாலான சுவரும் கொடுங் காற்றின் முன் எப்படி நில்லாதோ,
22 அப்படியே மூடனுடைய கோழை மனம் கொடிய அச்சத்தால் அசைக்கப்படும்.
23 மூடனுடைய கோழை மனம் எப்பொழுதும் காரணமில்லாமல் அஞ்சிக்கொண்டிருக்கும்@ அதற்கு மாறாகக் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவன் நியாயத்தோடு அஞ்சி நடப்பான்.
24 கண்ணைக் குத்திக் கொள்கிறவன் கண்ணீர் வரச் செய்கிறான். அது போலவே, இதயத்தைக் குத்துகிறவனும் துன்பத்தை உண்டாக்குகிறான்.
25 பறவைகளின் மேல் கல்லெறிகிறவன் அவைகளை ஓட்டி விடுகிறான். அது போலவே, நண்பனை நிந்திக்கிறவனும் நட்பை ஒழித்து விடுகிறான்.
26 நண்பனுக்கெதிராக நீ கத்தி உருவியிருந்த போதிலும், அவநம்பிக்கைப்படாதே@ ஏனென்றால், நட்பு திரும்பவும் உண்டாகலாம்.
27 துன்பமும் வருத்தமும் தரும் வார்த்தைகளை நண்பனுக்குச் சொல்லியிருந்தாலும், அஞ்சாதே@ ஏனென்றால், மீண்டும் சமாதானம் ஏற்படலாம். ஆனால், மானக்குறைவான பேச்சுகள், அவதூறு, அகந்தை பாராட்டுதல், இரகசியங்களை வெளிப்படுத்தல், கபடான தந்திரங்கள்- இவைகளை- நேரவிட்டிருந்தால், நண்பன் உன்னை வெறுத்து விலகுவான்.
28 உன் நண்பனுக்கு உண்டாகும் செல்வாக்கில் அவனோடு மகிழ்ச்சி அடையும்படியாய், அவன் வறுமையிலும் அவனிடம் பிரமாணிக்கமாய் இரு.
29 அவனுடைய துன்ப காலத்திலும் அவனிடம் பிரமாணிக்கமாய் நிலைத்திரு@ அவன் மகிழ்ச்சிக்கும் பங்காளியாவாய்.
30 காளவாய் நெருப்புக்கு முந்தி ஆவியும், நெருப்பு காணப்படுமுன் புகையும் எழும்புவது போல், இரத்தப் பழிக்கு முன் சாபங்களும் நிந்தைகளும் அச்சுறுத்தல்களும் உண்டாகும்.
31 நண்பனுக்கு மரியாதை செய்ய நான் கூச்சப்பட மாட்டேன்@ அவனுக்கு முன்பாக நான் ஒளிந்து கொள்ள மாட்டேன். அவன் பொருட்டு எனக்கு நட்டமுண்டானாலும் அதை நான் பொறுத்துக் கொள்வேன் என்று,
32 சொல்லக் கேட்கிற எவனும் அவன் காரியத்தில் எச்சரிக்கையாய் நடந்து கொள்வான்.
33 என் வாயால் எனக்கு நட்டம் வராதபடிக்கும், என் உதடுகள் உரைக்கும் வார்த்தைகளில் நான் சிக்கிக் கொள்ளாத படிக்கும், என் வாய்க்குக் காவலும், என் உதடுகளுக்கு உடைபடா முத்திரையும் போடுகிறவன் யார்?
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, அவன், ஏனென்றால், ஏற்பாடு, பழைய, நான், ஆகமம், மூடனுடைய, சீராக், கோழை, முன், அவனுக்கு, என்ன, மனம், உண்டாகும், பிரமாணிக்கமாய், எனக்கு, அவனிடம், நண்பனுக்கு, விடுகிறான், போலவே, கண்ணீர், அடிபட்டவன், எவனும், சோம்பேறி, ஆன்மிகம், திருவிவிலியம், நெறிகெட்ட, தந்தைக்கு, யார், அவனுடைய, உன்னை, போலாம், மூடனுக்கு, போனது